Posts

Showing posts from February, 2008

அதை அதுவாக 2 (தேர்ந்த குறள்கள்)

அதை அதுவாக (3) அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (பாயிரம், அறன்வலியுறுத்தல் 7) குறள் 37 சிவிகையைத் தாங்கியும், அதில் ஏறிச்செல்லும் நிலைமைகளிலும் உள்ளவர்களிடம் அறத்தின் பயன் இதுவெனக் கூறவேண்டாம். 00 டாக்டர் மு.வரதராசனும் தன் ‘திருக்குறள் தெளிவுரை’யில் மேற்கண்டவாறே பொருள் சொல்லியிருக்கிறார். அறம் செய்வதனாலாகும் பயனை அதில் ஊர்பவனைக்கொண்டும், அறம் செய்யாததனாலாகும் தீங்கை அதைச் சுமந்து செல்பவனைக்கொண்டும் அறியலாம் என்பார் நாமக்கல் கவிஞர். இவற்றைக்கொண்டு அளவிட்டுவிடக்கூடாது என்பார் தமிழண்ணல். பசியோடு இருக்கும் ஒருவனிடத்தில் உபதேசம் செய்யாதே என்றார் சுவாமி விவேகானந்தர். பசித்தவனுக்குத் தேவை உணவு. அதனால் சிவிகை சுமக்கும் அந்த வறியவனுக்குப் போதனை செய்யாதே என்று வள்ளுவன் சொன்னதாகக் கொள்ளலாம். சிவிகையிலூர்பவனும் உபதேசத்தைக் கேட்கமாட்டான். ஏனெனில் அவன் மமதையிலிருப்பான். பல்லக்கூர்தல் எவராலும் செய்யப்பட்டுவிடக் கூடியதல்ல. அரசர், அரச சுற்றம், மந்திரி, பிரதானிகள், வணிகர், அறிவோர் என்று சமூக அந்தஸ்துள்ளவர்கள் மட்டுமே பல்லக்குப் பாவிக்கும் தத்துவம் பெ

ஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..

ஷோபாசக்தியின் கதைப் புத்தகம்  'ம்' குறித்து... ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த கொரில்லா நாவலுக்கும், சென்ற ஆண்டு வெளிவந்த ‘தேசத்துரோகி’ சிறுகதைத் தொகுப்புக்கும் பின்னால் வெளிவந்திருக்கிற கதைப் புத்தகம் ஷோபாசக்தியின் ம். பெரிய எதிர்பார்ப்புக்களை விளைவித்ததோடு அடங்கிப் போய்விட்ட ஒரு நூலாகவே இது எனக்குத் தெரிகிறது. ஒரு  ஏமாற்றத்தையே நான் உணர்ந்தேன் என்பது மிகையான பேச்சில்லை. கொரில்லா பாதித்ததில் பாதியளவுகூட ம் செய்யவில்லையென்பதைச் சொல்லித்தானாக வேண்டியிருக்கிறது. மொழியும், மரபும் மீறியெழும் இவ்வகையான நவீன பிரதிகளையும் ஒழுங்கான ஆய்வுக்குட்படுத்த முடியும். ஆசிரியன் இறந்துவிட்டானென்பது ஆசிரியனின் பிரதிகுறித்த தலையீடு .இருக்கக்கூடாது என்பதுமாகும். ஆனால் அவனின் ஏனைய பிரதிகள் உடன்மறையாகவும் எதிர்மறையாகவும் இங்கே விவாதத்துக்கு வருவதும் அவற்றின் அடிப்படையில் விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் விமர்சன உரிமைகளாகும் என்பது அதனடியாய்க் கொள்ளக்கூடிய இன்னொரு கருதுகோள்தான். சமகால வேறு நூல்களையும் விமர்சகன் அலசிக்கொண்டு போவதுகூட இங்கே தவிர்க்க முடியாதபடி நிகழவும் முடியும்

மு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'

'மீண்டும் வரும் நாட்கள்' கவிதை நூல் குறித்தும் விமர்சன அரங்கு குறித்தும் 'மீண்டும் வரும் நாட்க'ளின் மீதான விமர்சன அரங்கு 05-06-2005 இல் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. அன்றைய மாலையில் அதைத் தொடர்ந்து சுமதி ரூபனின் யாதுமாகி நின்றாள் கதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் இடம்பெற்றது. விமர்சன அடிப்படையில் அச்சொட்டாக மட்டுமே கருத்துக்களை என்னால் அங்கு முன்வைக்கக்கூடியவளவான கால அவகாசமே தரப்பட்டிருந்தேன். அந் நூல் குறித்து மேற்கொண்டும் விவாதிக்க நிறைய விஷயங்கள் இருந்தபோதும், உடன் மறையாகத்தான், காலம் கருதியே அதை நான் தவிர்க்க நேர்ந்தது. அவைபற்றியெல்லாம் கட்டுரையாக எழுத எண்ணம் கொண்டிருந்தேன். காலம் இழுபட்டுப் போனது. அதற்கிடையில் மு.புஷ்பராஜனின் எதிர்வினை பதிவுகளில் வந்திருக்கிறது. நல்லது. புதிவுகளில் வரும் தேவகாந்தன் பக்கத்துக்கு நீண்ட நாட்களாக எழுதவில்லை என்ற என் மன உறுத்தல் இத்தோடு தீர்ந்ததாக ஆகட்டும். இந் நூல் குறித்து அன்று நான் வெளியிட்டதில் இரண்டாம் அபிப்பிராயம் என்னிடத்தில் இல்லை. ஆனாலும் சிலவற்றுக்கான விரிவுகள் அவசியமென்றே இப்போது படுகிறது. குறிப்பாக பு

அதை அதுவாக 1 (தேர்ந்த குறள்கள்)

திருக்குறளைச் சங்க மருவிய காலத்ததென்று தமிழிலக்கிய வரலாற்றாசிரியர்கள் வரையறை செய்துள்ளார்கள். அதைச் சங்க காலத்தது என எண்ணியிருந்த சிறுவயதுக் காலத்திலிருந்தே அதன்மீது காரணமறியாப் பிடிப்பிருந்தது என்னிடத்தில். அதை நீதி நூலென்று அறிந்திருந்த போதும்தான் அப் பற்று. அதனால்தான் 1965இல் பண்டிதர் கா.பொ.இரத்தினத்தின் திருக்குறட் சங்கம் கிளிநொச்சியில் நடாத்திய திருக்குறள் மகாநாட்டுக்கு சாவகச்சேரியிலிருந்து முப்பது கல் தூரத்தைச் சைக்கிளில் சென்றுசேர்ந்து கண்டும் கேட்டும் மகிழமுடிந்திருந்தது. அதை மேலும் வளர்ப்பதுபோல்தான் என் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் திருக்குறள் அறத்துப்பாலின் முப்பது அதிகாரங்கள் இடம்பெற்றிருக்க, அவற்றையும் விருப்பத்தோடு கற்றுத் தீர்த்தேன். அதனால் பரிமேலழகர், இளம்பூரணர் உரைகள் தொடங்கி, நாமக்கல் கவிஞர், மறைமலை அடிகள் உரைகள் ஈறாக, பின்னால் டாக்டர் மு.வரதராசன், சுஜாதா, சிற்பி, சாலமன் பாப்பையா உரைகள்வரை தேடிப் படிக்கும் பழக்கம் எனக்கு வசமாகிப்போனது. இலக்கிய உலகில் திருக்குறள் இலக்கியமா, நீதி நூலா என்ற வாதப் பிரதிவாதங்கள் தீர்க்கப்படாதிருந்தபோதும

சிதைவும் கட்டமைப்பும்:1 (தமிழகத்து அனுபவங்கள் குறித்தான ஒரு இலக்கிய விசாரணை)

தேவகாந்தன் (1) இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் எனது ‘கதா காலம்’ என்னும் மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளிவந்ததிலிருந்து, அதை வாசித்த என் நண்பர்களும் வாசகர்களும், ‘கதா காலம்’ இதுவரை வெளிவந்த, குறிப்பாக கதாகாலத்துக்கு முன் வெளிவந்த ‘யுத்தத்தின் முதலாம் அதிகார’த்தைவிடவும்கூட, தன் நடை போக்குகள் போன்றனவற்றிலிருந்து வெகுவான மாற்றம் கொண்டிருப்பதாகச் சுட்டிக் கூறிவருகின்றனர். அது மெய்யெனவே இப்போது நினைக்க எனக்கும் தோன்றுகிறது. சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் எழுத்தாளர் ஒன்றிய மண்டபத்தில் காலஞ்சென்ற செம்பியன்செல்வன் தலைமையில் காலஞ்சென்ற நந்தி உட்பட அ.யேசுராசா, சட்டநாதன் போன்றோர் கலந்துகொண்ட எனது ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம்’ நாவல் விமர்சனக் கூட்டத்தில், அந் நாவல் ஈழத் தமிழ் நாவல் வரலாற்றில் கொண்டிருக்கும் அதிகாரம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதில் ஆளப்பட்டிருந்த சொல்லின் செறிவுபற்றியும், நடையின் வீச்சுப் பற்றியும், அதன் மய்யமழிந்த கதைகூறும்; பண்பு பற்றியும் யாழ். கூட்டத்தில் சட்டநாதன் உட்பட, கொழும்பு ராமகிரு~;ண மண்டபத்தில் அதன் வெளியீட்டாளர்கள் பூபாலசிங்

ஒரு நாடகத்தின் உயிர்ப்பு

 பா.அ.ஜயகரனின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ நாடக அளிக்கை குறித்து -தேவகாந்தன்- ஆனி மாதத்தின் 3ஆம் 4ஆம் தேதிகளில் யோர்க் வுட் நூலக தியேட்டரில் காட்சியாக்கப்பட்டது நாளை நாடக அரங்கப் பட்டறையின் ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’. சுமதி ரூபனின் உயிர்ப்பு நாடகப் பட்டறையினதும், மனவெளி நாடக அரங்கத்தினரதும் அளிக்கைகளில் குறிப்பிடக்கூடிய ஓரிரு நாடகங்களுக்குப் பிறகு மேடையேறியுள்ள ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ முக்கியமான நிகழ்வெனவே தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த பிரக்ஞையும், அதன் காரணமாய் மேடை அளிக்கைகளைத் தவற விட்டுவிடாத அனுபவங்களின் பின்னணியிலும்கூட இந் நாடகம் குறித்துச் சொல்ல நிறையவே உண்டு. ஒரு நாடகத்தின் ஆதார சுருதியாயிருந்து அதன் வலிமை, வலிமையின்மைகளைத் தீர்மானிப்பது அதன் பிரதியாக்கமாகும். ப.அ.ஜயகரனின் முதல் வலிமை அதன் பிரதியாக்கத்தினூடாக வந்து சேர்கிறது. நாடகத்தைப் பார்த்த பிறகு அதன் பிரதியையும் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததன் மூலம் இந்த முடிவுக்கு என்னால் சுலபமாக வர முடிந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொல் சிக்கனமாகப் பிரயோகிக்கப்பட்டு இப் பிரதி ஆக்கம் கண்டி

மரபு கலைத்தெழுந்து.....

நிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீடு புலம்பெயர் புலத்தில் கவிதை பேசப்பட்ட அளவு சிறுகதையோ, நாவலோ பேசப்படவில்லையென்பது மிகவும் சரியான வார்த்தையென நினைக்கிறேன். கவிதை தனக்காக எடுத்துக்கொண்ட தீவிரத் தளம் அந்த நிலைமைக்கான காரணமாகவும் இருக்கலாம். ‘கொரில்லா’வும் ‘வெள்ளாவி’யும் ஓரளவு நன்கு பேசப்பட்ட  நாவல்களேயெனினும், அத்துறையில் போதுமான ஆக்கங்கள் வெளிவந்தனவெனக் கூறமுடியாதே உள்ளது. புலம்பெயர் வாழ்வின் இயங்குநிலை சார்ந்த விஷயமாக இதைக் கொள்ள முடியும். இத்தகு இயங்குதளத்தில் உரைநடை சார்ந்து கருத்து வெளிப்பாட்டுக்கான வடிவமாக இருப்பது சிறுகதை. இருந்தும் வேற்றுப் புல வாழ்வின் அவதி, பிற பண்பாட்டுக் கலப்பின் முறைமைகள், ஏகாதிபத்தியப் பெருவெடுப்பில் இனங்கள், தொழிலாளர், பெண்கள், பாலியல் தொழிலாளர், ஒருபாலின கலவியாளர், குழந்தைகள் ஆகியோரின் நிலைமைகள் பேணப்படாமை, சுற்றுச் சூழல் மாசுப்பாடு, வனவழிப்பு என பெருகும் ஆகக்கூடிய கவலைகள்கூட எடுபொருளாகாதிருக்கின்றன. மனிதன் பிறரைத் தின்று கொழுப்பதான வாழ்வியல் நிலை மாறி, தன்னையே மெல்லமெல்லத் தின்றுகொண்டிருப்பதான மிகவும் மோசமான நிலைமை இன்ற

பின்னல் பையன் 2

தேவகாந்தன் முதலில் விழித்தது அவள்தான். எழுந்து இன்னும் இருட்டு தடிப்பாயே இருப்பதைப் பார்த்துவிட்டு மீண்டும் அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். சூழலில் கவிந்துவந்த குளிருக்கு அவனின் தோளின் கதகதப்புக்கூட மறுபடி பேருறக்கத்தில் ஆழ்த்தவில்லை அவளை. கண்களை மூடி,  உடம்பை உளைவெடுத்து முறுகிக்கொண்டு கிடக்க விழித்த அவன்,  'இன்னும் விடியவில்லையா ? ' என்று கேட்டான் கோணல்மாணல் குரலில். அவள் இல்லையென்றாள் . அவன் அவளின் நெஞ்சுகள் உறுத்தும்படி இறுக அணைத்து காற்று ஊடறுக்கா நெருக்கமடைந்தான். ஆசைகளும் துடித்தெழாமல், தூக்கமும் வராமல் ஒரு புதிய சூழ்நிலைமையை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்க, வெளியில் கிளரும் மெல்லிய பேச்சரவங்கள், நடையொலிகள் செவியில் விழுந்தன. குழந்தையொன்று பசித்தழுதது. பசுக் கன்றுகள் ஆட்டுக் குட்டிகள் கட்டில் நின்று தாய் முலை தேடித் தவித்துக் கத்தின. கோழிகள் கூவாமலே கூரையில் குதித்திறங்கி கொக்...கொக்...கொக்கென்று புறுபுறுத்தபடி இரை தேடின. அவன் குழம்பியவனாய் எழுந்து வெளியே வந்தான். கூட அவளும். அப்படி ஓர் அப்பிய இருட்டை தம் வாழ்நாளில் பார்த்திராத அவர்கள், பக்கத்தில் எதிரில்

சமூகமும் கலையும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கட்டுரைக்கான எதிர்வினை -தேவகாந்தன் எம்.எஸ்.எஸ்.பாண்டியனின்  கட்டுரையானபடியாலேயே சிவாஜி படம் குறித்த வைகறையில்  வெளிவந்த  மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு இந்த எதிர்வினையை எழுதவேண்டி நேர்ந்தது. நான் சிவாஜி படம் இதுவரை பாரக்கவில்லை. தமிழ்ப்படங்களை திரையரங்கு சென்று பார்த்து வெகுகாலம். பார்த்த சிலவும் புலம்பெயர்ந்தவர் படங்களே. சிவாஜி படத்தைப் பார்க்காமலேகூட பாண்டியனின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினையை எவராலும் ஆற்றிவிட முடியும். ஏனெனில் அது சமூகமும் சினிமாவும் என்ற தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கட்டுரை. சிவாஜி படம் பார்த்ததில் மிகவும் பரவசப்பட்டுப்போய் பாண்டியன் எழுதியிருக்கிற கட்டுரை அது. ஏதோ, ரஜினி கோயில் வீதியில் அல்லது தெருவில் கூத்தோ தெருநாடகமோ போட்டமாதிரியும், அதை மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ரசித்த மாதிரியும் அளந்துகொட்டியிருக்கிறார். சொல்லப்போனால் அதை ஷங்கர் படம் என்றுகூடச் சொல்லலாம். இன்னும் ஏவிஎம்’மின் படம் என்று சொன்னாலும் தகும். இதற்கெல்லாம் ஒரு எதிர்வினையை ஆற்றவேண்டியது துரதிர்ஷ்டமேயானாலும், இதுமாதிரிக் கட்டுரைகளும், இதுமாதிரி மொழிபெயர்ப்பு மு

படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்

படைப்பினூடாக படைப்பாளியை  அறிதல் : மு.த.வின்  படைப்புக்கள்   குறித்து  ஈழத் தமிழிலக்கியத்தில் மு.த. என அழைக்கப்படும் மு.தளையசிங்கத்தின் இடம் நாற்பதாண்டுகளின் முன்னாலேயே வாசகப் பரப்பில் நிர்மாணம் பெற்றுவிட்டது. ஆனாலும் அது ஈழத்து இலக்கிய வரலாற்றில் போதுமான அளவு பதிவாகவில்லையென்பது தீவிர இலக்கிய வாசகர்களிடையே கடந்த சில பத்தாண்டுகளாக நிலவி வரும் மனக்குறையாகும். ஒருவகையில் மு.த.வின் பெயர் ஓர் இருட்டடிப்புக்கு உள்ளாகும் நிலைமையையும் அடைந்து கொண்டிருப்பதாய் அவர்கள் கருதினார்கள். இதற்கெதிரான முன்முயற்சிகள் சிறுபத்திரிகைகள் அளவிலேயே முதன்முதலில்  மேற்கொள்ளப்பட்டன. ‘அலை’ பத்திரிகை இதை பலதடவைகளில் முன்மொழிந்திருக்கிறது. அதன் ஆரம்ப கால ஆசிரியர்களில் ஒருவரான அ.யேசுராசா காட்டிய அக்கறை இவ்விஷயத்தில் முக்கியமானது. இவரே மு.த.வின் எழுத்துக்களை முதன்முதலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். இது நடந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். அதன் உடனடியாக சுந்தர ராமசாமியும் மு.த.வின் எழுத்தாளுமை குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அது அவர் ஆசிரியராக இருந்த காலாண்டிதழ்க் ‘காலச் சுவடு’ இதழில் வந்தது என

நம்பிக்கைகளும் நம்பிக்கையீனங்களும்

கனடாத் தமிழ் நாடக அரங்கு (2007) குறித்த ஒரு கண்ணோட்டம் ----------------------------------------------------------------------------------------------------------------- -தேவகாந்தன்- மனவெளி கலையாற்றுக் குழுவினரின் 14வது அரங்காடல் கடந்த ஜூலை 2007 இல் நடந்து முடிந்திருக்கிறது. இவ்வாண்டு மார்ச் 24இல் நடைபெற்ற உயிர்ப்பு, மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் நடைபெற்ற கருமையம் ஆகியவற்றின் நிகழ்வுகளையும் ஒரு பார்வையில் அலசுவதின் மூலம் தற்போதைய கனடாத் தமிழ் நாடக அரங்கு குறித்த என் அபிப்பிராயங்களை முன்வைப்பதே இக் கட்டுரையின் நோக்கம். இது கசப்பாக, உவப்பாக எப்படியிருப்பினும், உண்மையின் வீச்சுடன் அபிப்பிராயங்களைச் சொல்லவேண்டிய தருணமிது. அதுவே கனடாத் தமிழ் நாடக அரங்கின் எதிர்கால முன்னெடுப்புக்கள் சீரியதாக அமைய வாய்ப்பாகும் என்பது என் நம்பிக்கை. (1) தோற்ற மயக்கம், அடையாளம்1, அணங்கு, அடையாளம்2 ஆகிய நான்கு அளிக்கைகளிலும் அணங்கு தவிர்த்து பேசப்படுவதற்கான எதனையும் உயிர்ப்பு நாடக அரங்கப்பட்டறை சமர்ப்பித்துவிடவில்லை. அடையாளம்2 ஒரு கட்டுரையை நடித்தல்போல் அவ்வளவு உணர்ச்சியின்றி இருந்தமை கவனி

மறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும் வெளியாகும் விவகாரங்களும் மீதான

சுயாதீன கலைப் பட இயக்கத்தினரின் ஐந்தாவது தமிழ்க் குறுந்திரைப்பட விழா அண்மையில் கனடா, ரொறன்ரோ ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. பதினாறு படங்கள் திரையிடப்பட்டன. நெறியாளர்கள் சந்திப்பு உட்பட சுமார் எட்டு மணி நேரமும், பின்னால் பரிசு அறிவிப்புக்கள், பரிசளித்தல்கள், உரை நிகழ்வுகளென்று சுமார் இரண்டு மணி நேரமுமாக ஒரு நீண்ட வெளியில் நடந்து குறுந்திரைப்பட விழா முடிந்துள்ளது. நல்லது. பத்து மணிநேர அவ் விழாவில் பார்வையாளன் பெற்றதென்ன? இக் கேள்வி மிக முக்கியமானது. ஏனெனில் இது விழா அமைப்பாளர்களின் செயற்பாட்டுத் திறன் முந்திய போதுகளைவிட பெருகியிருந்தும் பார்வையாளன் பலனற்றுப் போனான் என்பது சிந்திக்கவேண்டிய விஷயம். கனடாவிலிருந்து அதிகமான குறுந்திரைப்படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. போட்டிக்காகத் தயாரிக்கப்பெற்று அவசர அவசரமாக கொட்டுண்ட குறும்படங்கள் அவையென்பது கடந்த சில விழாக்களையேனும் உன்னிப்பாய்க் கவனித்திருபோருக்குப் புலப்பட்டிருக்க முடியும். கமரா தொழில்நுட்பம் தவிர்ந்து வேறெந்த துறையிலும் ஒரு முன்னேற்றத்தையும் பார்வையாளன் கண்டிருக்க வாய்ப்பில்லை. என்னளவில் சென்ற ஆண்டைவிட தரம்குறைந்த படங்

‘துயருறுத்தற் பொருட்டன்று…’

ஆறாவது சர்வதேச குறுந் திரைப்பட விழா 2007, ரொறன்ரோ -தேவகாந்தன் கடந்த ஐப்பசி மாதம் 20 ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது, ரொறன்ரோ 6வது சர்வதேச குறுந் திரைப்பட விழா. ‘எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்’ என்ற கோஷத்தோடு கடந்த ஆறு ஆண்டுகளாய் விடாமுயற்சியோடு செயலாற்றி வரும் சுயாதீன கலைப்பட இயக்கத்தினருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்கொள்ள வேண்டும். இனியும் அவர்களது முயற்சி தொடர வாழ்த்துக்களோடு குறுந்திரைப்பட விழாவில் திரையிடப்பெற்ற படங்களின் தாரதம்மியத்தைப் பார்க்க இனி முற்படுகின்றேன். குடைஅ Cinema என்ற ஆங்கில வார்த்தைக்கான பதமாக திரைப்படம் என்ற சொல் தமிழில் வழக்கத்தில் இருக்கின்றது. அதேவேளை சினிமா என்ற சொல்லும் புழக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் போலத்தான். காமம் என்ற சொல் அதீத சுகவிழைச்சலை மய்யப்படுத்தும் அர்த்தவாக்கம் வழக்கத்தில் இருந்தாலும், ‘மலரினும் மெல்லிது காமம்’ என்ற குறளடியில் வரும் சொல்லுக்கான அர்த்தத்தை உன்னதமாகக் கொள்ளும் புரிதலும் நம்மிடம் உண்டு. இந்த இரண்டு காமங்களையும் யாரும் குழப்பிக்கொள்வதில்லை. இந்த அறிதல் திரைப்படத்தையும், சினிமாவையும் புரிந்துகொள்ள மிக்க அவசியம்.