Posts

Showing posts from 2009

இனியும், தமிழர் அரசியலும்

வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்துகொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வராலாறு திரும்பத் திரும்ப ‘போல’ வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும், 2009இல் பெரிய அழிவோடும், முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்கமுடியும். சற்றொப்ப இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாங்களில் படும் அவஸ்த்தைகளை தினமும்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்துகொண்டிருக்கிறது. இதற்கும் மேலாக ஐம்பதினாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், ஆண்களாக கொலைப்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்கும் மேலான துயரத்தை விளைப்பது. மட்டுமா? ஒரு நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட முடியாத பொருளாதார, கல்விப்புல, ஆள்புல இழப்புக்கள் நேர்ந்துள்ளதை எந்த இழப்புக் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்பது புரிபடவேயில்லை. ஆக, திரும்பத் திரும்ப வரும் இந்த அழிச்சாட்டியங்களுக்;கான ஒரு தவறு தமிழர் அரசியலில் ஆரம்ப காலம்தொட்டு இருந்து வந்திருப்பதைய

கலாபன் கதை 6

என்னைக் கடிப்பாயா? நள்ளிரவிலும் சூரியன் எறித்திருக்கும் நாடு என்று அறியப்பட்டிருந்த சுவீடன்பற்றி பெரிதாக எதையும் அறிந்திருக்கவில்லை கலாபன். அது ஒரு வட அய்ரோப்பிய நாடு, குளிர் கூடிய தேசம், மிக்க பரப்பளவில் அதிகுறைந்த ஜனத் தொகையைக் கொண்டிருந்த பூமி என்பதும், அதன் அரசியலானது முடியின் அதிகாரம் கூடியதாகவும், அவ்வப்போது அதிகாரம்பெற்ற நாடாளுமன்றம் சில ஜனநாயக உரிமைகளை மக்களுக்காகப் பெற்றுக்கொடுத்தது என்பதும், இன்றும் வடஅய்ரோப்பாபோல் மானுட ஜனநாயக உரிமைகளை நிகராகப் பெற்றில்லாதது என்பதும், இதுவும் டென்மார்க், நோர்வே போன்ற முக்கியமான வடஅய்ரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஸ்கந்திநேவியா என அழைக்கப்பட்டன என்பதும் மட்டுமானவை அவன் கல்லூரியிலும் நூலகத்திலும் படித்தும் வாசித்தும் அறிந்திருந்தான். ஸ்கந்திநேவியாவின் பத்தாம் நூற்றாண்டளவிலான வைக்கிங் எனப்பட்ட கடல் மறவக் கொள்ளையர்பற்றி அண்மைய சினிமாக்களில்தான் அறிந்தான். இவையெதுவும் அவனது மனத்துக்குள் கிடந்து துடித்துக்கொண்டிருந்த ஆசையின் தவிப்பில், பெரிதாகக் கிளர்ந்தெழாத அம்சங்களாகவே இருந்தன. மேலும் தெரிந்துகொள்வதற்கிருந்த சூழ்நிலைமைகளையும் அந்த ஆசையானது

கலாபன் கதை 5

இருள் அசைந்து உள்ளே நகர்ந்தது கலாபன் தன் விடுப்பு முடிந்து மறுபடி கப்பலுக்கு வந்தாகிவிட்டது. அது அவன் முன்பு வேலைசெய்த அதே கப்பல் அல்லவெனினும், எழுபதுகளில் ஜேர்மனியில் கட்டப்பெற்ற ஓரளவு நல்ல நிலையிலிருந்த கப்பல். அவன் ஏற்கனவே கப்பல் அனுபவம் வாய்த்திருப்பதறிந்த இரண்டாம் நிலைக் கப்பல் என்ஜினியர் காலை நான்கு-எட்டு மணிவரையான வேலைநேரத்துக்கு அவனை எடுத்துக்கொண்டான். என்ஜின் அறையிலுள்ள எந்திரங்களின் செயற்பாடுபற்றிய தொழில்நுட்ப அறிவினை ஓரளவு பெற்றிருந்த கலாபனுக்கு, புதிய கப்பலில் வேலைசெய்வது அப்படியொன்றும் கடினமானதாகத் தெரியவில்லை. அவன் கப்பலில் சேர்ந்த மூன்றாவது நாள் கப்பல் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு பாகிஸ்தானில் கராச்சி துறைமுகத்தைநோக்கி தன் பயணத்தைத் தொடக்கியது. எல்லோரும் நட்பாளர்களாக, பழக்கத்துக்கு இனியவர்களாக இருந்தாலும் கப்பலில் அவரவரும் பெரும்பாலும் தனித்தனி உலகம்தான். ஒரு மகிழ்ச்சி, ஒரு துக்கம் என்று எதுவிதமான குடும்பம் சார்ந்த காரியமும் உடனுக்குடன் அறிய வாய்ப்பில்லாத தொழில் அது. வெளிநாட்டு மண்ணில் வேலை செய்கிற ஒருவன், தன் தாய் அல்லது தந்தை அல்லது மனைவியரின் மரணத்துக்கு ஒர

கலாபன் கதை 4

இந்தியாவே கடலால் விழுங்கப்பட்டதுபோல்.. கஷ்ரங்களின் ஒவ்வொரு முடுக்கிலும் அவள் புன்னகையுடன் நின்று அவனை பித்தேற்றிக்கொண்டிருந்தாள். அந்த அழகும், அளவுகளும், குறுஞ்சிரிப்பும் அவனடைந்த உடல் மன வாதைகளையெல்லாம் ஆவியாய்க் கரைய வைத்தன. அவளையே உரித்துக்கொண்டு பிறந்திருந்த குழந்தைவேறு அவனது தொடரும் வாழ்வுக்கான புதிய அர்த்தம் சொல்லி குமிழ்ந்தெழும் சிரிப்புகளுக்குள் அவனை கிறங்கி நடக்கவைத்துக் கொண்டிருந்தது. க~;ரமென்பது உறுதலில் அடையப்படுவதில்லை. அதற்கொரு உளவியல் இருக்கிறது. க~;ரத்தை க~;ரமாக நினைக்காவிட்டால், க~;ரமென்பது க~;ரமாகத் தெரியாது என்று சீனப் பெரு ஞானியான தாவோ சொல்வான். தாவோ கடவுளில்லை, மனிதனில்லை, ஒரு கருத்துருவம் என்கிறது நவீன சிந்தனை. ஓடுகிற ஓட்டத்தோடு எல்லாம் அறிந்துகொண்டு கலாபன் தாவோ ஞானத்தில் ஒரு வழிக்குட்பட்டதாய் தன் வாழ்க்கையை வகுத்துக்கொண்டிருந்தான். க~;ரங்கள் அவனுக்குச் சுவைத்த விதம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. கலாபன் இரண்டாவது கப்பல் ஏறி ஓராண்டு ஆகிக்கொண்டிருந்தது. அந்த ஓராண்டில் நான்கு தடவைகள் நாற்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு முறை எண்பதாயிரமென்று ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாவு

கலாபன் கதை 3

கடலில் தொலைந்த ஒருநாள் அதுவரை இல்லாதவாறு அவன் கடலோடியாக மாறிய காலத்திலிருந்துதான் அவனுக்கும், அவனது மனைவிக்குமிடையிலான மனஸ்தாபங்கள் உருவாகியிருந்தன என்பதை அப்போதெல்லாம் அவன் அதிகமாக உணரத் துவங்கியிருந்தான். எந்தக் கடலோடித் தொழிலினால் அந்த முரண்கள் உருவாகினவோ, அதன்மூலமாகவே அவற்றினை நீக்குவதற்கு அவன் தன்னை ஒரு திடசங்கற்பத்துள் ஆட்படுத்திக்கொண்டான். அவள் எதிரே இருந்தபோது தன்னுள் எழுந்திருந்த தாபம், அவளில்லாத அப்பொழுதில் ஒரு சுரமாகத் தன்னைத் தேய்க்க ஆரம்பித்திருப்பதையும் அவனால் நினைக்க முடிந்திருந்த கணங்கள் அவை. காணாதபோது தலைவனின் குறைகளையும், கண்டபோது அவனின் பிரியத்தையும்மட்டுமே தரிசித்ததாக திருக்குறளில் ஒரு தலைவி கூறுவதை எங்கோ படித்திருந்த ஞாபகம் அவ்வப்போது நினைவில்வந்து சலனம் விளைத்துக்கொண்டிருந்தது. அது தலைவனுக்கும்கூட பொருந்துவதுதான் என ஒரு சிரிப்போடு, சிகரெட்டின் புகை சூழ்ந்த தன் கபினுக்குள் வேலை முடிந்து சிறிது போதையோடு இருக்கும் தருணங்களில் அவன் நினைப்பது அடிக்கடி நிகழ்ந்தது. அவளுக்காகவும், தன் குழந்தைக்காகவும் இனி தான் அதிகமாக வாழவேண்டுமென்று அவன் தீர்மானித்துக்கொண்டான்.

கலாபன் கதை 2

நிறுதிட்டம் : இரண்டு ஆண்டுகளாகியிருந்தன அந்த முதல் கப்பலிலிருந்து கலாபன் திரும்பிவருவதற்கு. ஊரே அவனை வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. அவன் வாங்கிவந்திருந்த சான்யோ திறீ இன் வண் செற்றைப் பார்க்க இளமட்டமெல்லாம் வீட்டைச் சுற்றி அலைந்தது. அவனது நீண்ட தலைமுடியும், டெனிம் ட்ரவுசரில் அவனது கம்பீரமான கப்பல் நடையும், அவ்வப்போது கிரேக்க ஆங்கில சொற்கள் கலந்த உரையாடலும் பலரை வசீகரித்தேவிட்டிருந்தன. இரண்டு கிழமைகளாக வீடு ஒரு சொர்க்கத்தில்போல் திளைத்துக்கொண்டிருந்தது. மூன்றாவது கிழமை அவனது மனைவி மனோவின் தங்கை ரூபிணி இரண்டு நாட்கள் வந்து வீட்டிலே தங்கிவிட்டுப் போனாள். இரண்டு வருடக் காத்திருப்பு ஒட்டுமொத்தமும் ஏமாற்றமாகிவிட்டதைப்போல ஆகிப்போனாள் மனோ. அவன் கப்பலிலிருந்து கொண்டுவந்த வீடு ஏதோ விமானநிலையத்தில் இருப்பதாகவும், அதை எடுத்துக்கொண்டுவர கலாபன்தான் தாமதிப்பதுபோலவும் அந்தரப்பட்டுக்கொண்டு திரிந்தவளின் முகம் பின்னால் கறுத்துச் சிதைந்தே போனது. கலாபன்கூட மாறித்தான் போனான். குழந்தையைத் தவிர வேறெவரிடமிருந்தும் ஒரு சிரிப்பொலி எழவில்;;;;;;;லை அந்த வீட்டிலே. ரூபிணி காரணமாயிருக்கலாம் என்பதுதான் பேச்சாய

கலாபன் கதை 1

குருவிக்கு ஒரு கூடு வேண்டும் : அது ஒரு 1974இன் ஆடி மாதத்து இரவு. செறிந்து விழுந்து கிடந்தது இருள். ஆனாலும் தலைநகரின் மின்வெளிச்சம் வானத்தை ஓர் ஒளிப்பரவலில் கிடத்தியிருந்தது. படுக்கையில் படுத்திருந்த கலாபன் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருந்தான். பின் உறக்கம் வராதென்று உறுதியாக, எதையாவது அமைதியாகக் கிடந்து யோசிப்போம் என்ற முடிவோடு நிமிர்ந்து கிடந்தபடி தலையுயரத்தில் இருந்த வட்ட இரு கண்ணாடி ஜன்னல்களினூடு பார்வையை வெளியே எறிந்தான். வானம் தெரிந்தது. நிலா இல்லாத, நட்சத்திரங்களும் இல்லாத வானம். அவ்வப்போது ஒன்றிரண்டு நரைத்த முகில்கள் மிதந்தோடின அதில். பிறகு ஒரே வெளிர் நீலம். அதைப் பார்ப்பதுகூட அவனுக்கு வெகுநேரமாக அலுக்கவில்லை. பார்வை பரவெளியில் பதிந்திருந்தாலும் சிந்தனை அவ்வெளியினூடு சிறகடித்து வீடுநோக்கிப் பறந்துகொண்டிருந்தது. அவன் தனது இளமனைவியையும், குழந்தையையும் ஊரில் தனியே விட்டு வந்திருக்கின்றான். கொழும்பு வந்து பதினான்கு நாட்கள். உடலில் விளைந்திருந்த தாபம் அவனது மனைவியின் அருகை இச்சித்தது. அது ஒரு தகன மண்டபத் தகிப்பை அனுபவிக்கச் செய்துகொண்டிருந்தது. ஆனாலும் உள்ளம் உணர்ந்த காதலின்

அம்பை

 நவீன தமிழிலக்கியத்தில்  மிகவுயர்ந்து ஒலித்த பெண்ணியக் குரல் ஒரு விருது பற்றிய அறிவிப்புக்குப் பின்னால் அது குறித்த சலசலப்போ சர்ச்சையோ தவிர்க்க முடியாதபடி எழுந்தே வந்திருக்கிறது. எங்கேயும்தான்;. இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது இவ்வாண்டு அம்பைக்குக் கிடைத்திருப்பதான அறிவிப்பு வெளிவந்தபோது அபூர்வமாக அவ்வாறான சலப்பையோ சர்ச்சையையோ அவதானிக்க முடியவில்லை. நவீன தமிழிலக்கியத்தில் தெளிவுடன் மிகவுயர்ந்தொலித்த பெண்ணியக் குரலாக அவரது எழுத்துக்கள் (மற்றும் செயற்பாடுகளும்) ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாய் அந்த சலனமின்மையின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியும். அம்பையை எனக்கு நேரில் பழக்கமில்லை. தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் சிறிதுகாலம் கடிதத் தொடர்பு கொண்டிருந்தது மட்டும்தான். அதுவும் நான் ‘இலக்கு’ சிற்றிதழை நடாத்திய காலத்தில் இதழ்கள் அனுப்பியதாலும், கட்டுரை கேட்டு கடிதம் எழுதியதிலும் ஏற்பட்ட தொடர்பே. மே 1996 இல் ‘இலக்கு’வின் ஆறாவது இதழ் தி.ஜானகிராமன் சிறப்பு மலராக வந்தது. நான் கேட்டதற்கு உறுதி அளித்திருந்தபடி அம்பை தி.ஜா.நினைவு மலருக்கு கட்டுரை அனுப்பியிருந்தார். ‘பசு,பால்,பெண்:தி.ஜானகிராமனின