Posts

Showing posts from April, 2009

ஈழத்துக் கவிதை மரபு:

 ஈழத்துக் கவிதை மரபு:  மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதை ஈறாகத் தொடரும் கவிதை மரபு 1. ஈழத்துப் பூதந்தேவனாரிலிருந்து நமது இலக்கிய வரலாறு தொடங்குவதாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். அதுவே ஈழத்துக் கவிதை வரலாற்றின் தொடக்கமும் ஆகும். பூதந்தேவனிலிருந்து அரசகேசரி ஊடாக ஐரோப்பியர் காலத்தில் சின்னத்தம்பிப் புலவர் வரை இலக்கிய வரலாறு மட்டுமன்றி கவிதைபற்றிய வரலாறும் இருண்டே கிடக்கிறது. சின்னத்தம்பிப் புலவர் காலத்திலிருந்து அச்சொட்டாகக் கவிதை வரலாற்றைக் கூறமுடியும். சின்னத்தம்பிப் புலவரின் கவிதை வீறும் அற்புதமானதுதான். எனினும் அதற்கு முன்னாலும் ஆற்றல் மிக்க இலக்கியங்கள் சில எழுந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். பூதந்தேவனின் சங்கப் பாடலிலிருந்து, அரசகேசரியின் ‘இரகுவம்ச’த்துடன் பின்னால் ‘கோட்டுப் புராணம்’, ‘தால புராணம்’, கனகி புராணம்’ ஆகிய படைப்புகளினூடாக இன்றைய பா.அகிலன்வரையும் உள்ளோட்டமாய் ஒரு மரபின் தொடர்ச்சி ஓடியிருப்பதை நம்மால் அவதானிக்க முடிகிறது. இது ஈழத்துக் கவிதைக்கு மட்டுமில்லை, எந்த நாட்டுக் கவிதைக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய உள்ளோட்டத் தொடர்புதான். ஆனால் துல்லியமாகவு

‘வனத்தின் அழைப்பு’

‘ஈழத்துப் புதுக்கவிதைத் துறையின் புதியபிரதேசம்’ அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ குறித்து… 1 கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகள் ஈழக்கவிதை வரலாற்றில் மிகவும் முக்கியமான காலகட்டமாகும். இரண்டாயிரத்துக்கும் மேலான ஆண்டுகளின் பழைமை சார்ந்த இலக்கண இலக்கிய மரபுடைய ஒரு தொல்மொழியில் கவிதை அதன் உச்சத்தை இக் காலகட்டத்தில் அடைந்ததாய்க் கொள்ளமுடியும். உலகத் தரமுடைய பல கவிதைகள் மொழியப்பட்டன. அகம்-புறம் சார்ந்த தொல்மரபு நம்மிடையே இருந்தது. ஆனாலும் இப் புதிய ‘புறம்’ புதிய பிரதேசங்களைத் தொட்டது. தொண்ணூறுகளுக்கு முன்னரே ஸ்தாபிதமாகியிருந்த கவிஞர்களாள சேரன், வஐச ஜெயபாலன், சு.வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம் போன்றோரைத் தவிர்த்துப் பார்த்தால், இக்காலப்பகுதியானது சோலைக்கிளி, கி.பி.அரவிந்தன், நட்சத்திரன் செவ்விந்தியன், ஆழியாள், புதுவை இரத்தினதுரை, பா.அகிலன், ஒளவை போன்ற சிலரையே ஞாபகம் கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. இந்தக் கவனிப்பு முக்கியமானதுதான். எனினும், வரலாறு மறந்த சில பிரதிகள் இப்போது கண்டடையப்படுவதை வைத்து நோக்குகையில், அந்த ஞாபகத்தின் குறைபாட்டையும் அறியமுடிகிறது. அந்த வகையில் விடுபட்ட

நிறமற்றுப் போன கனவுகள்

நிறமற்றுப் போன கனவுகள்: இளவாலை விஜயேந்திரனின் கவிதை நூல் பற்றி… ஈழத்துக் கவிதை (புதுக்கவிதை) தொடர்பான ஒரு நேர்மையான விசாரணை இதுகாலவரையில் தொடரப்பட்டமைக்கான ஆதாரமேதும் நம்மிடம் இல்லை. பேராசிரியர் கா.சிவத்தம்பி, மு.பொ., கலாநிதி செ.யோகராசா, குறைவாக நான் என்று சிலபேர்தான் இத்துறையில் கவனம் குவித்திருப்பது மெய். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ராஜமார்த்தாண்டன், வெங்கட் சாமிநாதன் மற்றும் பிரேமிள் என்று சிலரே இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். பிரேமிள் ஈழத்தவராகவே கணிக்கப்படுவதில்லை என்கிற குறை தனியாகவுண்டு. அவரும் எழுபதுக்களின் நடுப்பகுதிவரையுமே ஈழக் கவிதைகளைப்பற்றி எழுதினார். அண்மைக் காலத்தில் சுஜாதாவும் இதுபற்றிக் கருத்துரைத்திருக்கின்றார். ஈழக் கவிதைகள் நீண்டனவாய் அமைந்து உணர்வுரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் கவிதைத்தனத்தில் பின்தங்கியுள்ளன என்பது அவரது குற்றச்சாட்டு. அது ஓரளவு அப்படியென்றும்தான் தெரிகிறது. இதை அவரோடு பாறுபடக்கூடிய வெங்கட் சாமிநாதனும் சொல்வார். பெண்கள் கவிதையைச் சிலாகிக்கிறவளவுக்கு மற்றைய கவிதைகளை அவர்கள் விதந்து பேசுவதில்லை. எந்தத் தமிழ்ப் புலத்தையும்விட ஈழம் கவிதையில

பாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து

‘வன்னி இலக்கியம் வித்தியாசமான கருக்களமுடையது!’ பாலமனோகரனின் ‘வட்டம் பூ’ நாவலை முன்வைத்து… பாலமனோகரனின் ‘வட்டம்பூ’ நூல் அண்மையில் (ஆவணி 2008) மித்ர பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்திருக்கிறது. பாலமனோகரனின் வீரகேசரிப் பிரசுரமாக 1973இல் வெளிவந்த ‘நிலக்கிளி’யோடு சேர்ந்த ஒற்றைப் பிரசுரம் இது. அப்பால்தமிழ்.கொம் இணையத்தில் இது வெளிவந்தபோது, கண்டிருந்தும் வாசிக்க முற்படவில்லை நான். இணையம் எப்போதும் நுனிப்புல் மேய்பவர்களுக்கானது என்பது, அந்தச் செயற்பாட்டைக் குறிக்க ஆங்கிலத்தில் வழங்கும் ‘browsing’ என்ற சொல் காரணமாகவோ என்னவோ, ஓர் எண்ணம் எனக்குள் விழுந்துவிட்டிருக்கக் கூடும். அப்படியில்லையென்றாலும், பெரிய வாசிப்புக்களை நான் இணையங்களில் என்றும் மேற்கொண்டதில்லை. அவை அசதி தருபவை. அந்தவகையில் இந்நூல் அச்சு ஊடக வடிவம்பெற்று வரும்வரை காத்திருக்க நான் எண்ணமிட்டேன். பொ.கருணாகரமூர்த்தியின் இந்நாவல் மீதான விமர்சனமும் என் எண்ணத்தைப் பின்போடும்படியாகவே அமைந்து இருந்துவிட்டது. இது இந்நூலுக்கான விமர்சனமில்லை. ஈழத்து நூல்களை கொஞ்சம் ஆழமாகவே சென்று குறைகுற்றங்களைக் காண்பதான ஓர் அபிப்பிராயம் என்மீது ஏற்பட்டி