Posts

Showing posts from May, 2010

ஒரு முதுபெண் உரைத்த வாழ்வுபற்றிய பாடம்

ஒரு முதுபெண் உரைத்த  வாழ்வுபற்றிய பாடம் வாழ்வின் சஞ்சரிப்பு எல்லைகள் விசாலித்துக்கொண்டே இருக்கின்றன. புவிசார் அறிவுப் புல வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சிகளை இதன் காரணங்களாகக் கொள்ளலாம். வண்டி மாட்டுப் பயணத்திலிருந்து கார், பஸ் பயணங்களாகியமை இதன் ஒரு வெளிப்பாடு. பின்னால் ரயில், விமானப் பயணங்களாக அவை மாற்றங்களைக் கண்டன. சரீரார்த்தமான இச் சஞ்சரிப்புகளும் மாறி, இருந்த இடத்திலிருந்தே பொறிகள் நினைத்த இடமெல்லாம் சஞ்சரித்து வரும் மிகு தொழில்நுட்ப வளர்ச்சிக் காலகட்டத்தை இன்று நாம் வந்தடைந்திருக்கிறோம். பத்தாயிரம் மைல் தொலைவிலுள்ளவருடன் முகம் பார்த்துப் பேச சுலபமாக இன்று முடிந்துவிடுகிறது. இவ் அகலுலகச் சஞ்சரிப்பில் எதிர்ப்படும் சம்பவங்கள் கணக்கற்றவை. ஆயினும் வாழ்வின் ஆரம்பம் முதல், கனதிபெற்று அகல மறுத்ததாய் மனத்தில் உறைந்துபோக சில சம்பவங்களேனும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு நினைவினடுக்கில் படைபடையாய் நிறைந்து கிடக்கும் சம்பவங்கள் ஒரு கோடி இருக்குமோ? இருக்கலாம். சம்பவங்கள் நடந்த கணத்தோடு முடிந்து போபவைதாம். ஆனாலும் நினைவுக் குழிக்குள் போய்விடுகிற சம்பவங்கள் தம்முள் மீட்கப்பட்டுக்கொண்டே கிடக்கி

கலாபன் கதை: 11

இருந்தால் மனைவி! போனால் பரத்தை! 1985இல் வீடு திரும்பிய கலாபன் மறுபடி கப்பலெடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு புதிய கார் வாங்கி, அதை யாழ்ப்பாணம் முழுக்க முழுவேகத்தில் ஓடித்திரிந்து, ஒருமுறை பருத்தித்;துறை செல்லும் வழியில் ஒரு மினிவானுடன் விபத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களாக கராஜ்ஜுக்கு அலைந்து திருத்தியெடுத்து, அடுத்த ஆறாவது மாதம் வந்த விலைக்கு அதை விற்று என்று பல சீரழிவுகளையும் அனுபவித்த பின்னர்தான் அதுவும் முடிந்திருந்தது. கலாபன் எங்கோ அடிபட்டிருந்தான் என்பதை சிலகாலமாகவே நான் புரிந்துகொண்;டிருந்தேன். மெல்லவோ விழுங்கவோ முடியாத ஓர் மனவலியின் விளைவே அந்த அவனது வரம்புமீறிய குடியென்று ஊகிக்க பெரிய அனுபவமொன்றும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் வெளிப்படப் பேசி அவனை ஆறுதல்படுத்த அந்த ஊகத்தில் தெரிந்த காரணம்மட்டும் போதுமாயிருக்கவில்லை. மனமென்பதுதான் என்ன? உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே! அது பலருக்கு நீராலானதாய் அமைந்திருப்பது விந்தைகளின் உச்சம். நீர் சிறிய காற்றினலைவுக்கும் சலனமாக

சதுரக் கள்ளி (சிறுகதை)

சதுரக் கள்ளி அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது தலையசைப்பதுபோன்ற காட்சி. எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பவைக்கிற காட்சியாகவிருந்தது அது. அவன் அலறிக்கொண்டும் எழுந்திருக்கலாம். ஏன் ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா? என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் தெளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ? இருக்கலாம். அது அவனது நினைவுகளின் முக்கியமான கூறினைக் கொண்டிருந்த இடமா