Posts

Showing posts from May, 2011

யுத்தம் (சிறுகதை)

Image
யுத்தம் (சிறுகதை) கிழக்கில் திணிந்திருந்த இருள் விரிந்து ஐதாகி மெல்ல அசைந்தசைந்து மேற்குநோக்கி நகர்ந்துகொண்டிருந்ததைக் கண்டுகொண்டிருந்தது மகாதத்தம். வேளை ஆகிறதென எண்ணிக்கொண்டது. இரவு முழுதும் அதனால் உறங்க முடியவில்லை. சிறிதுநேரம் படுத்திருந்தது. சிறிதுநேரம் கண்களை மூடி தூக்கம் கொள்ளப் பார்த்தது. முடியாது…முடியாதென எண்ணிக்கொண்டுபோல் தலையை ஆட்டியவாறு மறுபடி எழுந்து நின்றுகொண்டது. தன்னை உறுதிப்படுத்த, தெளிவுபடுத்த நீண்டநேரம் தேவைப்படுமென நினைத்துப்போல் மீதி இரவு நெடுக நின்றுகொண்டே இருந்தது. எவ்வளவு யோசித்தும் அதனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. எவ்வாறு தன் அரசன் உறுகுணை அரசனுடனான ஒரு நேர்நேர் யுத்தத்திற்குச் சம்மதித்தான் என்ற வினா நெடுநேரத்தின் பின்னரும் ஒரு புதிராகவே அதனுள் இருந்துகொண்டிருந்தது. முதல்நாள் மதியத்துக்குள்ளேயே அனுராதபுரக் கோட்டையினை முற்றுகையிட்டிருக்கும் அரசனிடமிருந்து வெண்கொடியேந்திய தூதொன்று வந்த சேதி அதன் காதில் விழுந்துவிட்டது. கடந்த பல மாதங்களின் நிகழ்வுகளில் ஒரு தோல்வியும் அழிவும் தமிழர் அரசைநோக்கி முன்னேறியவண்ணமிருந்த சூழ்நிலை, ஒரு பிரதான சம்பவத்தின் ஏத

பேரணங்கு (சிறுகதை)

பேரணங்கு (சிறுகதை) குளோபல் குழுமத்து தொழிற்சாலை ஒன்றிலிருந்து சமீபத்திலுள்ள இன்னொரு தொழிற்சாலைக்கு மாற்றுத் தொழிலாளியாக ஒரு வாரம் வேலைசெய்ய அனுப்பப்பட்டிருந்த ரமணீதரன் சதாசிவம், அந்த ஒல்லியாய் உயர்ந்து வளர்ந்திருந்த பெண்ணை முதல்நாளான திங்கட்கிழமையிலேயே கவனம் பட்டிருந்தான். பெரும் பெரும் பலகைகளை அளவாக அறுத்து, அதில் துளைகள் இட்டுப் பொருத்தி தளபாடங்கள் தயாரிக்கும் அத் தொழிற்சாலையில், துளைகளிடும் இரண்டு மூன்று எந்திரங்களுள் ஒன்றில் அவளுக்கு வேலை. அவளுக்குப் பின் வரிசையிலுள்ள அறுவை எந்திரத்தில் பெரும்பலகைகளை வெட்டுவதற்கு உதவிசெய்வதற்காக விடப்பட்டிருந்த அவனுக்கு அவள் அங்கு வேலைசெய்த பத்தோ பதினைந்தோ வரையான பெண்களில் ஒருத்திதான் மதியச் சாப்பாட்டு நேரம்வரை. அதுவரையில் தனியாக ஒரு எந்திரத்துக்குப் பொறுப்பாகவிருந்து அநாயாசமாக அறுத்த பலகைகளைத் தூக்கி எந்திரத்தில் வைத்து துளைபோட்டு அனுப்பிக்கொண்டிருந்தமையில் அவள் அங்கு வேலை பார்த்திருக்கக்கூடிய காலங்களின் நீள்மையைத்தான் அவன் கண்டுகொண்டிருந்தான். இரண்டு மணிக்கு மேலேதான் அவனை அதிசயப்பட வைத்த அந்தக் காட்சி கண்ணில் விழுந்தது. அவளுக்கருகே ஆற

சபானா கதை

சபானா:  விண்ணில் வாழ்ந்துவிட்டு  மண்ணகம் வந்த பெண் அண்மையில் வெளிவரவிருக்கும் ‘எங்கும் ஒலிக்கிறது காற்று’ என்ற தலைப்பிலான கூர் 2011 க்காக செங்குடி இன மக்களின் புராணிக, கிராமிய கதைகளில் ஒன்றை மாதிரிக்காக மொழிபெயர்ப்புச் செய்து பதிக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டபோது, அதற்காக நிறைய இத்தகு  கதைகளை வாசிக்க நேர்ந்தது. அவற்றுள் சபானாவின் கதை தனித்துவமானதாக விளங்கியது. கூரில் அக் கதையை மொழிபெயர்ப்புச் செய்து போடாது விட்டிருந்தாலும், அக் கதைபற்றி எங்காவது சொல்லுகின்ற எண்ணம் திண்ணமாகியிருந்தது என்னிடத்தில். ஆதற்கான களமாக இம்மாதத்துக்கான தாய்வீட்டின் இந்தப் பக்கம் ஆகியிருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். கதை மிக மாயத்தன்மை வாய்ந்ததில்லை. மாறாக, மாயத்தை நீக்கிக்கொண்டு வந்த கதையாக எனக்குப் பட்டது. உங்களுக்கு எப்படியோ? கதை இதுதான். பேரழகின் உறைவிடமான சபானா தன் இனக் குழுமத்தின் குடில்கள் நிறைந்த உறைவிடத்திலிருந்து ஒரு நாள் தோழியரோடு அன்றாடத் தேவைகளுக்கான விறகினைச் சேகரிக்க, அயலிலுள்ள காட்டினுக்குச் செல்கிறாள். வழி நடந்துகொண்டிருக்கும் சபானாவின் செவிகளில் திடீரென விழுகிறது அலைஅலையாக எழுந்துவந்த