Posts

Showing posts from November, 2012

சிறுகதை: ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும்

சிறுகதை: ஸரமகோதாசனும் கரப்பான் பூச்சிகளும் சித்திரை மாதக் கடூர வெய்யிலின் தாக்கத்தில் கொதி மண்டலமாயிருந்த பூமி குளிரத் துவங்கியிருந்த ஒரு மாலை நேரத்தில் நான் ஸரமகோதாசனைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.  நித்திரையில் இருந்திருப்பான், நான்கு ஐந்து முறை கதவைத் தட்டிய பிறகு கதவைத் திறந்து, “உள்ளே வா” என்றான். மேலே மாமரக் கிளைகள் கவிந்து நின்றிருந்தன. பக்கத்தேயும் பின்னேயும் ஈரப்பலா மரங்கள். கிணற்றடியில் கமுகுகளும் செவ்விளநீர்க் கன்றுகளும் வாழைகளும். பராமரிப்புக் குறைந்திருந்தாலும் செழிப்பாகவே நின்றிருந்தன. முற்றத்தில் கொழுத்த ஓர் அரசமரம். அந்தமாதிரிக் காட்சிகள் நகரத்தில் பெரும்பாலான இடங்களில் கிடைத்துவிடாது. அதனால், ‘நான் வெளியிலயே இருக்கிறன்’ எனச் சொல்ல,  குளித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு விரைந்தான்.  நான் அவனது அறைக்கு முன்னால் முற்றத்தில் நின்ற அசோகமரத்தைச் சுற்றிப் போட்டிருந்த  கொங்கிறீற் கட்டில் அமர்ந்தேன். பெரிய வீட்டின் கதவு சாத்தியேயிருந்தது. மிஸிஸ் பெர்னாண்டோ எங்கோ வெளியே போயிருக்;கிறாள் என்று தெரிந்ததில் மனத்தில் ஓர் ஆசுவாசம். இல்லாவிட்டால் உள்ளே வந்திரு என்று வற்புறுத்தி

முகங்களும் மூடிகளும்

முகங்களும் மூடிகளும் சில நல்ல கதைகளையும், சில சுமாரான கதைகளையும் கொண்டு மொத்தமாய்ப் பதினெட்டுக் கதைகள் அடங்கிய தொகுப்பாக அண்மையில் வெளிவந்திருக்கிறது கோகிலா மகேந்திரனின் ‘முகங்களும் மூடிகளும்’. முகங்களும் மூடிகளும் என்ற முதல் கதையே தலைப்பாக வந்திருப்பதாலேயே அக்கதை விசேட தன்மையெதையும் கொண்டிருப்பதாகக் கருதத் தேவையில்லை. அதைப் படைப்பாளி, பதிப்பாளர் விருப்பத்தின்படியான ஒரு தேர்வென்றே கொள்ளவேண்டும். தலைப்புகள் நூல்களில் முக்கியமான பங்கு வகிப்பவை. இந்நூலில் அப்படியில்லை. தலைப்பு ஒரு அடையாளம்- அடையாளம் மட்டுமே- என்று கொண்டு இந்த விடயத்தை அப்படியே விட்டவிடலாம். அண்மையில் பிற தமிழ்ப்புலங்கள் உட்பட வெளியாகியுள்ள சிறுகதைத் தொகுப்புகளில் ‘முகங்களும் மூடிகளும்’ குறிப்பிடக்கூடிய ஒன்று என்பதை முதலில் தெரிவித்துக்கொள்வது வசதியானது. அதன்மேலேயே அதன் தரம் குறித்த விசாரணையை நாம் செய்தாக வேண்டியுள்ளது. எடுப்பிலேயே ஈழத்து தமிழ்ச் சூழலில் படைப்பாளி, தீவிர வாசக மட்டங்கள், சிலவேளைகளில் வசதிக்காக விமர்சன மட்டமும், சிறுகதை , சின்னக் கதை இரண்டுக்குமான பிரிகோட்டைக் கண்டுகொள்ளாமலேயே ஒரு நீண்ட காலத்துக்க