Posts

Showing posts from 2013

‘குமார்மூர்த்தி கதைகள்

‘குமார்மூர்த்தி கதைகள்’ நூலை முன்வைத்து  படைப்பு, படைப்பாளி, படைப்பின் இயங்குதளம் குறித்த விசாரணை (2011 ஜூலை 30 ஞாயிற்றுக் கிழமை மாலை தமிழர் வகைதுறை வள அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட குமார்மூர்த்தி நினைவுக் கூடலில் தேவகாந்தன் நிகழ்த்திய பேச்சின் உரைவடிவம்.) குமார்மூர்த்தி உயிர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த ‘முகம் தேடும் மனிதன்’ (1995)  சிறுகதைத் தொகுப்பிற்குப் பின்னால், அவர் மறைந்து ஓராண்டின் பிறகு 'குமார்மூர்த்தி கதைகள்'(2002) வெளிவந்திருக்கிறது, அவரின் ஒட்டுமொத்த படைப்புகளின் தொகுப்பான இந் நூல். குமார்மூர்த்தியின் படைப்பாளுமை, அவரின் கருத்தியல், கலைஞான இயங்குதளங்கள் குறித்து படைப்பினூடாக ஓர் அலசலை மேற்கொண்டு பார்க்கும் முயற்சியே என்னது. இத் தொகுப்பு இருபத்தைந்து கதைகளினைக் கொண்டது. ‘முகம் தேடும் மனிதன்’ தொகுப்பிலுள்ள 11 கதைகளுடன், தொகுப்பின் பின்னால் இதழ்களிலோ  பத்திரிகைகளிலோ வெளிவந்த 2 கதைகளையும், வெளிவராத 12 கதைகளையும், முற்றுப்பெறாத ‘சிதைவுறும் சித்திரங்கள்’ என்ற நாவலின் பகுதி, சுயவிசாரிப்பான ‘என்னைப்பற்றி’ என்ற தலைப்பிலான கட்டுரை ஆதியனவற்றையும் கொண்டிருக்கிறது இது.

அல்பேர் காமு

அல்பேர் காமு: தமிழுலகில் புரிந்தும் புரியாமலும் இருக்கும் பிரான்ஸிய இலக்கிய ஆளுமை 1 அண்மையில், மூன்றாவதாக இப்போது அமைந்துவரும் என் நூலக அடுக்கிலிருந்த அல்பேர் காமுவின் மரணத்தையொட்டி ழீன் போல் சார்த்தரும், செர்ஜி துப்ரோவ்ஸ்கியும் வெளியிட்ட பிரெஞ்சு மொழியிலான இரங்கல் செய்திகளின் ஆங்கிலம் வழியிலாக நண்பர் தேனுகா தமிழில் மொழிபெயர்த்து ‘அகரம்’ வெளியிட்டிருந்த ஒரு கையடக்கமான சிறுநூல் மறுபடியுமான எனது வாசிப்புக்குத் தட்டுப்பட்டது. வாசிப்பின் பின்னூட்டமாய் தொடர்ந்து விளைந்த யோசிப்புக்களின் காரணமாக, தமிழ்ப் பரப்பில் அல்பேர் காமு என்கிற பேராளுமைபற்றிய அறிகை பெரிதாக ஏற்படவில்லையோ என்று தோன்றத் தொடங்கியது. ஓரளவு ஏற்பட்டிருந்தாலும், விமர்சகர்கள் படைப்பாளிகள் வாசகர்களென பலராலும் புரிந்தும் புரியாமலுமே அவர் இருந்திருக்கிறாரோ என்று பிறகு பட்டது. ஒரு புதிய ஆர்வத்தின் காரணமாய்க்கூட எனது எண்ணம் இப்படி மிகைபடத் தோன்றியிருக்கலாம் எனக் கொண்டாலும், ‘பெரிதாக இல்லை’ என்னும் அளவுக்காவது அந்நிலைமைகள் இருப்பதை தீர்க்கமான சிந்தனையின் பின் என்னால் வந்தடைய முடிந்தது. அல்பேர் காமுவின் வாழ்நாள் அதிக காலமில்லை.

சினிமா: சட்டகமும் சாளரமும்

சினிமா: சட்டகமும் சாளரமும் (ஆவணி 31, 2013 சனிக்கிழமை கனடா சுயாதீன திரைப்பட இயக்கியத்தினால் பட்டறை, மற்றும் கலந்துரையாடல் என ஒரு முழுநாள் நிகழ்வாக மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் சொர்ணவேல் அவர்கள் பங்கேற்ற அமைவில் வாசிக்கப்பட்ட பேச்சு உரைவடிவத்தின் உரைக்கட்டு வடிவம் இது.) ஒரு மாறுதலுக்காக மட்டுமன்றி, இந்தமாதிரியான ஒரு அலசல்தான் இந்த நூலிலுள்ள விஷயங்களின் தாற்பரியங்களை விளங்கிக்கொள்ளும் சுலபத்திற்கு வாய்ப்பானது என்று கருதுகிற வகையிலும், இந்த முறையில் இந்நூல் பற்றிய என் கருத்துக்களைத் தொகுத்தளிக்க விழைகின்றேன். 'ஐசன்ஸ்டெயினிற்கும் மார்க்கருக்கும் நடுவிலுள்ள அளவிலாத் தூரத்தில் சஞ்சரிக்கும் மார்க்சின் ஆவி, உலகமயமாதலுக்குப் பின்னும் நம்மை ஆட்டுவிக்கும் என்ற மார்க்சிய அடிப்படைக் கூறான இருமை எதிர்வைக் கட்டவிழ்த்த தெரிதாவின் கூற்றில் உண்மை இருக்கின்றது’ என்று கடைசிப் பக்கத்தில் வரும் வசனங்களோடு இந்த நூல் முடிவடைகின்றது. முடிவிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஆசிரியரின் மார்க்சீய சில கருதுகோள்களிலுள்ள  விருப்பு, தெரிதாவின் பல்வேறு கலையும் சினிமாவும் சார்ந்த விஷயங்களில் உள்ள ஈடுபாடு, ப

விளாத்தி நிலம் (சிறுகதை)

விளாத்தி நிலம் (சிறுகதை) இரவு முழுக்;க சந்நதமாடிய உணர்ச்சித் தெறிப்புகளில் அலுத்துக் கிடந்த உடம்பைத் திருகி வளைத்து முறிவெடுத்தபடி நித்திரை கலைந்து பாயிலிருந்து எழுந்து குடிசையைவிட்டு வெளியே வந்தாள் வண்ணக்கிளி. நெடுங் கல் தெருவிலிருந்து கிளை பிரியும் அந்தச் சந்தியில் முதல்நாள் முன்னிரவில் பறை முழக்கியது கேட்டிருந்தது. அன்றைய வெள்ளிக்கிழமை மாலையில்  ஏதோ கோவிலின் கழிப்பு நடந்திருக்கவேண்டும் என்ற நிச்சயத்தோடு திரும்பியவளின் பார்வையில் பாதியாய் வெட்டப்பட்ட நீர்பூசணியின் வெண்சுதையில் அப்பியிருந்த குங்குமத்தின் செம்மை பட்டது. அவள் திரும்பி ஒத்தாப்பில் அடுப்பை மூட்டி தேத்தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து வழக்கம்போல் வாசலில் குந்தினாள். அந்த இடத்திலிருந்து தேத்தண்ணீர் குடித்தபடி மனத்திலெழக்கூடிய நினைவுகளை மீட்டுக்கொண்டு, நாளின் கிரியைகளைத் துவங்குவது அவளின் நித்திய கருமம். குடிசைக்குப் பின்னால் கட்டிநின்ற மறிஆடு செத்தையில் உராய்ந்து தினவெடுத்தது கேட்டது. ஒரு மாதமாகக் கத்தித் தொலைத்துக்கொண்டிருந்த ஆடு இப்போதெல்லாம் கத்துவதில்லை. போன கிழமைதான் ‘கிடாய்க்கு விட’ கொண்டுபோய் வந்திருந்தாள். ஆ

மீண்டும் ஒரு தீவிரத்துடன்...

மீண்டும் ஒரு தீவிரத்துடன்... நீண்ட நாட்களாக  என் வலைப் பதிவான devakanthan.blogspot.com இல்  நான் புதிய இடுகைகள் எதையும் இட்டுக்கொள்ளவில்லை. அதற்கான காலத்தை ஒதுக்க முடியாது போனதே காரணம். இன்றைய நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தை வலைப் பதிவிற்காக இதுக்கத் திட்டம். சந்திப்போம்.