Posts

Showing posts from September, 2014

மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்கு

மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்கு - தேக்கம் - நிவாரணம் ‘தமிழில் சிறுகதை வரலாற்றையும் வளர்;ச்சியையும்பற்றி ஆராயும்போது தமிழ்மொழி பயிலும் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் மாத்திரம் கவனத்தில் எடுத்துக்கொள்வது தவறு என்பதும், மொழி உணர்ச்சியும் இலக்கிய ரசனையும் தீவிரமாக வளர்ந்துள்ள மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் சேர்த்து ஆராயவேண்டியது இப்போது அவசியமென்பதும் தெளிவாகத் தெரிகிறது.’ இது சிட்டியும், சிவபாதசுந்தரமும் எழுதிய ‘தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் உள்ள வரிகள். நூல் 1989ல் வெளிவந்தது. இது சுட்டும் குறிப்பின் விவரத்தை உன்னித்தால் ஏறக்குறைய அதுகாலம் வரைக்கும் மலேசியத் தமிழிலக்கியம் கவனிக்கப்படவில்லையென்பது தெரியவரும். இதன் முதற் காரணியாக இலக்கியப் பரிமாற்றம் போதியளவு இன்மையைச் சொல்லமுடியும். மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் சுமார் நூறினை அண்மையில் வாசிக்க நேர்ந்தபோது வெகு பிரமிப்பு ஏற்பட்டது. அதன் வித்தியாசமான களத்தில், வித்தியாசமான கரு விவரிப்புகள் சூழமைவுகளில் அற்புதமான சில சிறுகதைகளைக் கண்டேன். இவ்வளவு காலம் அவை மறைந்து கிடந்தமை ஆச்சரியமாகவும்கூட இருந்தது.

எனது முதல் கவிதை

மனித அடையாளம் -தேவகாந்தன் புல்லின் தலைகளைத் தடவிய பனிக்காற்று பூவிதழ் மலர்த்திய இரவின் வருடல் 0 மனிதக் கூடொன்று தசையில் தீப்பிடிக்க உழன்று எழுந்து மெதுமெதுவாகக் கையைநீட்டி துணைவிதிகளினாலே தீயை மூட்டிற்று இன்னொருதசையிலும் 0 பகலின் வாழ்வில் அர்த்தமாய் இன்றியாய் அடைந்தபேதங்கள் வெறுப்புகள் வெக்கைகள் யாவும்; நெகிழ்ந்து ஊடலாகின பின் அதுவுமேஅற்றது 0 சத்தம் வெறுத்த நிசப்தத்துள்ளே இருட்டினுள்ளே சேர்ந்து பிணைந்து முயங்கி முள்ளைமுள்ளால் முள்ளைமுள்ளால்;;… 0 மனிதன்- யந்திரம்- யந்திரமனிதன்- பேதமறும் பிரபஞ்சத்தில் யுகப் பழமையான இதுதான் உச்சவெற்றியான மனிதஅடையாளம் 000 (இலாலாப்பேட்டையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துகொண்டிருந்த ‘நிழல்’என்ற சிற்றிதழ் ஆத்மாநாம் நினைவுநாளான ஜூலை 6இல் ஒருகவிதைச் சிறப்பிதழை வெளியிட்டது 1996ஆம் ஆண்டு. அதில் வெளியான கவிதை இது. அச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் அழகியபெரியவன் மற்றும் நேசன் ஆகியோர் அங்கம் வகித்தனர்)

சமகாலதமிழ்க் கவிதை

சமகாலதமிழ்க் கவிதைகளின் செல்நெறிகுறித்து… இரா.காமராசுவின் ‘கணவனானபோதும்’ தொடங்கி அண்மையில் வெளியீட்டுவிழா நடத்தப்பெற்ற ‘சந்திப்பின் கடைசிநொடியில்’ வரை சிறிதும் பெரிதுமாக சுமார் முப்பது கவிதை நூல்கள் வெளிவந்துள்ளதை மேலோட்டமான ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  வெகுவான நூல்கள் கவிதைத் தினவோடு மட்டுமன்றி, தரம் குறித்த பிரக்ஞையோடும் வெளிவந்திருக்கின்றன. வடிவ நேர்த்தி மிகுவல்லபம் பெற்றிருக்கிறது. இவை ஆரோக்கியத்தின் அடையாளங்கள். எனினும் செல்நெறி குறித்த தெளிவு இல்லாதவரை கடந்தகாலங்களைப்போல் மீண்டும் மீண்டும் குறுக்கிடும் கவிதைத் தேக்கநிலைமைகளை நாம் தவிர்க்கவியலாது போதல் கூடும். இப் புதிய கவிதைச் சூழலை ஈழக் கவிதைகளை மையப்படுத்தியும், பா.செயப்பிரகாசம், முத்துக்குமார் ,மா.காளிதாஸ் ,யுகபாரதி, கிருஷாங்கிணி, கல்லயாணராமன் போன்றோரின் கவிதைகளைப் பொதுமையாகவும் ஒரு வாசிப்புக்குட்படுத்தியபோது சில கருத்துக்கள் தவிர்க்க முடியாதபடி மனத்தே மீண்டும் மீண்டும் முந்திக்கொண்டு வந்துநின்றன. அவை குறித்து என் பகிர்வே இக் கட்டுரை . இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிகவிஸ்தீரணமானது. அது மனுக்குலம் எதிர்நோக்கும்

நூல் விமர்சனம் 8 நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் 2005இல் வெளிவந்த நாஞ்சில் நாடனின் கட்டுரைத் தொகுப்பினை மீளவாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்கு வாய்த்தது. முதல் தடவையில் அத் தலைப்புச் செய்த இடையூறுபோல் இரண்டாவது தடவையில் நான் பட்டுக்கொள்ளவில்லை. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டிலேயே என்னிடம் வந்துவிட்ட இந்தப் புத்தகம், தொடர்ந்த ஓரிரண்டு ஆண்டுகளாக  என் நூல்நிலையத்தில் இருந்திருந்தும், அதை வாசிக்கத் தடையாக இருந்தது அதன் தலைப்புத்தான். இது சூழலியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்புப்போன்ற ஒரு மயக்கமாகும் அர்த்தத்தைக் கொண்டிருந்தது. நதிகளில் நீரற்றுப் போயிருக்கும் வரட்சி வனவழிப்பு, காற்றின் மாசு இவற்றினாலான இயற்கைவளங்கள் அழிவதினால் ஏற்பட்டிருக்கிறதென்றும், அதற்கான காரணங்களை மனிதர்களே பொறுப்பேற்கவேண்டுமென்றும் குற்றம் சாட்டுகிற தொனி அந்தத் தலைப்பில் இருந்ததாக எனக்கு முதன்முதலில் தோன்றியிருந்தது. ஓரளவு இந்த அர்த்தம் செறிந்த இதே தலைப்பிலான கட்டுரையொன்று இதில் இருக்கிறது. எனினும் சுற்றுச் சூழல்பற்றி இலேசாகக் குறிப்பிட்டுச் செல்லும் இக்கட்டுரை, அதிகமாகவும் புகைந்துகொள

சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து

சமகால தமிழ்க் கவிதைகளின் செல்நெறி குறித்து மேலும் சில விவரணங்கள் -தேவகாந்தன்- இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்தின் இறுதிக் கண்ணியில் நின்றுகொண்டிருக்கிறோம். நாம் இலக்கியவிவகாரங்கள் குறித்துதெளிந்தசிந்தனையோடு இருபத்தோராம் நூற்றாண்டில் பிரவேசிப்பதுஅவசியமாகும். அக்டோபர் கணையாழி இதழில் நான் எழுதிய‘சமகாலதமிழ்க் கவிதைகளின் செல்நெறிகுறித்து…’என்றகட்டுரையில் எழுத்துமரபு, வாய்மொழிமரபுபற்றி விசாரித்திருந்தேன். அக் கட்டுரையின் நீட்சியாகத் தொடரும் இக் கட்டுரையில் ஈழத்துப் பெண் கவிஞர்கள்பற்றி ஆழமாக கவனிக்கலாமென்றிருக்கிறேன். இது ஒட்டுமொத்தமானஈழத்துக் கவிதைகளின் போக்குக் குறித்தும் புரியவைக்கும். நாவல்,சிறுகதை,நாடகங்களைவிடவும் கவிதையேஈழத்து தமிழிலக்கியப் பரப்பில் வலுவீச்சுக்காட்டிவளர்ந்திருக்கிற இலக்கியவடிவம். இதில் பெண் கவிஞர்களின் பங்களிப்பு அதிகமானது என்று சொன்னாலும் பொருந்தும். ஒளவை,ஊர்வசி,சிவரமணி,சன்மார்க்கா,மைத்ரேயிமல்லிகா,கோசல்யா,கல்யாணி,கருணா,உமையாள்,ரஞ்சனி,சுல்பிகா,பாமினி,செல்வி,நிருபமா,பிரியதர்சினியென்று இப் பட்டியல் விரிகிறது. சமூகத்தின் சமகாலநிகழ்வுகள் குறித்து பேரக்கறைகொண

மகாகவியின் 3 நாடகங்கள்

மகாகவியின் 3 நாடகங்கள் தொகுப்பாசிரியர் : எம்.ஏ.நுஃமான் இன்றையகாலத் திருக்கும் மனிதர்கள் இன்றையகாலத் தியங்கும் நோக்குகள் இன்றையகாலத் திருப்புகள் எதிர்;ப்புகள் இன்றையகாலத் திக்கட்டுகள் …….’ (மகாகவி) இவையே அறுபதுகளிலிருந்து எண்பதுகள்வரை ஈழத்தில் கவிதை, நாடக ஆளுமையாகவிருந்த மகாகவி என்ற உருத்திரமூர்த்தியின் இலக்கியக் கருதுகோள்களாக இருந்திருக்கின்றன என்பதை அவரின் படைப்புகளின் மூலமும் நம்மால் தெளிவாகக் காணமுடிகிறது. ‘புதிய களங்கள் புதிய போர்கள் ,புதிய வெற்றிகள் இவைகளைப் புனையும் ,நாடகம் வேண்டி நம் மொழி கிடந்தது’ என்று அவரே கூறுவது போன்றிருந்த நிலைமையிலேதான் ‘கோடை’ நாடகத்தினூடாக மகாகவியின் நாடகப் பிரவேசம் நிகழ்கிறது. இவையெல்லாம் வெறும் பிரகடனங்கள் மட்டுமில்லை, செயற்பாட்டு வெற்றியையும் அடைந்திருக்கின்றன. அதை இப் பாநாடக நூல் தொகுப்பு பிசகில்லாமல் காட்டுகிறது. ‘எல்லாவிதமான கலை இலக்கிய வடிவங்களையும்விட ஈழத்தில் இன்றைக்கு உன்னதமான வளர்ச்சிபெற்றிருப்பது நாடகத் துறையே’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒருமுறை என்னிடம் கூறினார். ஈழத்தில் மட்டுமில்லை, தமிழகத்திலும் மேடைநாடகவாக்

தீனிப் போர் (நாடகப்பிரதி)

 தீனிப் போர் (நாடகப்பிரதி)  இளையபத்மநாதன் ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இப்பொழுது அக்கறையாகப் பேசப்படும் துறைகள் இரண்டு. ஒன்று ,நவீன நாடகங்கள். இரண்டு, புலம்பெயர் சினிமா. சமகால கலைச் சினிமா வரலாற்றில் பாரிய தாக்கங்களை புலம்பெயர் சினிமா ஏற்படுத்துமென்று பலமாக நம்பக்கூடியவகையில் புதிதுபுதிதாக ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். காட்சி, மொழி, இசையென்று இரண்டுக்குமே பொதுமையான அம்சங்கள் உள்ளபோதும், இவை வேறுவேறான கலைக் கட்டுமானமுடையவை. அரங்கில் நாடகத்தை முழுக் காட்சிப் படிமமாகத்தான் பார்வையாளனுக்குத் தரமுடியும். சினிமாவிலோ குளோஸ்-அப் முறையில் கவனத்தைக் குவிப்பிக்க வழி இருக்கிறது. ஆனாலும் வேறு உத்திகளில் கவனம் குவிக்கப்படவேண்டிய பகுதிகளில் கவனத்தைக் குவிக்கச் செய்ய நாடகத்தினாலும் முடியும். பொதுஅம்சங்களோடு இவை நவீனத்தை நோக்கி நகர்கின்றன. அது மகிழ்சியாகவிருக்கிறது. இவ்வாறான தமிழ்க் கலைகளின் வளர்நிலைக் காலகட்டத்தில் நம் மரபு சார்ந்த கலைக்கூறுகள் மகாகவனிப்புப் பெற்றுவருகின்றன. அவை வீர்யமுடன் காப்பாற்றப்படவேண்டியவை ஆகும். இதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டியே ஒர

ஏகலைவன் (நாடகப் பிரதி)

  ஏகலைவன் (நாடகப் பிரதி) இளையபத்மநாதன் இளையபத்மநாதனின் நான்கு நூல்களைப்பற்றியகலந்துரையாடல் அண்மையில் சென்னையில் நடந்தது. இவற்றில் மூன்று  தமிழில் எழுதப்பெற்ற  நாடகப் பிரதிகள். இன்னொன்று, ‘ஒருபயணத்தின் கதை’ என்கிற  பெர்தோல் பிரெக்டின் ஆட்டப் பிரகார  மொழிபெயர்ப்பு. இதை, ‘அடியொற்றிய  தழுவல்’ என்கிறார் ஆசிரியர். பொதுவில் நாடக நூல்களின் வரவு அருகியிருக்கிற தமிழ்ச் சூழலில், இந் நூல்களின் வரவு துல்லியமாய்க் கண்ணில்பட்டது. ‘கிப்டு’ வாசகர்களுக்காக வேண்டி ‘ஏகலைவனை’ப்பற்றிய  சுருக்கமான  மதிப்புரையை இக் கட்டுரைத் தொடர் அடக்குகிறது. முதலில் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்ற நூல் ‘ஏகலைவன்’. அதன் அரங்காக்க வரலாறு இது: 1972ல் பிரதியாக்கம்பெற்ற புகழ்பெற்ற நாடகமான ‘கந்தன் கருணை’க்குப் பிறகு, மூலத்தில் எழுதப்பட்டு பிரதியாக்கம் பெறுகிற முதலாவது இளைய பத்மநாதனின் நூல் இது. 1978ல் இலங்கையில் அம்பலத்தாடிகள் குழு மூலமாய் முதன்முதலில் அரங்கேறிற்று. இரண்டாம் ஏற்றம் 1982லும், மூன்றாவது 1993லும் நிகழ்ந்தன. திறந்தவெளி நாடகக் கூத்தாகவே இது அப்போது  அரங்கேறியது. இதன் மிதிகளும் நடைகளும்கூட முந்திய பல கூத்தாட்டங்க

எதிர்க் குரல்கள்

காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன். சாசுவத உண்மைகள்மீது தீவிரமாகஎழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்குத் தக தம் இருப்பை நெகிழ்வித்துக்கொண்டன என்பதுதான் அது. அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவேசாத்;தியமாக இருந்திருக்கின்றன. கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா.அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்டசமூக காலத்திலும் அவைவௌ;வேறு தளங்ளிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரேமாதிரியே இருந்திருக்கின்றன.அவ்வக்காலசமூகம் வேறுஎந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்காது. ஒருகாலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அதுதன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தைமட்டுமே சொல்லும். பின்நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப்படவேண்டும். மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள்  நகர்ந்திருக்கின்றன

இனிநடப்பதுநல்லதாகவேநடக்கும்

இனிநடப்பதுநல்லதாகவேநடக்கும் ஒருகனவுஎனஅதுசொல்லப்பட்டது. ஒன்பதுமாதங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறவேளையில் சொல்லப்படுகிறது,அதன் பெயர் யுத்தநிறுத்தமென்று. யுத்தநிறுத்தம் நீடிப்பது,சமாதனப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதுயாவும் சம்பந்தப்பட்ட இரண்டுதனப்பினரதும் பொறுமை,சகிப்புத் தன்மை,நல்லெண்ணங்களின் நிலைப்பாடுபோன்றவற்றிலேயேதங்கியிருக்கின்றது. ஒருதரப்போ, இரு தரப்புகளுமோ இதில் ஒன்றையோ பலவற்றையோ கைவிடுகிற நிலைமையில்தான் பிரச்னை மறுஉருவெடுக்கிறது. நம் நம்பிக்கையின் மூலம் சிதறுகிறவிதம் இதுதான். இலங்கையில் பலகாலங்களிலும் ஏற்பட்டயுத்தநிறுத்தங்கள்,சமரசமுயற்சிகள் யாவும் இவ்வளவுநிதானமாகவும் நீண்டகாலமாகவும் முன்னெடுக்கப்பட்டதில்லைஎன்பதைவரலாறுஅழுத்தமாகச் சொல்லிநிற்கிறது. இந்தயுத்தநிறுத்தம் குலைவுறுவதற்கான சாத்தியங்கள் அரிது. சமாதானமுயற்சிகள் மிகவலுவான தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அதற்கான ஒருகாரணமாகச் சொல்லலாம். புலிகள் அரசியல்ரீதியாக இனப் பிரச்னைக்கான தீர்வைமுன்னெடுக்க இசைந்திருப்பது இன்னொருகாரணம். நோர்வேயின் சமரசமுயற்சிகளில் அமெரிக்காவினதுபோன்ற சட்டம்பித்தனம் இல்லாமல் ஒருதேவதூதத் தனம் இருந