Posts

Showing posts from June, 2016

தேவகாந்தன்நேர்காணல்- மூன்றாம் பகுதி

தேவகாந்தன்நேர்காணல் நேர்கண்டவர்: பதிவுகள் இணைய தளத்துக்காக வ.ந.கிரிதரன்   மூன்றாம் பகுதி 1.பதிவுகள் : அண்மையில் வெளியான அ-புனைவுகளில் மிகவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நூல் தமிழினியின் ' ஒரு கூர்வாளின் நிழலில் '.  விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான ஆளூமையொருவரின் சுயசரிதையான இந்த நூல் அதன் காரணமாகவே வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதுகின்றோம் . தன்னைச்சுயவிமர்சனம் செய்வதன் மூலம் மெளனிக்கப்பட்ட தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் முக்கிய அமைப்பான விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனமாகவும் இந்த நூல் விளங்குவதாகக் கருதுகின்றோம் . இது போன்ற நூல்கள் ஆரோக்கியமான விளைவுகளையே தருவதாகவும் நாம் கருதுகின்றோம் . மேலும் ஒரு குறிப்பிட்ட கால வரலாற்றை ஆவணப்படுத்தும் வகையிலும் இந்த நூல் முக்கியத்துவம் பெறுவதாகவும் கருதுகின்றோம் . இந்த நூலை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததா ? வாசித்திருந்தால் இந்நூல் பற்றிய உங்கள் எண்ணங்களையும் ' பதிவுகள் ' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா ? தேவகாந்தன் : தமிழ்நாட்டி