Posts

கலாபன் கதை: 11

இருந்தால் மனைவி! போனால் பரத்தை! 1985இல் வீடு திரும்பிய கலாபன் மறுபடி கப்பலெடுப்பதற்கு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. ஒரு புதிய கார் வாங்கி, அதை யாழ்ப்பாணம் முழுக்க முழுவேகத்தில் ஓடித்திரிந்து, ஒருமுறை பருத்தித்;துறை செல்லும் வழியில் ஒரு மினிவானுடன் விபத்துக்குள்ளாகி, இரண்டு மாதங்களாக கராஜ்ஜுக்கு அலைந்து திருத்தியெடுத்து, அடுத்த ஆறாவது மாதம் வந்த விலைக்கு அதை விற்று என்று பல சீரழிவுகளையும் அனுபவித்த பின்னர்தான் அதுவும் முடிந்திருந்தது. கலாபன் எங்கோ அடிபட்டிருந்தான் என்பதை சிலகாலமாகவே நான் புரிந்துகொண்;டிருந்தேன். மெல்லவோ விழுங்கவோ முடியாத ஓர் மனவலியின் விளைவே அந்த அவனது வரம்புமீறிய குடியென்று ஊகிக்க பெரிய அனுபவமொன்றும் வேண்டியிருக்கவில்லை. ஆனாலும் வெளிப்படப் பேசி அவனை ஆறுதல்படுத்த அந்த ஊகத்தில் தெரிந்த காரணம்மட்டும் போதுமாயிருக்கவில்லை. மனமென்பதுதான் என்ன? உடலின் எந்தவிதமான உறுப்பாக இல்லாதும், உணர்வுகளின் ஊற்றாய் முழு மனித வாழ்வியக்கத்துக்குக் காரணமாயுமிருக்கிற ஒரு புள்ளிதானே! அது பலருக்கு நீராலானதாய் அமைந்திருப்பது விந்தைகளின் உச்சம். நீர் சிறிய காற்றினலைவுக்கும் சலனமாக...

சதுரக் கள்ளி (சிறுகதை)

சதுரக் கள்ளி அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது தலையசைப்பதுபோன்ற காட்சி. எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பவைக்கிற காட்சியாகவிருந்தது அது. அவன் அலறிக்கொண்டும் எழுந்திருக்கலாம். ஏன் ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா? என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் தெளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ? இருக்கலாம். அது அவனது நினைவுகளின் முக்கியமான கூறினைக் கொண்டிருந்த இடமா...

இனப் படுகொலைகளும்

இனப் படுகொலைகளும் உலக நாடுகளின் மவுனங்களும் -தேவகாந்தன்- யுத்த காலக் குற்றங்களுக்காக சிறீலங்கா அரசு, குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்கள் உட்பட சில அமைச்சரவை உறுப்பினர்களும், சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணைப் படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்படுகின்ற தருணத்தில், யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தும் எந்த சர்வதேச அமைப்பின் முன்னரும் சாட்சியமளிக்கத் தயாராகவிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசினால் கைதுசெய்யப்பட்ட செய்தி புதியதில்லை. புதுமையானதும் இல்லை. இதுவும் இன்னும் இதுபோன்ற பலவும் எதிர்பார்க்கப்பட்டவைதான். ஏறக்குறைய சர்வாதிகார ஆட்சியின் நிலைமையை அடைந்திருக்கும் சிறீலங்காவுக்கெதிரான சர்வதேசத்தின் குரல் மவுனித்திருப்பதுதான் இதில் முக்கியமான விஷயம். ஆனாலும் இந்த உரைக்கட்டில் அதுபற்றி நான் அலசப்போவதில்லை. திட்டமிட்ட ஓர் இனப்படுகொலையை நடத்திக்கொண்டிருக்கும் சிறீலங்கா, சர்வதேசத்தின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கிறதா என்பதுபற்றியும், உலகின் பல பாகங்களிலும், குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இரு தசாப்த காலத்துள் நடந்துள்ள இனப்படுகொலைகளையும், அக்காலங்களில் இந்த சர்வதேச சம...

கலாபன் கதை: 10

கப்பல், சமுத்திரம், பெண் எண்பதுகளின் ஆரம்பத்தை கப்பற்றொழில் படுமோசமாக வீழ்ச்சியடைந்த காலமாகச் சொல்லமுடியும். தானியம் ஏற்றிச் செல்வதற்கும், எண்ணெய் ஏற்றிச் செல்வதற்கும் உதிரிச் சாமான்களை கொன்டெயினர் எனப்படும் பெரும் உலோகப் பெட்டிகளில் போட்டு அவ்வாறான நூறு நூறு பெட்டிகளை ஏற்றிச் செல்வதற்குமான மிகப்பெரும் கப்பல்கள் கட்டப்பட்ட காலம் அது. புதிய கப்பலை பழைய கப்பலின் பாதித் தொகை மாலுமிகளோடேயே செலுத்த முடிந்திருந்தது. மட்டுமில்லை. கடற் பயண காலமும் முக்கால் பங்காகக் குறைந்தது. அதனால் கப்பல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பன்னூறு கப்பல்கள் தொழிலிழந்தன. பழைய கப்பல்கள் இரும்பு விலைக்கு விற்கப்பட்டன. நடுத்தரப் புதிதான கப்பல்களே ஏற்றிச் செல்ல சாமான்கள் இன்றி துறைமுகங்களுக்கு முன்னால் நங்கூரங்களில் தூங்கிக்கொண்டு கிடந்தன. ஒரு காலத்தில் கப்பற்றொழிலில் ஏக சக்கராதிபத்தியம் செலுத்திவந்த கிரேக்கம்கூட அதனால் ஆட்டம் கண்டது. அக்காலப் பகுதியில் நடுத்தரப் புதிதான எம்.வி.எக்செலேன்ட் என்ற ஒரு கிரேக்கக் கப்பலில் வேலைசெய்து கொண்டிருந்தான் கலாபன். அதுவரையான கப்பற்றொழில் காலத்தில் கலாபன் அலுப்படைந்திருந்தது அ...

கலாபன் கதை: 9

ஒரு கூண்டும் சில மஞ்சள் கிளிகளும் லண்டன் துறைமுகத்தில் ஈரானியப் பெண்ணினதும், கப்பலின் இரண்டாவது அலுவலரினதும் காதலைக் கேட்ட பிறகு, கலாபன் அதிர்வுகளை அடைந்திருந்தானெனினும் மாறிப் போய்விடவில்லை. உள்ளுள்ளாய் ஒரு தினவு விளைந்துகொண்டே இருந்தது. ஆனால் அது அவன் முந்திய கப்பல்களில் இருந்ததுபோன்ற அளவுக்கோ, முறைமையிலோ இருக்கவில்லைத்தான். அந்த உண்மை தென்கொரியாவில் தெரியவந்தது. அவனே அறிய அது தெரியவந்தது என்பதே அதன் விசேடம். புசான் என்கிற தென்கொரிய துறைமுகத்தை அவனது கப்பல் அடைந்தபோது நண்பகலை அண்மிக்கின்ற பொழுதாகவிருந்தது. கடந்த ஒரு வாரமாக புசான் துறைமுகம்பற்றிய பேச்சாகவிருந்த கப்பலில், அந்த நிமிடத்திலிருந்து உற்சாகம் கரைபுரள ஆரம்பித்துவிட்டது. இரவு வேலை முடித்துவந்த கலாபன் உறக்கம் கலைந்து மதிய உணவை முடித்துவிட்டு கீழே மாலுமிகள் உணவறைக்குச் சென்றபோது, இரண்டொருவரைத் தவிர மீதிப்பேரைக் காணக்கிடைக்கவில்லை. கபின்களுக்குச் செல்லும் நடைபாதையில் ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்க கலாபன் தன் புதிய நண்பன் ரோனியின் அறைக்குச் சென்றான். அங்கேயும் லேசான மது பாவனையும் சல்லாபம்பற்றிய பேச்சுமாகவே இருந்தது. ...

கலாபன் கதை: 8

கப்பலைத் தூக்கி அப்பால் இறக்கிவிட்ட விந்தை மூன்றாவது கப்பல் பொறியாளராக கலாபன் வேலைசெய்ய ஏறிய ஆ.ஏ.ளுநுயு டீஐசுனு என்ற அந்தக் கப்பல் அவனது வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தைக் கொடுத்திருந்தது. உலகத்தின் முக்கியமான இரண்டு கால்வாய்களினூடான பயணம் மறக்க முடியாததுதான். இவையெல்லாம் திட்டமிட்டோ, எதிர்பார்த்தோ நடப்பதில்லை. எங்கேயும் இதுவே நிலைமையெனினும், கப்பல் வர்த்தகத் துறையில் இது சத்தியமான வார்த்தை. எல்லா பயண அனுபவங்களையும் விழுங்கிவிடுகிற மாதிரி ஓர் அற்புதம் எதிர்பாராததும், திட்டமிட்டுமிராத ஒரு தருணத்தில் நடக்கச் செய்கிறது. அப்போது அதை அனுபவிப்பதுதான் விவேகம். கலாபன் அதை நன்குணர்ந்திருந்ததாகவே தெரிந்தது. சுயஸ் வழியைக் கடந்து கப்பல் மத்தியதரைக் கடலுள் பிரவேசிதுக்கொண்டிருந்த பொழுதில்தான் இரவு 12-04 வேலையை முடித்துக்கொண்டு தூங்கச் சென்ற கலாபன் எழுந்து மறுபடி வேலைக்குத் தயாராக வெளியே வந்திருந்தான். சுயஸ் கால்வாயின் மேற்புறமுள்ள நைல்நதி தீரத்து அழகில் எகிப்திய அழகுராணி கிளியோபாத்திரா அன்னப்படகில் ஏறி நிலவெறிக்கும் இரவுகளில் ஓரிரு சேடிகளுடன் மட்டும் மிதந்து களித்த அழகை, தன் மெல்லிய போத...

கலாபன் கதை: 7

ஒரு பெருவிபத்து தவிர்ந்த விதம் எண்பதுகளின் ஆரம்பம் அது. M.V.SEA BIRD என்ற கிரேக்க கப்பலில் வேலை செய்துகொண்டிருந்தான் கலாபன். கப்பலின் புதிய கட்டுமானம் அவனை எண்ணும்போதெல்லாம் வியக்கவைத்துக்கொண்டிருந்தது. எந்தப் பனிப் பாளத்தையும் தன் மூக்கினால் குத்தி உடைத்துக்கொண்டு முன்சென்று விடக்கூடியதாய் அதன் முன்முனை கட்டமைப்புக் கொண்டிருந்தது. ஒரு பிரமாண்டம் தன் எஃகு வடிவத்தின் வார்ப்பில் அலைகளில் அலைந்து திரிந்தது இறுமாந்து. அலைகள் தழுவவும், ஒருபோது அவையே சீறிச் சினந்து முட்டிமோதவும் செய்தபோது தழுவலைப்போலவே மோதல்களையும் தன் புன்சிரிப்பு மாறாமல் அது அநாயாசமாக ஏற்றுக்கொண்டிருந்ததாய்ப் பட்டது கலாபனுக்கு. அப்போது அதன் பயணம் சிங்கப்பூரிலிருந்து சுயஸ் கால்வாயினூடாக ஸ்பெயினை அடைவதாக இருந்தது. ஒரு நீண்ட விடுமுறையின் பின் துபாய் துறைமுகத்தில் நின்றிருந்த அந்தக் கப்பலில் அவன் வந்து சேர்ந்துகொண்ட தருணம் அற்புதமானது. முதன்முதலாக ஒரு மூன்றாம் நிலை கப்பல் பொறியியலாளனாக அவன் நியமனம் பெற்றிருந்தான் அந்தக் கொம்பனியிலே. சம்பளமும் மகிழ்ச்சிகரமானதாக அமைந்திருந்தது. கொழும்பு விமானநிலையத்திலிருந்து புறப்பட்...