Posts

Showing posts from 2022

சாம்பரில் திரண்ட சொற்கள் 8

Image
    15 வெளியே சுந்தரம் தூங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள் மலர். அது தூங்குகிற நேரமது. தூங்கி, விழித்த பின் படுக்கையில் கிடந்து என்ன செய்யுமோ? அப்போதும் தூங்குமென்றுதான் அவள் நினைத்திருக்கிறாள். கூடத்துள் அமைதி நிலவியிருந்தது. வெளி மரங்களில் குருவிகள் சில துயிலருண்டு கிலுகிலுத்து மறுபடி அமைதியாயின. தூரத்து நெடுஞ்சாலையில் கனரக வாகனங்களின் ‘சர்…’ரென்ற பேரிரைச்சல் அவ்வப்போது மெதுவாய் காற்றில் வந்தடைந்தது. அத்தகு சூழ்நிலை அவளுக்குப் பிடிக்கும். மனப் பறவையை கதவு திறந்து அவள் வெளிவிடுகிற சமயமது. அவளே கூட்டின் கதவு திறந்து பறவையை வெளிவிடும் சுதந்திரப் பிரகடனப்படுத்தல் இல்லையது. பறவையே தன் கூடு திறந்து வெளிவந்து அவள் கால காலமும் உலவிய இடமெல்லாம் பறந்துசென்று , அவள் கண்ட கனவுகளெல்லாம் மீளக் கண்டு, அவளனுபவித்த இன்பம் துன்பம் ஏக்கம் ஆதியவற்றுள்ளெல்லாம் மீண்டும் திளைத்துவிட்டு திரும்ப ஒரு சத்தத்தில்    ‘டபக்’கென கூட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு கதவைச் சாத்திவிடும் பெற்றி கொண்டது. அவளும் யதார்த்தத்தில் வந்து விழுந்து சமகால உடல் உபாதைகளையும் மன வேக்காடுகளையும் அனுபவிக்கத் துவங்கிவிடுவாள்.

சமகால இலங்கை நாவல்களில் முக்கியமான வரவு!

  தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’: (சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு)   தக்‌ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும்   கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப்

நாகமணி (சிறுகதை)

  திண்ணையில் கிடந்திருந்த நல்லதம்பி கண்விழித்தான். கிழக்கு மூலையில் இருட்டு மங்கத் துவங்கியிருந்தது, மறைப்புத் தட்டி மேலாகத் தெரிந்தது. வீட்டுக்குள் சென்று பயணத்தில் கொண்டுசெல்லும் மருந்துப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். சங்கமத்தில் கலைந்த கோலத்துடன், இன்னும் உடம்பலுப்புத் தீராதவளாய் திண்ணையிலே சாரல் கிடந்திருந்தாள். அவளை அருட்டி தான் புறப்படுவதைச் சொல்லிக்கொண்டு முற்றத்தில் இறங்கினான். பின்னால் சாரலின் குரல் எழுந்தது. ‘இனி எப்ப? ரண்டு மாசம் கழிச்சா, நாலு மாசம் கழிச்சா?’ அவன் திரும்பி இருட்டில் அவள் வெளிர் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். ‘இடைத்தூரம் பெரிசில்லை; நடைத்தூரந்தான். அங்க மினக்கெடுறது ரண்டாளுக்கு வைத்தியம் பாத்தா நாலு காசு கிடைக்குமெண்டுதான.’ ‘வேறயொண்டுக்குமில்லையே?’ அவளுக்கு அவனது முதல் சம்சாரம்பற்றித் தெரியும். அவன் அவளது காதோரம் வளைந்து இன்னும் லேசாய்க் கூந்தலில் இழைந்த பயறு வெந்தயம் எலுமிச்சைகளின் வாசத்தை முகர்ந்தபடி, ‘கெதியில வருவ’னென்றுவிட்டு   நடக்கத் துவங்கினான். அந்த நேரத்துக்கு அங்கிருந்து புறப்பட்டால்தான் தொட்டம் தொட்டமாய் இருக்கும் கிராமங்களை

சாம்பரில் திரண்ட சொற்கள் 7

Image
  7 பாட்டியின் கடந்துபோன காலத்தோடு பொருத்திப்பார்க்கையில் அவளை அதிகமும் அணுக மறுத்திருந்த முதுமை, அவள் சந்தை வியாபாரம் தொடங்கிய பின்னால் அவளில் ஆண்டுக்கு இரண்டிரண்டு வயதாக ஏறிக்கொண்டதுபோல் தென்பட்டது. அதனால் செம்பவளமாக இருந்தவள் விரைவிலேயே எவருக்கும் பவளமக்கா ஆகிப்போனாள். குழந்தை பிறக்காத உடம்பில் இளமை வலிமையாய்த் திரண்டதே தவிர மதர்ப்பாய் வீறுகொள்ளவில்லை. அது விரும்பத் தகுந்த ஓர் அற்புதத்தை அந்த உடம்பில் நிகழ்த்தியிருந்தது. நடனசுந்தரம் அப்போது பிறந்தேயிருக்கவில்லை. அக் கதையெல்லாம் உறவினர் பேச்சுக்களில் அவனுக்கு அவதானமாகியிருந்தன. கொடிகாமம் சந்தையில் வியாபாரம் அவளைக் கைவிடாவிட்டாலும், வடமராட்சிக் காய்கறிகள் சாவகச்சேரிச் சந்தையில்தான் கியாதியாக விலைபோகின. பருத்தித்துறை - சாவகச்சேரி முதல் பஸ்ஸில் சந்தைக்கு வந்து ஐந்தரை மணி கடைசி பஸ்ஸில் வீடு செல்வதை மூன்று சந்தைககளில் செய்தால்போதும், அவளுக்கென்று நாலு காசு கையிலேயிருக்க பலனுண்டாகிவிடும். பவளமக்காவாக வியாபாரத்தைத் தொடர்ந்தவள், பவளமாச்சியாகிய காலத்தில் அதையும் நிறுத்திக்கொண்டாள். யாருக்காக அவள் அதற்குமேல் பிரயாசைப்பட? அவளுக்கிருந்த