Posts

Showing posts with the label sanga ilakkiyam

கலித்தொகைக் காட்சி: 8

‘திங்களைத்  தேன்கூடென எண்ணி  ஏணிகட்டும் குறிஞ்சிநில  மக்கள்’ இலக்கியத்தில் கற்பனை என்பதுபற்றி மேலைநாட்டு விமர்சகர்களிலிருந்து, அவர்களது சிந்தனை அடித்தளத்தில் நின்று இவவ்வகையில் சிந்திக்கின்ற தமிழ்நாட்டு விமர்சகர்கள்வரை ஒத்த அபிப்பிராயம் நிலவுவதாகத் தெரியவில்லை. இலக்கியத்தில் எந்தளவுக்குக் கற்பனையைப் புகுத்தலாம் என்பதுபற்றியும், இலக்கியத்தில் கற்பனையைப் புகுத்தலாமா கூடாதா என்பதுபற்றியும் பலமான விவாதங்கள் கிளம்பி ஓய்ந்திருக்கின்றன. யதார்த்தமான கற்பனையை இலக்கியத்தில் புகுத்துவது இலக்கியரசனைக்கு அவசியமானது என்ற கருத்தைப் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இலக்கிய விமர்சனம் பண்படுத்தப்பட்டு செழித்து வளர்ந்துள்ள இன்றைய இருபதாம் நூற்றாண்டு முடிவு இது. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலித்தொகைக் காலத்திலே கற்பனை ஒன்று வருகின்றது. அது யதார்த்தமானதா என்று கேட்டால் இல்லையென ஒரேயடியாகப் பதில் சொல்லிவிட முடியும். ஆனால் அது இனிமை பயக்கிறதாஎன்று கேட்டால் இனிமை பயக்கிறது என்றுதான் கூறவேண்டும். குறிஞ்சிநிலத்திலே புணர்தல் நிகழ்தற்கும், அது பகற்குறி, இருவுக்குறிஎன்பதோடு ...

கலித்தொகைக் காட்சி: 7

‘எமனைஎதிர்த்துநிற்கும் வீரமிக்கதலைவன்’ சங்ககாலத்திலிருந்தவீரமதவழிபாடு -தேவகாந்தன் வேங்கடம் முதல் குமரிவரை பரந்துபட்ட தமிழ் மண்ணிலே ஆடவர், பெண்டிர் அனைவருக்குமே வீரம் ஒரு பொதுமதமாக விளங்கியது. சங்ககாலத்திலிருந்த இந்த மதநெறியை வீரமதமாக மக்கள் போற்றினர். பின்னாளில் வீரம் என்பது ஒரு வெறியாகவும்,  கொலைச் செயலாகவும் கருதப்பட்டதோடு  வீரமத வழிபாடு  மறைந்து  பக்தி மதவாழிபாடு தோன்றியது.  தமிழினத்தின் வீழ்ச்சி  களப்பரரின் ஆட்சியோடு தொடங்குவதும்  கவனிக்கத் தக்கது. ‘நாமார்க்கும்  குடியல்லோம்’ என்று  அரசஆணையை  எதிர்த்து போர்த் துவஜம் தூக்கிய  முதற் தமிழ் மகன் நாவுக்கரசர், ‘நமனை  அஞ்சோம்’ என்று கூறுகிறார். அரன் நிழலைச் சரண் அடைந்த அந்த நெஞ்சத்திலே கூற்றுவனுக்கு எதிர்நிற்கும் ஆற்றல் மிக்கிருந்தது. போற்றுதலுக்குரியதுதான் இது. ஆனால்,  வீரமதத்தை  வழிபாட்டு  நெறியாகக் கொண்டுச ங்ககாலத்திலேயே  யமனுக்கு எதிராக நெஞ்சுநிமிர்த்தி நின்ற சங்கத் தமிழ்மகனை, குறிஞ்சிக்கலி  நமக்குக் காட்டுகின்றது  எனக் கூறின் வியப்புத் தர...

கலித்தொகைக் காட்சி: 6

‘அறம் அல்லவற்றைச் செய்தால் இயற்கையேபொய்த்துவிடும்’ -தேவகாந்தன் அகனைந்திணையின்படி குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்தல் ஆகும். கலித்தொகையில் இத்திணைக்குரிய இடம் இரண்டாவது. பாலைக்கலியின் பிரிவுத்துயரிலே வாடிய  தமிழ் நெஞ்சங்கள் மலைச் சாரல் அழகையும், அம்மலைகளினடியிலே தவழுகின்ற இளம் குழவியான  தேன் நிலவின் எழிலையும், அதுபற்றிய  புலவனின் கற்பனையையும்,  தலைவியர் கற்பையும், சமுதாய நெறியையும், வாழ்க்கை முறையையும் கண்டு களிப்படையமுடியும். ‘குறிஞ்சிபாடக் கபிலன்’ என்பது முதுமொழி. குறிஞ்சிக் கலியைப் பாடியிருப்பவரும் கபிலரே என்று சில தமிழாராய்ச்சி வல்லுனர் துணிந்துள்ளனர். இன்னும் சிலர் தொகுக்கப்பட்ட அச் செய்யுட்களைப் பல புலவர் பாடினர் என்பர்.  இது ஆய்வுக்குரிய  விடயம். ஆகவே அவ்வாராய்ச்சியை  விடுத்து இங்கு காட்சிகளைக் கவனிப்போம். தமிழிலக்கியங்களை எடுத்துப் பொதுவாக நோக்கினால் ஐந்து ஒழுக்கங்களிலும் ஒருவகைப் பிரிவின் துயரே   காணக்கிடக்கின்றது. தலைவனும் தலைவியும்  ஒருவரை  ஒருவர் சந்திப்பதற்கும் பின்னர் அவர்கள் சந்திக்கும் பகற்குறி இரவுக்குறி ...

கலித்தொகைக் காட்சி: 5

‘குடும்பதத்துவத்தை விளக்கும் பாலைநிலத்து யானைகள்’ தலைவனைப் பிரிந்ததலைவியர் ‘அறன் இன்றி அயல் தூற்றும்’ நிலையில் மாத்திரமல்ல, சமுதாயத்திலே புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், ஆதரவற்று நடுவீதியிலே கிடப்பவர்களாகவும் கூட ஆகிவிடுகின்றனர். பெண்மை மென்மையானதாகவும், ஆண்மை வன்மையானதாகவும் இருக்கின்றவேளையில், மென்தன்மையுடைய பெண்ணுக்கு ஆணே பாதுகாப்பளிக்க வருகின்றான். இந்நிலையில் தலைவன் பிரிந்துவிட்டால் தலைவியின் நிலை ஆதரவற்றதாவதில் ஆச்சரியமில்லை. ‘தோள்நலம் உண்டுதுறக்கப்பட்டோர் வேணீர் உண்டகுடைஓர் அன்னர், நல்குநர் புரிந்துநலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர், கூடினர் பிரிந்துகுணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓர் அன்னர்’ என்று கலித்தொகையின் இருபத்திரண்டாம் செய்யுள் கூறுகிறது. ஆம், தலைவனைப் பிரிந்த தலைவியர் நீர் அருந்திய பின் வீசப்பட்ட ஓலையில் முடைந்த பாத்திரமாகவும், மக்கள் பிரிந்துவிட வெறிச்சோடிக் கிடக்கும் பாழ்பட்டகிராமமாகவும், வெளியே வீசப்பட்ட வாடிய மாலையாகவும் கணிக்கப்படுவர். அந்த நிலையில் பயனற்று, வெறுத்து, நல்ல தன்மையிழந்து கிடக்கும் அந்தநிலையை, நாம் பார்க்கிறபோது, தலைவியரின...

கலித்தொகைக் காட்சி: 4

‘பிரிவினால் துயருறும் கலித்தொகைத் தலைவி’ -தேவகாந்தன் ‘விறல் மலைவெம்பிய  போக்கரும் வெஞ்சுரம்’  மேவிவிட்டான் தலைவன். இந்தப் பிரிவால் துயருழப்பது இறைவன் வகுத்தவிதிமாதிரி, தமிழிலக்கியம் பாலைநிலத் தலைவிக்கு  வகுத்துவிட்ட  விதியாகும். தலைவர் பிரிவும், தலைவிவியர் துயரும்தான் அகத்திணைச் செய்யுள்களுள்ளே இன்சுவை ப யப்பன. அதனால்தான்போலும் நானூறு பாடல்களைக்கொண்ட அகநானூற்றிலே இருநூறு பாலைத் திணைச் செய்யுள்களாக இருக்கின்றன. ஆங்கில இலக்கியத்திலும்  இத்தகைய  பிரிவுத் துயரப்  பாடல்களே  அதிகம் என்கிறார் ஐ.எம்.முர்ரே. அந்தச் சுவை  பிரிவிலேதான் என்றால் நாமும் பாலையைவிட்டு  ஏன் விலகவேண்டும்? பாலையென்பது  பிரிவுத் துயரடைந்த  தலைவியரின் பொறுமை  நிலை. ‘பசப்புறுபருவரல் ’என இலக்கணம் இதனைக் கூறும். பசப்புஎன்பதும் பசலைஎன்பதும் ஒன்றே. ‘பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க வாடுபு களைப்போடி வளங்கிறை வளை ஊர..’ வாடுகின்றாள் தலைவி. தலைவியின் இந்த  நிலையில் அவள் முகத்தை  கலித்தொகை, ‘பாழ்பட்ட முகம்’ என்று கூறுகிறது. பாழ் என்ற  ...

கலித்தொகைக் காட்சி: 3

‘தலைவனுடன் செல்லுதலை ‘பிரிதலறம்’என இலக்கியம் போற்றுகிறது’ -தேவகாந்தன் பாலைநில வழி. நெடுவேல் நெடுந்தகையுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் தலைவி. கொஞ்சுமொழி பேசும் பைங்கிளி, பந்தாடிய ஆயம் அத்தனையும் மறந்து, பெற்றதாய், செவிலித்தாய், உயிர்த் தோழி ஆகியோரைப் பிரிந்து பாலைநில வழியிலே தலைவனைப் பின்பற்றிவிட்டாள். ‘தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’ என்று தேவாரம் கூறும். கடவுள் ஆன்மாத் தத்துவம்போல ‘சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்’ என்கிற பாலைக் கலியின் வரி தலைவனைப் பின்பற்றிய தலைவியின் நிலையைப் புலப்படுத்துகிறது. கங்குல் புலராத காலைநேரம் அது. பாலைநில வழியில் போய்க்கொண்டிருக்கிற தலைவனையும் தலைவியையும் அந்தணர் சிலர் கடந்துவருகின்றனர். தலைவியின் அச்சமும், தலைவனின் நிலைமையும் அவர்களுடைய மனத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மென்மையான முறுவலொன்று அவர்களுடைய இதழ்க் கோடியிலே ஜனித்து மடிகிறது. அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து நடந்துவிடுகின்றனர். மகள் தன்னைப் பிரிந்துவிட்டாள் என்று  தாய்க்குத் தெரியவருகிறது. தன்னுடைய மகளை பாவையரோடு பந்தாடும் சிறுமியாகவேஅவள் எண்ணியிருக்கிறாள். பெற்றதாயின் பெருஞ்சி...

கலித்தொகைக் காட்சி:2

‘உடன்போக்குப் பாலை  சங்க மகளிரின் அன்புநெறி’ ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’என்பதுபொய்யாமொழி. மன்னவன் நடுவுநிலைநீங்காமல் நாட்டைக் காக்கவேண்டும், அப்போது அமைதி தழைக்கும். இல்லறத்தார் இரப்பவர்க்கு ஈயவேண்டும், அப்போது அறம் பெருகும். நாட்டிலே நிறைந்தஅமைதியும், இல்லங்கள் வளர்க்கும் அறமும் செம்மையான வாழ்வின் அறிகுறிகளாகுமென கலித்தொகை போற்றுகின்றது. பொருள் இல்லறத்தார்க்கு அவசியம் என்பது வெளிப்படை. ஆனால் அந்தப் பொருள் மலைகள் தாண்டியோ, கடல் கடந்தோ எவ்வித இடரினிடையும் வருந்திச் சேர்க்கப்படவேண்டுமே தவிர, செம்மையிலிருந்து பிறழ்ந்து சேர்க்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அப்படிச் சேர்க்கப்படுகிற பொருள் இம்மைக்கு மாத்திரமல்ல, மறுமைக்கும் கேடு விளைக்கும் என்கிற நம்பிக்கை சங்ககால மக்களின் மனத்திடையே ஊறிக்கிடந்தது என்பது, ‘செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள்  இம்மையும் மறுமையும் பகையாவதறியாயோ..’என்ற பாலைக் கலியின்  பதின்மூன்றாம் செய்யுளால் அறியப் படுகிறது. பொருளின் அவசியத்தையும், அது  எவ்வழியில் ஈட்டப்படவேண்டும் என்பதையும் அறிந்த  தலைவன் ஒருவன் பொருளீட்டப் புற...

கலித்தொகைக் காட்சி - 1

‘இரந்தார்க்கு  ஈய முடியாமை  இழிவெனக் கொண்டனர் சங்ககால  மக்கள்’ சங்கத் தொகை நூல்களுள்ளே கற்றறிந்தார் போற்றும் தொகைநூல் கலித்தொகை. இந்நூலைப் பொதுவாக சங்ககாலத்ததெனக் கொண்டாலும் இதிலுள்ள சில பாடல்கள் சங்கமருவிய காலத்தவை என்பதை இலங்கைத் தமிழறிஞர் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒருசெய்யுள் எந்தக் காலப் பகுதியைச் சேர்ந்தது என்பதை அதன் சொற்றொடர், பொருள், மரபு, மக்கள் வாழ்க்கைமுறை முதலியவற்றிலிருந்து பகுத்துணரமுடியுமென்பது மொழிவல்லுநர் கருத்து. இந்தவகையில் சிலசெய்யுள்களைசங்ககாலத்தைவையெனக் கொண்டாலும் பொதுவாக கலித்தொகைப் பாக்கள் சங்ககாலத்து மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைஅறிந்துகொள்ளச் சாலவும் உதவுகின்றன. எனவேகலித்தொகைச் செய்யுள்களின்மூலம் மக்களின் பண்பாட்டையும்,கற்றறிந்தோர் ஏற்றக் காரணமானஅதன் இனிமை, எளிமை, செழுமைகளையும் காண்போம். பாலை என்பது‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுயருறுத்து பாலையென்பதோர் படிவம் கொள்ளும்’எனத் தொல்காப்பியம் உரைக்கின்றது. அகத்திணையுள் பாலைக்குரியஒழுக்கம் பிரிதல் ஆகும். இந்தப் பிரிவு பல திறத்ததாய் அமையும். ‘ஓரா தூது...