கலித்தொகைக் காட்சி: 7


‘எமனைஎதிர்த்துநிற்கும் வீரமிக்கதலைவன்’
சங்ககாலத்திலிருந்தவீரமதவழிபாடு
-தேவகாந்தன்

வேங்கடம் முதல் குமரிவரை பரந்துபட்ட தமிழ் மண்ணிலே ஆடவர், பெண்டிர் அனைவருக்குமே வீரம் ஒரு பொதுமதமாக விளங்கியது. சங்ககாலத்திலிருந்த இந்த மதநெறியை வீரமதமாக மக்கள் போற்றினர். பின்னாளில் வீரம் என்பது ஒரு வெறியாகவும்,  கொலைச் செயலாகவும் கருதப்பட்டதோடு  வீரமத வழிபாடு  மறைந்து  பக்தி மதவாழிபாடு தோன்றியது.  தமிழினத்தின் வீழ்ச்சி  களப்பரரின் ஆட்சியோடு தொடங்குவதும்  கவனிக்கத் தக்கது.

‘நாமார்க்கும்  குடியல்லோம்’ என்று  அரசஆணையை  எதிர்த்து போர்த் துவஜம் தூக்கிய  முதற் தமிழ் மகன் நாவுக்கரசர், ‘நமனை  அஞ்சோம்’ என்று கூறுகிறார். அரன் நிழலைச் சரண் அடைந்த அந்த நெஞ்சத்திலே கூற்றுவனுக்கு எதிர்நிற்கும் ஆற்றல் மிக்கிருந்தது. போற்றுதலுக்குரியதுதான் இது. ஆனால்,  வீரமதத்தை  வழிபாட்டு  நெறியாகக் கொண்டுச ங்ககாலத்திலேயே  யமனுக்கு எதிராக நெஞ்சுநிமிர்த்தி நின்ற சங்கத் தமிழ்மகனை, குறிஞ்சிக்கலி  நமக்குக் காட்டுகின்றது  எனக் கூறின் வியப்புத் தரும்.

ஆம், வீரத்தை மதமாகவழிபட்ட சங்ககாலத்திலே யமனுக்கு எதிராககநிற்கிறான் ஒரு தமிழ்மகன். போர் என்று கூறி இயமனே வந்தாலும் அவனுக்கு அஞ்சிநிற்காதவன் தலைவன் என்று, தலைவனின் பண்பை விளக்கவந்த  குறிஞ்சிக்கலியின் ஏழாம் பாடலிலே  புலவர் கூறுகின்றார். ‘பகையெனின் கூற்றம் வரினும் தொலையான்’  என்பது அப்பாடல் அடி.

இந்தஅஞ்சாமை, எறியும் வேலுக்கெதிரே இமையாக் கண்ணுடைய வீரத்தினால் விளைந்தது. இதுவே தூயவீரம். இத்தகைய  வீரம் பிற்காலத்தில் இகழப்பட, பக்திமதம் தோன்றியது. இந்த மதவழிபாட்டுக் காலத்தில் தமிழினம் வீரத்தை மறந்ததுபோலவே நாட்டினை மறந்தது, இனத்தை மறந்தது, மொழியை மறந்தது. இந்த தூங்கிவிட்டஉணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதற்கே ஒரு பாரதி தேவைப்படும்  அளவுக்கு  தங்கள் வரலாற்றை மறந்துவிட்டனர் தமிழர். பக்திமதம் பரவியதாலும், வீரமதம் மறைந்ததாலும் தமிழ்மக்கள் மத்தியிலேற்பட்ட  துயரவரலாறு இதுவாகும்.

தலைவனைப் பிரிந்துவிட்டால் தலைவியின் நிலை  எப்படி இருக்கும் என்பதையெல்லாம் கலித்தொகைக் காட்சி ஏற்கனவே விளக்கியிருக்கின்றது. இவ்வாறு துயருழக்கின்ற தலைவி, தலைவனைக் கண்டன்றி ஆறுதல் கொள்ளாள். தளர்ந்த தோள்களும், நெகிழ்ந்த முன்கைகளும் மீண்டும் அந்த நிலையை அடைய தலைவனே எதிர்வரவேண்டும். அப்போதுதான் இது சாத்தியமாகும்.

ஆனால், குறிஞ்சிக் கலியின் ஏழாம் செய்யுள் நமக்கு வேறுமாதிரியான ஒரு காட்சியைக் காட்டுகின்றது.  தலைவனைக் காணாதநிலையில் தோழியிடம் தலைவி கூறுகிறாள், ‘தலைவனின் பெருமையைப் பாடுவாயாக, அதனாலாவது கொஞ் சநிம்மதியேனும் கிடைக்கிறதா பார்ப்போம்’ என்று.

 உடனே தோழி தலைவனின் அருங் குணங்களைப் பாடுகின்றாள். ‘தன் நாட்டார்க்குத் தோற்றலை  நாணாதவன்’ என்றெல்லாம் அவள் பாட தலைவியின் தோள்கள் பழைய நிலையைஅடைந்தனவாம்.

அதை விளக்குகின்ற பாடலடி இது:
அவர் திறம் பாடஎன் தோழிக்கு
வாடியமென்தோள் வீங்கின’ (குறிஞ்சிக் கலி 7)
அவனுடையபெருமைககளின் நினைப்பே தலைவியின் நிலையை மாற்றினவென்றால் தலைவனின் கீர்த்தியும், தலைவியின் நெஞ்சமும், தோழியின் திறமும் எமக்குப் புலனாகின்றதன்றோ?

000

ஈழநாடுவாரமார், 03.03.1969




Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்