Posts

Showing posts from December, 2009

இனியும், தமிழர் அரசியலும்

வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக்கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்துகொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வராலாறு திரும்பத் திரும்ப ‘போல’ வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும், 2009இல் பெரிய அழிவோடும், முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்கமுடியும். சற்றொப்ப இரண்டரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாங்களில் படும் அவஸ்த்தைகளை தினமும்தான் ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்துகொண்டிருக்கிறது. இதற்கும் மேலாக ஐம்பதினாயிரம் தமிழர்கள் குழந்தைகள், பெண்கள், ஆண்களாக கொலைப்பட்டிருக்கிறார்கள் என்பது அதற்கும் மேலான துயரத்தை விளைப்பது. மட்டுமா? ஒரு நூற்றாண்டில் கட்டியெழுப்பப்பட முடியாத பொருளாதார, கல்விப்புல, ஆள்புல இழப்புக்கள் நேர்ந்துள்ளதை எந்த இழப்புக் களத்தில் வைத்துப் புரிந்துகொள்வது என்பது புரிபடவேயில்லை. ஆக, திரும்பத் திரும்ப வரும் இந்த அழிச்சாட்டியங்களுக்;கான ஒரு தவறு தமிழர் அரசியலில் ஆரம்ப காலம்தொட்டு இருந்து வந்திருப்பதைய

கலாபன் கதை 6

என்னைக் கடிப்பாயா? நள்ளிரவிலும் சூரியன் எறித்திருக்கும் நாடு என்று அறியப்பட்டிருந்த சுவீடன்பற்றி பெரிதாக எதையும் அறிந்திருக்கவில்லை கலாபன். அது ஒரு வட அய்ரோப்பிய நாடு, குளிர் கூடிய தேசம், மிக்க பரப்பளவில் அதிகுறைந்த ஜனத் தொகையைக் கொண்டிருந்த பூமி என்பதும், அதன் அரசியலானது முடியின் அதிகாரம் கூடியதாகவும், அவ்வப்போது அதிகாரம்பெற்ற நாடாளுமன்றம் சில ஜனநாயக உரிமைகளை மக்களுக்காகப் பெற்றுக்கொடுத்தது என்பதும், இன்றும் வடஅய்ரோப்பாபோல் மானுட ஜனநாயக உரிமைகளை நிகராகப் பெற்றில்லாதது என்பதும், இதுவும் டென்மார்க், நோர்வே போன்ற முக்கியமான வடஅய்ரோப்பிய நாடுகளும் சேர்ந்து ஸ்கந்திநேவியா என அழைக்கப்பட்டன என்பதும் மட்டுமானவை அவன் கல்லூரியிலும் நூலகத்திலும் படித்தும் வாசித்தும் அறிந்திருந்தான். ஸ்கந்திநேவியாவின் பத்தாம் நூற்றாண்டளவிலான வைக்கிங் எனப்பட்ட கடல் மறவக் கொள்ளையர்பற்றி அண்மைய சினிமாக்களில்தான் அறிந்தான். இவையெதுவும் அவனது மனத்துக்குள் கிடந்து துடித்துக்கொண்டிருந்த ஆசையின் தவிப்பில், பெரிதாகக் கிளர்ந்தெழாத அம்சங்களாகவே இருந்தன. மேலும் தெரிந்துகொள்வதற்கிருந்த சூழ்நிலைமைகளையும் அந்த ஆசையானது