Posts

Showing posts from 2021

பெருமாள் (கதை)

      பெருமாள்   உச்சியிலிருந்து அடித்துச் சப்பளித்ததுபோல் அடர்ந்து சடைத்து கட்டையாக நின்றிருந்த அந்த முதிர் பூவரசு இன்னும் நின்றிருந்தது கண்டபோது , அந்த வீட்டில் ஒருகாலத்தில் குடியிருந்த பெருமாளதும் அவரது குடும்பத்தினதும் ஞாபகம் துரைசிங்கத்தினது மனத்தில் சாரலடித்தது . மிகவும் அண்டி வராமல் விலகியிருந்த   சக மனிதர்கள் இவ்வாறான எதிர்பாராத் தருணங்களில்தான் மனத்தில் உயிர்கொண்டெழுகிறார்கள் . முப்பது முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் அந்த ஊருக்கு குடும்பமாய் வந்து மலேசியா பென்சன்காரர் பொன்னம்பலத்தின் வெறுவீட்டில் அவர் புதிதாகக் குடியேறியபோது , அயல் சிறுவர்களிடத்திலெல்லாம் பெரும் குதூகலிப்பு ஏற்பட்டுப்போனது . அது பெரும்பாலும் நீண்டநாட்கள் நீடிக்கவில்லையென்றே சொல்லமுடிகிறது. கொழும்புப் புதினங்கள் அறிய விழைந்த பெரியவர்களின் ஆர்வத்திற்கும் கதி அதேதான். ஓடும் புளியம்பழமும்போல பழகவேண்டுமெனச் சொல்லிக்கொடுத்ததுபோல் அந்தக் குடும்பத்தில் எல்லோரும் விலகி விலகி நடந்துகொண்டார்கள். அவருக்கு பையன் பெண்ணாக ஒன்றுவிட்டு ஒன்றாய் ஆறேழு பிள்ளை

கத்யானா அமரசிங்ஹவின் ‘தரணி’ (நாவல்) பற்றி

Image
    ‘மொழிபெயர்ப்பானது கருத்தைப்போலவே படைப்பாளியின் அடையாளத்தையும் தவற விட்டுவிடக் கூடாது’   கத்யானா அமரசிங்ஹவின் மூன்றாவது சிங்கள நாவலான ‘தரணி’, எம்.ரிஷான் ஷெரீபின் மொழிபெயர்ப்பில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக சென்றவாண்டு (2020) வெளிவந்திருக்கிறது. சாருலதா அபயசேகர தேவரதந்திரியின் ‘Stories’ போன்ற வலு வீச்சானவை இலங்கை ஆங்கில நாவலுலகில் படைப்பாகிக்கொண்டிருக்கும் தருணத்தில், தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ள சிங்கள மொழி நாவலான ‘தரணி’   ஒரு வாசகனின் வாசிப்பார்வத்தை இயல்பாகவே கிளர்த்துவதாகும். எனது பிரவேசமும் அத்தகைய ஆர்வம் காரணமாகவே ஏற்பட்டது. ‘தரணி’யை விமர்சிப்பதில் ஒரு சிக்கலான நிலைமையை இயல்பாகவே எதிர்கொள்ள நேரும். மொழிபெயர்ப்புபற்றி பல்வேறு வகையானதும் புதிது புதிதானதுமான கருத்துக்கள் கூறப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கான கவிதைப் பெயர்ப்பு கவிஞனுக்கான ஒரு துரோகமென்றுகூட சொல்லப்பட்டுள்ளது. நாவல்கள் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, தழுவல் என்கிற பிரச்னைகளைத் தாண்டி அவ்வாறான கடுமையான கருத்துக்கள் பகரப்படவில்லையெனினும், ஒரு விஷயத்தை இங்கே அச்சொட்டாகப் பதிந்

புதிர் (கதை)

  புலம்பெயர் தேசத்திலிருந்து வந்து நாட்டில் கால் பதித்த வேளைமுதல் ஒரு கால் நூற்றாண்டுக் காலத்தின் மாற்றங்கள், அவன் பார்வையெங்கும் நிறைந்திருந்தன. தொலைக்காட்சிச் செய்திகள் வழி மனதில் விரிந்திருந்த கட்டமைப்புகள் காட்சி நிஜங்களுடன் மிக ஒத்துப்போனதில் அவன் பெரிய ஆச்சரியமெதனையும் அடைந்துவிடவில்லை. ஆனால் பிறந்து வளர்ந்து ஓடியாடி விளையாடிய தன்னூர் வந்தபோது…? பௌதீகத்தில் எந்த மாற்றமும் அற்றதாய் இன்னும் அது   பழைமையின் பிடியில் இருந்துகொண்டிருந்தது. அவனுக்கு அதிசயம் வந்தது.   இறுதி யுத்தத்தில் விழுந்த ஆழமான வடுக்கள் முற்றாகத் தீர்ந்ததாகவன்றி, யுத்தமே அந்த இடத்தைத் தாண்டிச் செல்லவில்லைப்போல, காலமே தன் தடம் பதிக்க அஞ்சி விலகிச் சென்றதான தோற்றங்கொண்டு இருந்தது. செல்வராணியின் புளிமா வளவு இன்னும் வெட்டையாயே இருக்கச் செய்தது. அதனண்டைய வளவுகளிலும் இரண்டொரு ஓலைக் குடிசைகள் அப்போதும் இருந்துகொண்டிருந்தன. ஒருவேளை அவையேகூட   பழைமை மாறாத அந்த உணர்வைத் தன்னுள் தோற்றியிருக்கலாமென ரமணீதரன் சதாசிவம் எண்ணினான். செல்வராணியின் புளிமா வளவு பின்னால் அவனது குணநலன்களை   உருவாக்கிய வகையில் முக்கியமானது. அதுபோல

நாகதடம் (கதை)

    சூரியன் நாளின் அந்தலை தெரிந்து மேற்கில் தன்னைப் புதைத்தது. பகலின் வெம்மை கெலித்திருந்த வறள் வெளியில் மென்குளிர் விரவுவது தெரிந்து, காற்று மனிதர்களை ஆசுவாசிக்க அதைத் தன் தோளேற்றி அசையத் துவங்கியது. அதுவொரு வைகாசி மாத முழுநிலா நாள். நாளின் விசேஷத்தில் நாகதம்பிரான் குடிற்கோயில் முன் பக்தர்கள் குழுமத் துவங்கியிருந்தார்கள். மங்கிய பெரு மஞ்சட் குடமென கீழ் வான விளிம்பில் நிலா எழுந்திருந்தும் மெல்லிய இருள் இன்னும்பாரித்திருந்த அவ்வேளையில், குடும்பங்கள் தொட்டம் தொட்டமாய் அமர்ந்து   தம் வளந்துகள் அடுப்பேற்ற ஆயத்தப்படுத்தின. நெடும்பாதையிலிருந்து பற்றைக் காடு தாண்டியதும் கோயில்வரை வளைந்து வளைந்து சென்ற பாதையில்   விழுந்திருந்த வெண்கோட்டினைக் குறிப்பாய்கொண்டு, மேலும் மேலுமான பக்தர்கள் நடந்தும் வண்டியிலும் டிராக்டரிலுமாய் ஊர்ந்து வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ஒரு காலத்தில் பெரும் வனமாயிருந்தது அது. யானை புலி கரடிபோன்ற மிருகங்களது வசிப்பிடத்தின் மய்யம் அதுவென மக்கள்   அச்சம் கொண்டிருந்தார்கள். பின்னாலேதான் வயல்கள் பெருக்கப் பெருக்க வனம் சிறுத்துச் சிறுத்து இன்றைய பரிமாணம் எய்திற்று.

சிவகாமி, நானுன் சிதம்பரனே (சிறுகதை)

  எட்டு மணி   தாண்டி அரை மணி நேரமாகியும் பரமகுருவை இன்னும் காணவில்லை. ‘5 ஸ்ரார்’ றெஸ்ரோறன்ரின் எதிர்ப் பக்க ஒற்றை வரிசை வாடிக்கையாளர் பார்க்கில் காரை நிறுத்திவிட்டு டெய்ஸி உள்ளே காத்திருந்தாள்.   அவருடனான ஒரு சந்திப்புக்கு   அவளிடம் முன்னேற்பாடேதும் இருந்திருக்கவில்லை. திடீரென யோசித்து, திடீரென போட்ட திட்டம். அதுபோல் முன்பும் அவள் செய்திருக்கிறாள். அவள் காத்திருப்பதும், அவர் வந்து எதையெதையோ சொல்லி அல்லது திட்டி அல்லது கோபித்து   கலைப்பதும் அவளுக்குப் புதியதில்லை. உள்ளிருந்து வெளியே வந்துபோகும் வாடிக்கையாளர் சிலரின் கண்களில் ஓடிய சபலத்தையும், நையாண்டியையும் துச்சமென எதிர்கொள்ளும் விதத்தில் நிமிர்ந்து பார்த்தபடி டெய்ஸி அவர் வரவு பார்த்திருந்தாள். அந்தக் காட்சி ‘5 ஸ்ரார்’ தமிழ் வாடிக்கையாளருக்கு அதிசயமாய்த் தென்படக் காரணமில்லை. அடிக்கடி இல்லாவிட்டாலும் அது நடப்பதுதான். இரண்டு கிளாஸ்   சிவப்பு வைனை விழுங்கிக்கொண்டுகூட   அவள் அங்கே வந்திருக்கலாம் என்பதையும் அவர்கள் அறிவார்கள். பரமகுருவும் டெய்ஸியும் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்கள் இன்னுமே கணவன் மனைவ