Posts

Showing posts from January, 2026

நினைவுக் குளியல் 2

  நினைவுக் குளியல்   2 வாசிப்பின் நெறிப்படுகை   பெரும்பாலும் பத்து வயதளவில் பள்ளியில் படிப்பவர்களுக்கு பள்ளிப் புத்தகங்களல்லாத வாசிப்புக்கு ஈர்ப்பு ஏற்படுமென்று எண்ணுகிறேன். அந்த வயதளவில்தான் அது எனக்கும் ஏற்பட்டது. வளர்ந்தவர்கள் வாசிப்பில் காட்டும் சிரத்தை, அதன் ஆழ்நிலைத் தியானம்போன்ற சலனமற்ற இருப்பு, அவர்களது வாசிப்பு ஸ்திதியின் கவர்ச்சிகளென எதுவும் அதற்கு விசை கொடுத்திருக்கலாம். அனேகமாக, ஒவ்வொரு நாள் மாலையிலும் எங்கள் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் ஒரு அண்ணன் வயற்கரையை நோக்கி ஒரு பசுமாட்டைச் சாய்த்துக்கொண்டு, ஆறுதலான நடையில் புத்தகமொன்றை வாசித்தபடி ஒழுங்கையில் நடந்துபோவதை பலமுறையும் நான் கண்டிருக்கிறேன். அவர் வாசித்தபடி நடக்கும் வேகத்திற்கேற்ப பசுமாடு மேய்ந்துகொண்டு போகுமா, அல்லது, மாடு மேய்ந்தபடி செல்லும் வேகத்துக்குத் தக அந்த அண்ணன் நடப்பாராவென அறுதியாய்ச் சொல்ல என்னால் முடியாது. ஆனால் அது எனக்கு பெரும் வியப்பாக அப்போதெல்லாம் இருந்துகொண்டிருந்தது. பக்கத்து வீட்டு மலரக்கா வெய்யில் சாய்ந்த வேளையில் புத்தகமொன்றோடு கிணற்றடியில் சாய்ந்து நின்ற கொய்யா மர...

கதை: சாப மோட்சம்

  சாப மோட்சம்   இமய மலைச் சாரல் விடிந்தது. கௌதமன் கண்கள் விழித்தன. என்றுமில்லாதபடி மனத்தில் தவிப்பு. தன்னந்தனியாகிவிட்ட வாழ்வின் ஸ்திதி பிரக்ஞையாகிற்று. அந்த துர்ப்பாக்கிய நாளின் பின், அந்த சம்பவத்தினதும் அவளதும் நினைப்பை அவன் அடைந்தே வந்திருந்தான்.   ஆனால் அவ்வாறான தீவிரத்திலல்ல. அந்த நாளின் நிகழ்வு கணம் கணமாய் அவனுள் ஊறியது. கோழி கூவுகிறது. கௌதமன் எழுந்து இன்னும் வெளிச்சக் கீறு அடிக்கத் துவங்கியிராத வைகறை இருளில் கால் வைக்கிறான். அந்த இருளும் வழமையான பனிமையற்றுக் கிடக்கிறது. மனத்தில் ஒரு இடையூற்றின் சமிக்ஞை. ஆனாலும் முனிவனாக இருப்பதாலேயே அந்தத் தயக்கத்தை அவன் வென்றாகவேண்டும். தன் தெளிவை நிரூபணமாக்க அவன் மேலே நடக்கிறான். நீராடி, அன்றைக்கு வேண்டிய ஹோமத்துக்கான தர்ப்பையும் சமித்துக்களும் சேகரித்துக்கொண்டு, மேலே சுணங்க மனதற்றவனாய் கொளதமன் ஓர் அவசரத்தில்போல் வருகிறான். இன்னும் விடிந்துவிடாப் பிரபஞ்சம் ஒரு கெடுதியின் தவிர்க்கமுடியாத முன்னறிவிப்பை அவனுக்குச் செய்கிறதா? பன்னசாலை நெருங்குகிறது. அவன் வேகம் அடங்கவில்லை. அந்தப்பொழுதில்தான் உள்ளிருந்தவர்களின் உச்சஸ...

நினைவுக் குளியல் 1

  நினைவுக் குளியல்    நினைவுகளைத் தேடித் தேடி ‘திகம்பர நினைவுக’ளாகவும், ‘கலாபன் கதை’களாகவும், ‘காலக் கனா’ மற்றும் ‘குருடர்க’ளாகவும் எழுதி தொகுப்புகளாக்கிய பின்னரும், மனத்தின் ஆழவும், அதன் பக்கங்களில் ஒட்டிக்கொண்டும் கிடந்து நினைவுகள் இன்னும் வெடித்தெழவே செய்துகொண்டிருக்கின்றன. அவை, திகைக்க வைக்கும்படி முக்கியமான, என்னை உருவாக்கிய மூலாதாரமான சம்பவங்களாகவும் இருக்கின்றன. அவை, எவ்வாறு இதுவரை காலத்தில் எனக்குள் தவறிப்போய்க் கிடந்தனவென நானறியேன். அதனால் மேலும் ஒரு நினைவுக்குளியலை நடத்த நான் தீர்மானித்தேன். அந்த எழுச்சி முகிழ்ந்த கணம் இது.   1.     பொன்னம்மா ரீச்சர் 1 முகங்கள், குறிப்பாக அதிலுள்ள கண்கள், உள்ளங்களின் கண்ணாடி எனப்படுகின்றன. எனக்கு மிக அணுக்கமாயிருந்த பழைய முகங்களென்று தேடினால் இரண்டு முகங்களே உடனடியாகத் தோற்றமாகின்றன. ஒன்று, எனது அம்மாவினுடையது. மற்றது, பொன்னம்மா ரீச்சருடையது. பொன்னம்மா ரீச்சர் என்னை அரிவரியில் படிப்பித்த ஆசிரியர். நான் அரிவரி படிக்கப் போன காலத்தில், எங்கள் வீட்டுக்கு அண்மையிலிருந்த பள்ளிக்கூடம், நி...