Posts

வெ.சா. நினைவாஞ்சலி:

கலை, இலக்கியத்தின் உக்கிரமான விமர்சனக் குரல் ஓய்ந்தது சென்ற அக்டோபர் 3ஆம் திகதி, நான் லண்டனில் நின்றிருந்தபோது, என்னை இன்னும் கனடாவிலிருப்பதாக நினைத்த வெங்கட் சாமிநாதனிடமிருந்து, அப்போது திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனின் உடல்  நிலையை விசாரித்து ஒரு முகநூல் செய்தி வந்தது. திருமாவளவன் தனது சுகவீனம் காரணமாக அடிக்கடி வைத்தியசாலை சென்று வந்துகொண்டிருந்த நிலையில் வி~யம் எனக்கு சாதாரணமானதாக இருக்க, வெங்கட் சாமிநாதனின் எழுத்தில் ஒருவித பதற்றமிருந்ததை நான் கண்டேன். அதனால் நண்பர்களிடம் விசாரித்து தகவல் தெரிவிப்பதாக அறிவித்துவிட்டு நான் அந்த முயற்சியில் இருந்தபோது, 5ஆம் திகதி வெ.சா.வே எழுதினார், ‘இனி விசாரிக்கத் தேவையில்லை, தேவகாந்தன். திருமாவளவன் போய்விட்டார்’ என்று. அவரது பதற்றத்தின் உறைப்பு இன்னும் கனதியாக என்னுள் இருந்துகொண்டிருந்த பொழுதில் அக்டோபர் 21ஆம் திகதி ஓர் அதிகாலையில் வெ.சா. காலமாகிவிட்டதான முகநூல் பதிவு என்னை அதிரவே வைத்தது. 1931இல் கும்பகோணத்தில் பிறந்து, 21.10.2015 இல் பெங்களூருவில் காலமான வெ.சா.வுக்கும் எனக்குமிடையே ஒரு கால் நூற்றாண்டுத் தொட...

உண்மையைத் தேடுதல் சாளரம்:4

கலகமும் முரணும் கண்டனமும் ‘கலக மானுடப் பிறவி’ என்கிறான் முதுவோன். ‘கலக மானுடரே கேளுங்கள்’ என்கிறான் ஒரு சித்தன்.  கலகக் குணம் மனிதருள் இயல்பாய் இருக்கிறது என்பது இதன் அர்த்தம். மதவழி மீறி இச்சைப்படி வாழ்தலை மேலே சொன்ன அடி குறித்திருப்பதை உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் இலக்கியக் கலகம் வேறானது. அதில் இரண்டு வகையான தன்மைகளை தெளிவாகவே காணமுடியும். ஒன்று, தன்னை இனங்காட்டவும் முன்னிலைப் படுத்தவுமாக. அடுத்தது, உண்மையில் தவறுகள் பிழைகளை இனங்கண்டு அவற்றை மறுதலிப்பதற்கான முனைப்பாக எடுக்கப்படுவது. இதில் பிந்திய கலக குணத்தையே இங்கு நான் சொல்ல முனைகிறேன். முன்புபோலவே இவ்வகைக் கலகம்பற்றி எனக்கு வேறு அபிப்பிராயமில்லை. கலகம் ஒரு விசாரணைக்கான அழைப்புத்தான். அதுவே நியாயத்தை உரைப்பதில்லையெனினும், அதிலிருந்து நியாயத்துக்கான ஒரு தீர்வு பிறக்கும் என்பதே அதை முன்னெடுப்பதற்கான காரணமும் ஆகும். முரணென்பது ஒரு நியாயத்தை முன்னிறுத்திக் கொள்ளப்படுவது. அதுவே முழுமையான நியாயமாக இல்லாதபோதும், அது நியாயத்தின் பெரும்பங்கை தன்னுள் கொண்டேயிருக்கும். இதுவரையான நவீன தமிழ் இலக்கியத்தின் நீண்ட பாதையைத் திரும்பிப் ப...

கலாபன் கதை: 2-10

மனதில் நங்கூரமிட்ட நினைவு 1984ஆம் ஆண்டின் ஒரு ஆடி மாதம் துபாயிலிருந்து கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய கலாபனை கூட்டிவர சிவபாலன் சென்றிருந்தான். சிவபாலன் தொழில்புரியுமிடம் மட்டக்கிளப்பானாலும் அவனுக்கு கொழும்பையும் நன்கு தெரிந்திருந்தது. அவன் பல கொழும்பு நண்பர்களையும் தெரிந்திருந்தான். அன்று ஒரு லாட்ஜில் தங்கிக்கொண்டு மறுநாள் காலையில் பருத்தித்துறைக்கு பஸ் எடுப்பதே அவர்களின் திட்டமாகவிருந்து. மாலையில் சிறிதுதூரம் நடந்துவிட்டு வரலாமென வெளியே சென்றிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக கொச்சிக்கடை அந்தோனியார் சேர்ச்சுக்கு முன்னால் தன் நீண்டநாள் கப்பல் நண்பன் அத்துளவை கலாபன் கண்டான். தான் அப்போது இலங்கையில் பாட்டா கம்பெனியில் வேலைசெய்வதாகக் கூறிய அவன் ஞானக்கோன் ஏஜன்ஸி உடனடியாக ஒரு கப்பல் என்ஜினியரை தேடிக்கொண்டிருக்கிறதாகவும், கொழும்பு துறைமுகத்தில் தடுக்கப்பட்டிருக்கும் ஒரு கப்பலின் சரக்கை அதை அனுப்பியவர்கள் நீதிமன்ற அனுமதிபெற்று வேறொரு கப்பலில் ஏற்றுகிறவரைக்குமான காலத்துக்கு சுமார் ஒரு மாதம் வரையுமே வேலை செய்யவேண்டியிருக்குமெனவும் தெரிவித்து, கலாபனுக்கு அது விருப்பமா என்றும் கேட்...

உண்மையைத் தேடுதல்\ சாளரம்:3

தேசாந்திரி பக்கத்து வீட்டிலிருந்து லீசாவோடு வெளியே வந்த ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் லீசாவின் இழுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டு வழக்கம்போல் சற்றுநேரம் அதிலேயே தாமதித்து நின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த நாய் என்னை நன்கு அறி ந்திருந்தது. மாலையில் உலாத்துகைக்காக அழைத்துச் செல்லும்போது வந்து ஒரு முறை என் கால்களை மணந்து பார்த்தும், என் முகத்தில் முகர என்மீது தாவ முயன்றும், தன் காலை என் கையில் போட்டு குசலம் விசாரித்தும்விட்டு அப்பால் செல்லுகிற நாய் அது. லப்ராடர்  இனம். மஞ்சள் கலந்த தவிட்டு நிறத்தில் இரண்டடி உயரத்தில் மிக அழகாக இருந்த ஆண் நாய். சிலநாட்களுக்கு முன்னால் ஒரு மாலை நேரத்தில் உலாத்துகை வெளிக்கிட்ட ரோனி என் வீட்டுக்கு முன்னால் வந்ததும் நின்றது. சற்று இருட்டாக  இருந்ததால் என்னைக் காணாமல்தான் தேடுகிறதோவென நினைத்து அசைவைக் காட்டினேன். உள்ளுக்குள்ளாய் என்னோடு தன் நாய்க்கிருக்கும் நட்பை விரும்பாத லீசா முடிந்தவரை முயன்று ரோனியை அப்பால் இழுத்துச்செல்லவே அப்போதும் முயன்றுகொண்டிருந்தாள். ஆனால் என் அசைவைக் கண்டுகொண்ட நாய் வழக்கம்போல குழைந்துகொண்டு ...

கலாபன் கதை:2-9

கடத்தல் கப்பல் அதற்கொரு நீண்ட காலம் பிடித்திருந்தது. நினைப்பை மறக்க நினைக்கிறபோதே அது தீர்க்கமாக தன்னை முன்னிறுத்திக்கொண்டு மேலே மேலே வந்துகொண்டிருந்தது. இலங்கையில் இனக்கலவரம் நடந்து அப்போது எட்டு மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. வீடு போகிற எண்ணம் கலாபனின் மனத்துக்குள்ளிருந்து துடித்துக்கொண்டிருந்தது. புதிதாகக் கட்டி குடிபுகுந்திருந்த வீட்டைப்  பார்க்கக்கூட அவனுக்குப் போக இயலாதிருந்தது. பிள்ளைகளைப் பார்க்கிற தவனம் ஒருபக்கம். ஆனாலும் நாட்டைவிட்டு பெருவாரியான மக்கள் இந்தியாவுக்கும், ஜேர்மனிக்கும் பிரான்ஷுக்கும் தப்பி ஓடிக்கொண்டிருக்கையில், நிறைந்த வருமானமுள்ள ஒரு வேலையையும் விட்டுவிட்டு அந்த மண் பிறந்த மண்ணாகவே இருக்கும்போதிலும் திரும்பியோடிச் சென்றுவிட சுலபத்தில் மனம் உந்திவிடுவது இல்லை. ஒவ்வொரு முறையும் பம்பாய் திரும்புகிற வேளைகளில்போலன்றி ஏனோ இப்போதெல்லாம் மனம் உவகையும், உடல் வீறும்கொள்ள பின்வாங்கிக்கொண்டிருந்தன. ஜெஸ்மினின் தொடர்பு ஒரு விலங்காக இறுகுவதற்கிருந்த கடைசி நிமி~ங்களில்தான் அதை அவனால் உணர முடிந்திருந்தது. அது அவளது எந்தத் திட்டமிடலில் விழுந்திருக்காதபோதும், அதை அவசரமாய்க...

மதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்

அரசியல், சமூக எதிர்ப்பு நிலைகளின்  இன்னொரு முகாம், பின் - காலனித்துவ இலக்கியம் காலச்சுவடு பதிப்பகத்தினரின் வெளியீடாய் அண்மையில் வெளிவந்திருக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே இதில் வெளியாகியுள்ள சில கட்டுரைகளை அவை சஞ்சிகைகளில் வெளியாகிய தருணங்களிலேயே நான் வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமான நூல் கொடுத்த பாதிப்பு அதிகம். முழுமையான மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ அன்றி, நூலின் ஒட்டுமொத்தமான செல்திசை நோக்கிய கருத்தினை அலசும் ஒரு கட்டுரையாகவும் இது அமைய நேர்வது நூல் விளைத்த பல்தளங்களிலான மனப்பாதிப்பின் தீவிரத்தினால்தான். இரண்டு விஷயங்களை முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. சமகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான நூல், ந.முருகேசபாண்டியனின் மொழியில் சொல்வதானால், தமிழ் அறிவுலகத்தின் அ-பிரக்ஞை குளத்தில் வீசப்பட்ட கல்லாக தடமழிந்து போவதற்குத் தோதான தலைப்போடு வெளியிடப்பட்டிருப்பதை முதலாவதாகச் சொல்லவேண்டும். ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்பது, ஏதோ மரபார்ந்த தமிழறிஞர்களது தமிழினத்தின் பண்பாடு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்...

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ‘கலாபன் கதை’ கடந்த ஆவணி இதழோடு நிறைவுற்ற பின்னால் ‘தாய்வீடு’  வாசகர்களைச் சந்திக்க நான் தயாராவதற்கு இரண்டு மாதங்கள் எடுத்திருக்கின்றன. சென்ற மூன்று ஆண்டுகளுக்குச் சற்று அதிகமாகவே ‘தாய்வீ’ட்டில் நான் தொடர்ந்து எழுதி வந்திருப்பினும், ‘கலாபன் கதை’ எழுதிய பதின்னான்கு மாதங்களும் வித்தியாசமானவை. நேரிலும், தொலைபேசியிலுமாய் வாசகர்கள் தெரிவித்த பாராட்டுக்கள் என்னை சிலிர்க்க வைத்தன. தமிழ் வாசகப் பரப்பில் இவ்வாறான படைப்பின் திறம் குறித்த வெளிப்பாடுகள் அரிதானவை என்பதை நானறிவேன். நிர்விகற்பனாய் படைப்பெழுச்சி மிகும் தருணங்களில் எழுதிய பின்னர், படைப்பு எனக்கே திருப்தி தருகிற அளவில் பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு, அடுத்த படைப்பை எண்ணியிருப்பதே என் இயல்பு. ஆனால் ‘கலாபன் கதை’ வெளிவரத் தொடங்கிய மாதத்திலிருந்து வாசகர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் என்னை ஒரு சலன நிலைக்கு ஆளாக்கியிருந்தன. இன்னுமின்னும் சிறப்பான தொடராக அது வரவேண்டுமென்று மனதாரவே நான் அக்கறைப்பட்டேன். விலைமாதர் குறித்து நான் எழுதநேர்ந்த சந்தர்ப்பத்தில், தொலைபேசியில் தொடர்புகொண்ட ஒரு பெண்...