Posts

Showing posts from February, 2026

நினைவுக் குளியல் 3

  நினைவுக் குளியல்: 3 பஞ்சாங்க ஐயர்   அவரது பெயர் சுப்பிரமணிய ஐயர். ஆனால் அவரை பஞ்சாங்க ஐயரென்றுதான் ஊர் அறிந்திருந்தது. திருக்கணித பஞ்சாங்கத்தை ஆண்டுதோறும் உருவாக்கி, அச்சடித்து, வெளியிட்டவர் அவர். அதற்காக வீட்டிலே ரெடில் எனப்படுகிற கை அச்சு யந்திரமொன்றை வைத்திருந்தார். ஊரில் சகலருமே பஞ்சாங்க ஐயரைத் தெரிந்திருந்தவேளை, ஐயர் வெகுசிலரையே அங்கே தெரிந்திருந்தாரென்பது விசித்திரமானதல்ல. அவரின் போக்கு அப்படி. அவர் வெளிப் பிரக்ஞைகள் இல்லாதவராக, தானும் தன் திருக்கணிதத்துக்கான காலக் கணிப்பும் அதன் அச்சாக்க வேலைகளுமாகயிருந்தார். அவரது மனத்தை, மனிதர்களையும் தினசரிச் சம்பவங்களையும்விட, சூரியன் சந்திரன் ராகு கேது ஆகிய நவக்கிரகங்களே கூடுதலாக ஆக்ரமித்திருக்க முடியும். ஐயருக்கு அப்போது நாற்பது / நாற்பத்தைந்து வயதிருக்கலாம். போந்த பொலிந்த வெள்ளை உடம்பு அவருக்கு. அதில் ஆரோக்கியம் பளீரிட்டது. ஆயினும்   ஐயர் கலகலப்பாக இருந்ததை யாரும் கண்டதில்லை. அவர் மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாய் யாருமில்லைப்போல், அவரை மகிழ்வோடு எதிர்கொண்டவர்களாயும் அதிகம் பேர் இருக்கவில்லை. ஒருவித வெறுப்போடும், ...

'முதல் மூவர்' மதிப்புரை

      சொர்ணவேலின் ‘முதல் மூவர்’: ரசனையின் உச்சமேறி மொழிப் பிரவாகம்கொள்ளும் பனுவல்   1   பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ராபேர்ட் ப்ரெஸ்ஸோன் (Robert Bresson 1901-1999), இஸ்பெயின் - மெக்ஸிக்கோவைச் சேர்ந்த லூயி புனுவல் (Luis Bunuel 1900-1983), மற்றும் ஜப்பான் நாட்டு யாசுஜிரோ ஓசு (Yasujiro Ozu 1903- 1963) ஆகியோர், பெரும்பாலும் இருபதாம் நூற்றாண்டு முழுவதையும் மூடிய தம் தீவிரமான செயற்பாட்டின் மூலம் எவ்வாறு வருங்கால சினிமாவின் பார்வை, ரசனை, மெய்ஞ்ஞானம் போன்றவற்றின் செல்நெறிகளை   ஒழுங்குபடுத்தினார்கள், ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதை தீர்க்கமாய் முன்வைக்கிறது சொர்ணவேலின் இந்த ‘முதல் மூவர்: ப்ரெஸ்ஸோன், புனுவல், ஓசு’. அதை ஓர் அஞ்சலியாய் செய்துள்ளதாக படைப்பாளியின் ஒப்புமூலம். மீஇயற்பியல், கதையாடல், இழையோடும் உட்புணர்ப்புகளூடாக விவரண சினிமா, குறும்படம், முழு நீள சினிமா ஆகியவற்றில் அத் தாக்கம் எவ்வாறு விதிகளால், உள்ளடைவுகளால் விழுத்தப் பெறுகிறது என்பதை அதற்கான இறுக்கமான, காவிய மொழியில் விளக்குகிற பிரதி இது. தன் ஒவ்வொரு கருத்து வெளிப்பாட்டிலும் வாசகனை நிறுத்திவ...