கலாபன் கதை: 8
கப்பலைத் தூக்கி அப்பால் இறக்கிவிட்ட விந்தை மூன்றாவது கப்பல் பொறியாளராக கலாபன் வேலைசெய்ய ஏறிய ஆ.ஏ.ளுநுயு டீஐசுனு என்ற அந்தக் கப்பல் அவனது வாழ்வில் மறக்கமுடியாத ஓர் அனுபவத்தைக் கொடுத்திருந்தது. உலகத்தின் முக்கியமான இரண்டு கால்வாய்களினூடான பயணம் மறக்க முடியாததுதான். இவையெல்லாம் திட்டமிட்டோ, எதிர்பார்த்தோ நடப்பதில்லை. எங்கேயும் இதுவே நிலைமையெனினும், கப்பல் வர்த்தகத் துறையில் இது சத்தியமான வார்த்தை. எல்லா பயண அனுபவங்களையும் விழுங்கிவிடுகிற மாதிரி ஓர் அற்புதம் எதிர்பாராததும், திட்டமிட்டுமிராத ஒரு தருணத்தில் நடக்கச் செய்கிறது. அப்போது அதை அனுபவிப்பதுதான் விவேகம். கலாபன் அதை நன்குணர்ந்திருந்ததாகவே தெரிந்தது. சுயஸ் வழியைக் கடந்து கப்பல் மத்தியதரைக் கடலுள் பிரவேசிதுக்கொண்டிருந்த பொழுதில்தான் இரவு 12-04 வேலையை முடித்துக்கொண்டு தூங்கச் சென்ற கலாபன் எழுந்து மறுபடி வேலைக்குத் தயாராக வெளியே வந்திருந்தான். சுயஸ் கால்வாயின் மேற்புறமுள்ள நைல்நதி தீரத்து அழகில் எகிப்திய அழகுராணி கிளியோபாத்திரா அன்னப்படகில் ஏறி நிலவெறிக்கும் இரவுகளில் ஓரிரு சேடிகளுடன் மட்டும் மிதந்து களித்த அழகை, தன் மெல்லிய போத...