Posts

Showing posts from 2024

மலையகா: பேராற்றின் சுழிப்பற்ற அமைதியான நீரோட்டம்

Image
1 ஜனவரி 2024இல் ஊடறு பதிப்பாக இலங்கை மலையக பெண் படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பொன்று ‘மலையகா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இலங்கையின் மத்திய பகுதியின் இலக்கியத்தை மலையக தமிழிலக்கியமென்பதா, இந்திய வம்சாவழியினரின் தமிழிலக்கியமென்பதாபோன்ற அரசியல் கருத்துநிலை சார்ந்த வினாக்களுக்கு தெளிவான விடைகள் அடையப்பெறாவிடினும், அதை மரபார்ந்த வழியில்; மலையகத் தமிழிலக்கியமெனல் தகும். தேயிலைப் பரப்பின் அழகும் வளமும் கருதி மலையகப் பெண்களின் இச் சிறுகதைத் தொகுப்பையும் ஒரு பெண் படிமமாக்கி ‘மலையகா’வெனப் பெயரிட்டிருக்கிறார்கள். இருபத்துமூன்று பெண் படைப்பாளிகளின் நாற்பத்திரண்டு கதைகள் அடங்கிய இத் தொகுப்பு, அதன் தொகுப்பாகிய தேவை விதந்துரைக்கப்பட்ட அளவுக்கு, அதன் உள்ளுடன் விசாரிக்கப்படவில்லை. அது தொகுப்பின் சிறுகதைகள் சமகால இலக்கிய கட்டுமானம் சார்ந்ததும், விஷயம் சார்ந்ததுமான காத்திரத்தன்மை அற்றுள்ளதன் அடையாளமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது. இலங்கைப் படைப்புகள் குறித்து விசேஷ கவனம் எனக்கு இருந்தவகையில் ஏப்ரலில் நூல் கையில் கிடைத்ததுமே வாசிக்கத் தொடங்கினேன். வாசிப்பில் அதன் மொழி சார்ந்ததும், கட்டுமானம் சார்...

காத்திருப்பின் புதிர்வட்டம் (சிறுகதை)

                                                                                                                                     கூடிருந்த மரத்தையும், மரமிருந்த நிலத்தையும் குருவி நிரந்தரமாய் விட்டகன்றதுபோல், அவர் நாடு நீங்கிப்போய் நீண்ட காலம். ஒருமுறை வந்து தன் நிலம் பார்த்துப்போக அத்தனை காலத்தில் அவர் எண்ணியதில்லை. அதில் ஏதோ அவருக்குத...

மாய வருத்தத்தின் மந்திர முடிச்சு (சிறுகதை)

  தூரத்தில், விரிவானின் எல்லையில் விழுந்த புள்ளியில் ஒரு கருமை திகைந்தெழுந்து திணிவது கண்டு, மாளிகையின் மேல்மாடத்தில் நின்றிருந்த அல்மினாவின் உள்ளத்தில் குதூகலத்தின் அரும்புகள் சட்டெனத் தெறித்தன. ‘கமால் அப்துல்லாவா?’ இல்லை, அவனில்லை; அவனாகயிருக்காது; அவன் வரமாட்டான்; இத்தனையாண்டுகள் வராதிருப்பவன் இனியும் வரப்போவதில்லை; வருவது எதிர்வுகூறப்பட்ட மணற்புயலாய்த்தான் இருக்கும்; ஆயினும் அவனாகயிருந்தால் நல்லதுதான்; கண்டால் ஜென்ம சாபல்யம் அடைந்தமாதிரி ஆகுமென அவள் எண்ணினாள். சுற்றிலும் பாலை விரிந்த அம் மணல் வெளியில் லிபியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளை அண்டியதாய், ஆயினும் சுலபமான அடைதல் சாத்தியமின்றியும், எல்லை நிர்ணயமின்றியும், பசுமைகொண்ட சில நிலத் தீவுகள் இருந்துகொண்டுதான் இன்னும் இருக்கச்செய்தன. இத்தாலியரும், இஸ்பானியரும், பிரெஞ்சுக்காரரும், ஆங்கிலேயரும் ஆபிரிக்க கண்டத்தைக் குறிவைத்தபோது, சில நல்லதுகள் நடந்தன. சூயஸ் கால்வாய் அவற்றிலொன்று. நடுவில் கிடந்த நிலத்தை தோண்டி கடலாக்கி மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைத்து அய்ரோப்பாவிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமான சுருக்க வழி அண்மைய...