எதிர்க் குரல்கள்



காலகாலத்துக்குமான உண்மையென்று எதுவுமில்லையெனச் சொல்லப்படுகிறது. அதை இப்படி நான் புரிந்துகொண்டிருக்கிறேன். சாசுவத உண்மைகள்மீது தீவிரமாகஎழுப்பப்பட்ட சந்தேகத்தில், அவை தம்மை வெளியுலகின் நியாயத்துக்குத் தக தம் இருப்பை நெகிழ்வித்துக்கொண்டன என்பதுதான் அது.

அதன் பரிமாணத்தின் மாற்றங்கள் ஓர் எதிர்வின் விளைவாகவேசாத்;தியமாக இருந்திருக்கின்றன.
கலகக் குரல்கள் இடைனிலையில் தரிப்புக்கொண்டுவிடா.அவை தம் ஆகக்கூடிய உச்சத்தை அடைந்து நின்றே குரல் எடுக்கும். அதை அடைவதுவரை அவை ஓய்வதுமில்லை. ஒவ்வொரு கட்டசமூக காலத்திலும் அவைவௌ;வேறு தளங்ளிலிருந்து வந்திருக்கும். ஆனாலும் தீவிரங்கள் ஒரேமாதிரியே இருந்திருக்கின்றன.அவ்வக்காலசமூகம் வேறுஎந்தமாதிரியில் வந்தாலும் அக்குரல்களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்காது. ஒருகாலகட்டத்தின் கலகக் குரல் நிச்சயமாகவே தத்துவப் பின்புலமற்றது. அதுதன் கலகத்தை நியாயப்படுத்தும் தர்க்கத்தைமட்டுமே சொல்லும். பின்நவீனத்துவம் தனக்கான அமைப்பு விதிகளைச் சொல்லாமை இங்கிருந்தே புரிந்துகொள்ளப்படவேண்டும்.

மாற்றை அது எப்போதும் சொல்லாது. கலகக் குரலின் மூர்க்கத்தில்தான் சமூகங்கள்  நகர்ந்திருக்கின்றன. சாசுவதஉண்மைகள் காலத்துக்குத் தகவாய் மாறிவந்தமைதான் மனு நாகரிகத்தின் வரலாறு. மாறி வந்தன என்று சொல்கிற சுலபத்தில் அவை மாறிவரவில்லையென்பதையும் நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெரும் போராட்டங்கள்,உயிர்த் தியாகங்கள்,ரத்தச் சொரிவுகள்,வாழ்வுஅர்ப்பணங்கள் இல்லாமல் எதுவும் நடந்ததில்லையென்பதைசரித்திரம் சொல்லிநிற்கிறது.

இலக்கிய உலகின் கலகக் குரல்கள் எல்லாமேகூட இந்தநியதியில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவைதான். தமிழ்ச் சூழலில் இலக்கியத்திலேமுதல் கலகக் குரல் எழுந்த இடம் வனம். அதைச் சித்தர் குரலாய் காலம் பதிவுசெய்துவைத்திருக்கிறது. மேலைநாடுகளில் விசித்திரமான இடங்களிலெல்லாம் கலகக் குரல்கள் ஒலித்திருக்கின்றன.குறிப்பாகபிரான்சில் avant -guard களும், surrialistகளும் மலசலகூடங்களுக்குஅண்மையில் தம் படைப்பு,கருத்துமாற்றங்களைச் செய்யும் மேடைகளை அமைத்து வந்திருக்கிறார்கள். மகாராட்டிரத்தில் 1969இல் தலித் இலக்கியம் என்ற சொல்லாடல் பாவனைபெற முன்பு,பொதுமலசல கூடங்களுக்கு அருகே எதிர்ப்பிலக்கிய வெளிப்படுத்துகைகள் நடைபெற்றிருக்கின்றன. இத்தகைய பின்புலத்தில் கடந்த ஓரிரு மாதங்களுக்கிடையில் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் பார்க்க நினைக்கிறேன்.

டந்த 04.12.2002இல் ஒருகாலைநேரசென்னைக் கடற்கரை -மயிலாப்பூர் பறக்கும் தடத்தில் இயங்கியரயிலில் ‘மூன்றாவதுஅறைநண்பனின் காதல் கதை’என்ற அஜயன் பாலாவின் சிறியசிறுகதைத் தொகுப்பொன்றுவெளியிடப்பட்டிருக்கிறது. ரயில் இப்போதெல்லாம் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்த அம்சமாகியிருப்பது ஏனென்று தெரியவில்லை. ரயிலின் நீட்சியும்,ஒரேதாளகதியில் இயங்கும் அதன் இயக்கத்தை அடையிடை ஊடறுத்துச் சிதைக்கும் அதன் லயபேதமும் ஒருசுவையைஏற்படுத்தியிருக்கலாமோ?

சிலமாதங்களுக்குமுன் ஓடும் ரயிலில் பயணிகளுக்குமத்தியில் ஒருகவிஞர் கூட்டம் கவியரங்கொன்றைநடத்தியிருக்கிறது. அதற்குமுன்னால் கோணங்கிபோன்றவர்கள் இலக்கியச் சந்திப்புக்களைரயில்களில் நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆகவே இதுபெரியஅதிசயமில்லை. அங்கு நூல் வெளியீடுசெய்யப்பட்டவிதம்தான் புதுமையானது. புத்தகவெளியீடு,ஓடும் ரயிலிலிருந்துவெளியிடுபவரால் வெளியேவீசியெறிவதன்;மூலம் அதுநடத்தப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொண்டவர்களும் தமிழ் இலக்கியப் பரப்பில் முகம் தெரிந்த இலக்கியவாதிகளே. குறிப்பாக‘புதுப் புனல்’ஆசிரியர் சி.மோகன்,‘வெளி’ரங்கராஜன் போன்றோர்.

இன்னொருநிகழ்வு,பிரமிளின் கவிதைகள்பற்றியகருத்தரங்கு. இது மதுக்கடைஒன்றின் குடிக்குமிடத்தில்நடந்திருக்கிறது. குடிப்பதற்குவந்தபலரில் ஆச்சரியங்களைவிளைவித்துக்கொண்டு இந்தஅரங்குநடந்துமுடிந்தபின்னால் சண்டையும் பிடித்திருக்கிறார்கள். ‘பல்லோடுஉதடுபறந்துசிதறுண்டு,சில்லென்றுசெந்நீர் தெறித்து,நிலம் சிவந்து,மல்லொன்றுநேர்ந்து…’எனநம்மூர் மகாகவிபாடியதுஅப்போதுஎனக்குஞாபகம் வந்தது. இதில் கலந்துகொண்டவர்களும் சாருநிவேதிதா,விக்கிரமாதித்யன் போன்ற இலக்கியவாதிகளே.

இவையெல்லாம் உள்கொதித்து எழும் உணர்வு உச்சமடைகிற வேளைகளிலேயே நடக்கின்றன என்பதுதான் நிஜம். இவை ஒருசமூகத்தின் கலகக் குரல்கள். இவையே நியாயமில்லைத்தான். ஆனால் இவை சமூகத்தை மாற்றும் அவசியத்தை வற்புறுத்துவன. இன்னும் இவை மாற்றவும் செய்யும். ஓரளவேனும்.

‘தலித் அழகியல் என்ற சொற்றொடரும்,தலித் கலகப் பண்பாடு என்ற சொற்றொடரும் ஒரேஅர்த்தம் பெறும் சொற்றொடர்கள் என்ற அதிரடிக் கருத்தும் இக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது’ என்று வேறுஒரு கருத்தரங்குபற்றி எஸ்.சுவாமிநாதன் என்பவர் இம்மாத (பெப். 2003) கணையாழி இதழில் எழுதியிருக்கிறார்.

இது ஆரம்பம்தான். இனிவரும் காலங்கள் மிக்க கடுமையானதாக இருக்கப்போகின்றன. தலித் குரல்களோ, அமைப்பாகிவிட்ட குடும்பம், பெண்ணடிமை, மரபுபோன்றவற்றுக்கு எதிரானகுரல்களோ விழிக்கிறவர்களுடையதாய் இருப்பதால் மிகக் கடூரமாய்த்தான் இருக்கும்.

சுகனும், சோபாசக்தியும் தொகுத்த‘கறுப்பு’ நூல் வெளியீடு அ.மார்க்ஸ் தலைமையில் 30.01.2003இல் நடந்தது. தொகுப்புபற்றி ராசேந்திரன் என்ற இளைஞர் சாரத்துடன் மேடைவந்து பேசினார். இந்த நண்பர் போனஆண்டு நிறப்பிரிகை நடத்திய சோபாசக்தியின் ‘கொரில்லா’நாவல் விமர்சனக் கூட்டத்திலும் இம்மாதிரியே வந்து உரைநிகழ்ததியிருந்தார். செய்யட்டுமேன். எவ்வளவு காலம்தான் சொல்லிக்கொண்டே  இருப்பது?

இந்த அதீத நடைமுறைகளெல்லாம் உள்ளெழும் நெருப்பின் ஓசைகள். சமூகம் மாறியாகவேண்டும். வேறுவழி இல்லை.

0

பதிவுகள்.கொம், 2003

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்