இனிநடப்பதுநல்லதாகவேநடக்கும்

இனிநடப்பதுநல்லதாகவேநடக்கும்


ஒருகனவுஎனஅதுசொல்லப்பட்டது. ஒன்பதுமாதங்களாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறவேளையில் சொல்லப்படுகிறது,அதன் பெயர் யுத்தநிறுத்தமென்று.

யுத்தநிறுத்தம் நீடிப்பது,சமாதனப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதுயாவும் சம்பந்தப்பட்ட இரண்டுதனப்பினரதும் பொறுமை,சகிப்புத் தன்மை,நல்லெண்ணங்களின் நிலைப்பாடுபோன்றவற்றிலேயேதங்கியிருக்கின்றது. ஒருதரப்போ, இரு தரப்புகளுமோ இதில் ஒன்றையோ பலவற்றையோ
கைவிடுகிற நிலைமையில்தான் பிரச்னை மறுஉருவெடுக்கிறது. நம் நம்பிக்கையின் மூலம் சிதறுகிறவிதம் இதுதான். இலங்கையில் பலகாலங்களிலும் ஏற்பட்டயுத்தநிறுத்தங்கள்,சமரசமுயற்சிகள் யாவும் இவ்வளவுநிதானமாகவும் நீண்டகாலமாகவும் முன்னெடுக்கப்பட்டதில்லைஎன்பதைவரலாறுஅழுத்தமாகச் சொல்லிநிற்கிறது.

இந்தயுத்தநிறுத்தம் குலைவுறுவதற்கான சாத்தியங்கள் அரிது. சமாதானமுயற்சிகள் மிகவலுவான தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அதற்கான ஒருகாரணமாகச் சொல்லலாம். புலிகள் அரசியல்ரீதியாக இனப் பிரச்னைக்கான தீர்வைமுன்னெடுக்க இசைந்திருப்பது இன்னொருகாரணம். நோர்வேயின் சமரசமுயற்சிகளில் அமெரிக்காவினதுபோன்ற சட்டம்பித்தனம் இல்லாமல் ஒருதேவதூதத் தனம் இருந்ததை மூன்றாவதுகாரணமாகக் கொள்ளலாம். நான்காவதாயும்ஒன்றுண்டு. இரு இன மக்களதும் களைப்பு.உயிராய்,உடைமையாய்,வாழவேண்டியகாலங்களாய் அவர்கள் இழந்து இழந்துகளைத்துப்போனார்கள். ஐந்துலட்சம் தமிழர் புலம்பெயர்ந்தனர்,தம் மண்ணைவிட்டும் தம் பிரதேசங்களைவிட்டும். தம் பாரம்பரியபிரதேசத்திலிருந்து முஸ்லீம் மக்கள் புலம்பெயர்ந்தசோகம் எதற்கும் குறையாதது.

இரண்டொருமாதங்களின் முன் கிழக்கிலங்கையில் நடைபெற்றசிலஅசம்பாவிதமானசம்பவங்கள் சமாதானம் விரும்பிகளின் மனத்தில் ஓர் அச்சத்தைவிளைவித்தன. விவேகமானநடவடிக்கைகளால் அவ்வச்சம் விலகியதோடு, இனிமேலும் இவ்வண்ணம் நிகழாதபடிஎடுக்கப்பட்டதீர்க்கமானநடவடிக்கைகள் இனிநடப்பதுநல்லதாகவேநடக்குமென்றநம்பிக்கையை ஸ்தாபிதமாக்கியுள்ளன.

மிகத் தெளிவானதும் சீரானதுமானநிலைமைகள் இலங்கைஅரசியற் களத்தில் அமைந்துவிட்டனஎனநான் சொல்லமாட்டேன். இன்னும் நிர்வாகஅதிகாரமுள்ளவரான ஜனாதிபதி,பல்வேறுவி~யங்களில் பிரதமமந்திரியுடன் முரணிக்கொள்வதெல்;லாம் நல் அறிகுறிகளும் இல்லை. இந்நிலையில் அவர் சிறீலங்காசுதந்திரக் கட்சியினராய் இருப்பதுதமிழ் மக்கள் மனத்;;தில் கலக்கத்தையேஉருவாக்கியிருக்கிறதென்பதுநிஜம். அவர் தமிழ் மக்களின் நம்பிக்கையை இழந்துவெகுகாலமாகிவிட்டது.
தனிச் சிங்களசட்டநிறைவேற்றத்திலிருந்து, இலங்கையை சோசலிசகுடியரசாக்கபுதியஅரசியல் யாப்பைக் கொண்டுவந்து,ஏற்கனவேசிறுபான்மைமக்களின் மொழிமதமற்றும் உரிமைகளுக்குதக்கஅரணாய் இருந்த 29வது பிரிவின் 2ஆம் சரத்தைநீக்கியும்,அதற்கிணையானஎந்தசரத்தைபுதியயாப்பில் சேர்க்காமலும்விட்டதுஈறாகதமிழ் மக்கள்மீதுபாரிய இன்னல்களைச் சுமத்தியகட்சிஅது. குடும்பபரியந்தமாய் முதலில் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க, பிறகுஅவரதுமனைவிசிறிமாவோ பண்டாரநாயக்க என்று இக் கொடுமைகள் இழைக்கப்பட்டிருக்கிறபோது, அவர்களின் மகளானசந்திரிகாகுமாரணதுங்கமீது சந்தேகப்படாமல் இருந்துவிடமுடியாது. உண்மையில் இது ஒருபாமரத்தனமானதொடர்புபடுத்துகையே. ஆனாலும் சந்திரிகாகுமாரணதுங்கவின் நடத்தைகளும் கருத்துப் பிரயோகங்களும் அதைப் பொய்ப்பிப்பனவாக இல்லை. தானும் தனதுபங்குக்கு எந்தத் தீமையையாவது செய்தேஆகவேண்டுமென்று கங்கணங் கட்டியிருப்பதாகவேதோன்றுகிறது.

அதேவேளை,ஐக்கியதேசியக் கட்சியும் தமிழரின் பாரம்பரியபிரதேசங்களையும்,தமிழ் மக்களதுமற்றும் உரிமைகளையும் கௌரவப்படுத்தியகட்சியல்ல. பண்டா-செல்வாஒப்பந்தத்தைக் கிழித்தெறியவைத்தகட்சிஅது. அதுபோல  இடதுசாரிக்கட்சிகளும் தமிழ் மக்களின் நம்பகத் தன்மையை இழந்துபோய் வெகுகாலம். 1966ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதியவேலைநிறுத்தத்தைவெற்றியடையவைத்ததின்மூலம் டட்லி-செல்வாஒப்பந்தத்தைநிறைவேறாதுதடுத்து இச் சாதனையைஅவர்கள் அடைந்தார்கள். வலதுசாரிகளின் பேரினவாத, பெருமதவாதகொள்கைகளுக்காய் நியாயங்களை எரித்தவர்கள் அவர்கள்.
நான் பலசமயங்களிலும் நினைத்திருக்கிறேன்,

1) பண்டா-செல்வாஒப்பந்தம் கிழித்தெறியப்படாமல் இருந்திருந்தால்..
2) டட்லி-செல்வாஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால்…
3) தமிழரின் சுயநிர்ணயஉரிமையைஅங்கீகரித்து,தனித்துவமானஒரு கூட்டரசுஎன்றகொள்கையிலிருந்து இடதுசாரிகள் பின்னடையாதிருந்தால்…

எல்லாம் நல்லதாகநடந்திருக்கலாமோவென்று.

அவ்வாறு நடக்கவில்லையென்பது எவ்வளவு பெரிய சோகம்!
திடீரென எல்லாம் ஓர் ஒழுங்கில்போல் இப்போது வந்தமைந்திருக்கின்றன. உண்மையில் அது திடீரென்று இல்லைத்தான். எத்தனையோ சக்திகள் எவ்வளவோ காலமாய் இதற்காக கடுமையாய் உழைத்தன என்பது நாம் அறியாததல்ல. ஆனாலும் வேறுவிதமாகவே இது சொல்லப்பட்டது.

2001 செப். 11 அகிலஉலகமும் பயங்கரவாதத்துக்கெதிராகக் குரல்கொடுத்த காலப் புள்ளி. பயங்கரவாதம் தன் அழிச்சாட்டியத்தின் உச்சத்தை அடைந்துவிட்டதையே உலக வர்த்தகமையக் கட்டிடங்களின் தகர்ப்பு தெரிவித்தது. ஆப்பானித்தான் மீதான ஐக்கியஅமெரிக்காவின் போரும் இந்தபயங்கரவாதச் செயலுக்கும் ஏறக்குறையச் சமமானதுதான். இவ்வாறான சர்வதேசநிலைமைகளே தமிழீழவிடுதலைப் புலிகளை ஒரு சமாதானப் பேச்சுவார்தைக்கான நிலைப்பாட்டை எடுக்கவைத்ததென்று ஒருபேச்சு இருந்தது. அதுஅப்படியல்ல என்றே இப்போதுஎனக்குத் தோன்றுகிறது. ஆனையிறவுமுகாம் வீழ்ச்சியும்,அதனால் ராணுவம் வடபகுதியில் அடைந்த இக்கட்டானநிலைமைகளுமே இதைச் சாதித்தன என்பது ஒரு சரியான கணிப்பென்றே தோன்றுகிறது.

பேச்சுவார்த்தையின் முதற்கட்டம் துவங்கும் முன்னரே, புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற குரல்கள் உயர்மட்டங்களிலிருந்து எழுந்தமையை இங்கே நினைத்துப் பார்க்கவேண்டும். அப்போது சமாதான முயற்சியின் பின்னணி புரியும்.

இலங்கையிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் இந்தியா வரும் இலங்கைத் தமிழ் மக்களுடன் ஓடியோடிப் போய்க் கதைத்து, இலங்கைஅரசியல் நிலைமையைத் துல்லியமாய்த் தெரிந்துவிட முடியாது. ஐபிசி’யும்,பிபிசி’யும் தரும் தகவல்கள்,பேட்டிகள்,அரசியல் விமர்சனங்கள் மூலமும்கூட அது சரிவரத் தெரியாமல்போகலாம். அவர்களுக்கென்றும்  ஒரு நோக்கு உண்டு. அவர்களது நோக்கில் பார்த்து,அவர்களது மொழியில் சொல்பவை எப்படியும் தரையில் விழுந்த மழைநீரின் தன்மை மாறுவதுபோலத்தான் ஆக முடியும். ஆனாலும் ஜனநாயக, பத்திரிகா தர்மங்களில் அவை பெருமளவு மாறுபட்டதாய்ப்  புகார்கள் இல்லை.

இவ்வளவற்றையும்கொண்டு நாட்டு நிலைமையைப்பற்றிச் சொல்லப் புகுகையில், சுயவிருப்பத்தின்; கருத்து தானாகவே செறிந்துவிடும் அபாயமும் நேரலாம். இச் சிரமங்களோடேயே இக் கட்டுரைஉருவாகிறது என்பதை நான் இங்கே குறிப்பிடவேண்டும். இன்னுமொன்று: இவை என் நோக்கிலும்,என் மொழியிலும் வருபவைகூட.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குமக்கள் கருத்தறியும் ஒருவாக்கெடுப்பை நடத்தும் அரசாங்கத்தின் திட்டத்தை இலங்கை நீதித்துறை தடுத்த கணத்தில் ஒருபெரிய சோகம் அனைவர் மனத்திலும் வந்து கவிந்தது. அரசாங்கத்தைக் கலைக்கக்கூடிய தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்தஅரசாங்கம் சட்டப்படி தேவையான முதிர்நிலையை அடைந்துவிட்டதென காலம் கணித்துச் சொல்லப்பட்டபோது, இன்னொரு சோகம் கவிந்தது. நம்பிக்கைகளின் மரணம் வெகுதூரத்தில் இல்லையோ என மனம் கூவியது. இவற்றைமீறியும் இரண்டாவது கட்டபேச்சுவார்த்தை ஒஸ்லோவில் நடந்துமுடிந்திருக்கிறது. இயங்குவிதிகள்  குறித்து புலிகள்-அரசாங்கம்-கண்காணிப்புக் குழு போன்றவை அண்மையில் முகமாலையில் சந்தித்து நடத்தியபேச்சுவார்த்தைகள் யாவும் சமாதானத்தில் மேலும் நம்;பிக்கையடையச் செய்திருக்கின்றன.

இத்தனைக்கும் மேலாய் இறைமையுள்ள ஒரு இலங்கையை ஒப்புக்கொண்டதின்மூலம் புலிகள் தங்கள் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடச் சம்மதித்திருப்பதும் நடந்திருக்கிறது. புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உண்மையில் அது சகல நம்பிக்கைகளினதும் சிகரம்.

17டிசம்பர்2002 ‘தினத்தந்தி’ நாளிதழில் ஒருபுகைப்படம் பிரசுரமாகியிருந்தது. ஒருபெண் போராளி கிளிநொச்சிப் பகுதியிலுள்ள தன் குடும்பத்தினரைச் சந்திக்கும் அழகிய காட்சியது. பெண் போராளி, வேறொரு பெண், ஒரு ழந்தை ஆகிய மூவருமே அப் புகைப்படத்தில் இருந்தனர். அம் மூவரின் கண்களில் விரிந்திருந்த நம்பிக்கைகள் எல்லாவற்றுக்கும் மேலாக சுவாசிப்பதையே இயல்பிலும் இலகுவிலும் செய்வதுபோன்ற எதுவித அழுத்தமும் அற்ற ஸ்திதி யாவும் என் கண்களைக் கலங்கச் செய்துவிட்டன. நினைக்கும்தோறும் இன்னும் இதயம் கலங்கிக்கொண்டிருக்கிறது. இது இந்த மூவரின் கனவுமட்டுமில்லை, நம் கனவும். ஓன்றேகால் கோடியின் கனவு. இந்த மகிழ்ச்சி ,நிம்மதி ,நம்பிக்கை எதுவுமே எக் காரணம்கொண்டும் அழிந்துவிடக் கூடாது.

இறை தூதர்களிலேயே நம்பிக்கை வைக்கவேண்டியவர்களாயுள்ளோம் நாம்.
கீதை சொன்னது சிறிது மாறி இங்கே:

‘நடந்தது நல்லதாக நடந்திருக்கலாம்
நடக்கிறது நல்லதாகவே நடக்கிறது
நடப்பதும் நல்;லதாகவே நடக்கும்.’
000

(2002ஆம் ஆண்டளவில் பதிவுகள்.காம்’இல் இது வெளிவந்தது.)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்