எனது முதல் கவிதை
மனித அடையாளம்
-தேவகாந்தன்
புல்லின் தலைகளைத்
தடவிய பனிக்காற்று
பூவிதழ் மலர்த்திய
இரவின் வருடல்
0
மனிதக் கூடொன்று
தசையில் தீப்பிடிக்க
உழன்று
எழுந்து
மெதுமெதுவாகக்
கையைநீட்டி
துணைவிதிகளினாலே
தீயை மூட்டிற்று
இன்னொருதசையிலும்
0
பகலின் வாழ்வில்
அர்த்தமாய் இன்றியாய்
அடைந்தபேதங்கள்
வெறுப்புகள் வெக்கைகள்
யாவும்; நெகிழ்ந்து
ஊடலாகின
பின்
அதுவுமேஅற்றது
0
சத்தம் வெறுத்த
நிசப்தத்துள்ளே
இருட்டினுள்ளே
சேர்ந்து
பிணைந்து
முயங்கி
முள்ளைமுள்ளால்
முள்ளைமுள்ளால்;;…
0
மனிதன்-
யந்திரம்-
யந்திரமனிதன்-
பேதமறும் பிரபஞ்சத்தில்
யுகப் பழமையான
இதுதான்
உச்சவெற்றியான
மனிதஅடையாளம்
000
(இலாலாப்பேட்டையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துகொண்டிருந்த ‘நிழல்’என்ற சிற்றிதழ் ஆத்மாநாம் நினைவுநாளான ஜூலை 6இல் ஒருகவிதைச் சிறப்பிதழை வெளியிட்டது 1996ஆம் ஆண்டு. அதில் வெளியான கவிதை இது. அச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் அழகியபெரியவன் மற்றும் நேசன் ஆகியோர் அங்கம் வகித்தனர்)
-தேவகாந்தன்
புல்லின் தலைகளைத்
தடவிய பனிக்காற்று
பூவிதழ் மலர்த்திய
இரவின் வருடல்
0
மனிதக் கூடொன்று
தசையில் தீப்பிடிக்க
உழன்று
எழுந்து
மெதுமெதுவாகக்
கையைநீட்டி
துணைவிதிகளினாலே
தீயை மூட்டிற்று
இன்னொருதசையிலும்
0
பகலின் வாழ்வில்
அர்த்தமாய் இன்றியாய்
அடைந்தபேதங்கள்
வெறுப்புகள் வெக்கைகள்
யாவும்; நெகிழ்ந்து
ஊடலாகின
பின்
அதுவுமேஅற்றது
0
சத்தம் வெறுத்த
நிசப்தத்துள்ளே
இருட்டினுள்ளே
சேர்ந்து
பிணைந்து
முயங்கி
முள்ளைமுள்ளால்
முள்ளைமுள்ளால்;;…
0
மனிதன்-
யந்திரம்-
யந்திரமனிதன்-
பேதமறும் பிரபஞ்சத்தில்
யுகப் பழமையான
இதுதான்
உச்சவெற்றியான
மனிதஅடையாளம்
000
(இலாலாப்பேட்டையிலிருந்து கையெழுத்துப் பிரதியாக வெளிவந்துகொண்டிருந்த ‘நிழல்’என்ற சிற்றிதழ் ஆத்மாநாம் நினைவுநாளான ஜூலை 6இல் ஒருகவிதைச் சிறப்பிதழை வெளியிட்டது 1996ஆம் ஆண்டு. அதில் வெளியான கவிதை இது. அச் சிற்றிதழின் ஆசிரியர் குழுவில் அழகியபெரியவன் மற்றும் நேசன் ஆகியோர் அங்கம் வகித்தனர்)
Comments