அதை அதுவாக 17

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 17


‘மனிதாபிமானி ஒருவனுக்கு நாடு கனவுகளின் பரப்பாகிவிடாது.’


- தேவகாந்தன் -



(44)

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
(பொருள், அங்கம், குறிப்பறிதல் 6) குறள் 706



துன்னை நெருங்கும் எப்பொருளையும் பளிங்கு பிரதிபலித்துக் காட்டிவிடும். ஒருவர் நெகிழ்ச்சியில் உருவாகும் உணர்வை முகம் காட்டிவிடும்.


இன்பத்துப் பாலில் களவியலில் ஒரு குறிப்பறிதல் (அதி. 110) வருகிறது. அது சொல்லும் குறிப்பறிதலின் அம்சங்கள் வேறு. ஆறிதல் முறையும் வேறு.

இது பொருட்பாலின் அங்கவியலில் வருவது. ஆவ்வியலுக்கான அம்சங்களே இக் குறளில் இருக்கும்.

ஏவ்வளவுதான் கண்ணோட்டம்பற்றி, குறிப்பறிதல் பற்றிச் சொன்னாலும், அதில் எல்லோரும் வல்லவராய் ஆகிவிடுவதில்லை என்பதுதான் நிஜம்.

அது ஒரு தனி அவதானம்.

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று அவ்வை சொல்வது, உண்மையேயாயினும், மேலோட்டமானது. ‘பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும்’(குறள் 709) என்று வள்ளுவன் சற்று ஆழமாய் இறங்குகிற குறளும் உண்டுதான்.

எனினும் 704 ஆம் குறள்தான் இந்தக் குறிப்பறிதல்பற்றி மிக்க விரிவாய்ப் பேசுவது.

ஆதில் இத்தகு திறமையுள்ளவரை ‘குறித்தது கூறாமைக் கொள்வார்’ என்பான் வள்ளுவன். தம் மனத்திலிருப்பதை ஒருவர் கூறாமலே தெரிந்துகொள்ளும் தன்மையர் என்று இதற்கு அர்த்தம்.

ஆவ்வாறு தெரிந்துகொள்ளும் விரிந்த பரப்பு, முகம்.

அதிலுள்;ள கண்கள் உணர்வுகளின் ஒளி மையப் புள்ளிகள்.







(45)

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
(பொருள், அரணியல், நாடு 1) குறள் 731


குறையாத விளைச்சலும், தக்க மனிதரும், கொடுத்தாலும் குறையாத செல்வம் உடையவர்களும் சேர்ந்திருப்பதே நாடு.


‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே!’ என்கிறது ஒரு சங்கப் பாடல். நூடாக இருந்தாலும் சரி, காடாக இருந்தாலும் சரி, மேடாக இருந்தாலும் சரி, பள்ளமாக இருந்தாலும் சரி எங்N கநல்ல மனிதர்கள் இருக்கிறார்களோ, அந் நிலமே நன்னிலம் என்பது அப்பாடல் மேலும் விரிவாய்ச் சொல்வது.

ஆனால் வள்ளுவனுடைய நாட்டுக்கு விளைச்சல் முக்கியம். இன்னும் சற்று மேலே போய் முயற்சி செய்யாமலே வளம்தரும் வளப்பமுடையதே நாடு என்பான் அவன்.

‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்’ என்பது கவிக் கனவு.

வுறட்சியும் வெள்ளமும் பஞ்சமும் பசியும் பட்டினியும் பழந் தமிழகத்திலும் இருந்திருக்கின்றன. அது கண்டு நெஞ்சு கொதித்திருக்கிறான் வள்ளுவன். அவ்வாறு கொதிநிலைப்பட்ட உள்ளத்திலிருந்துதான் ‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகிற்றினானே’ என்ற மாதிரியான சாபங்கள் பிறக்கமுடியும்.

ஆத் தகு மனிதாபிமானி ஒருவனுக்கு நாடு வெகுத்த கனவுகளின் பரப்பாகிவிடாது. கும்ப நாடனுக்கு ஆனது. வுள்ளுவனுக்கு ஆகவில்லை.

நாடு என்பது நாடா வளத்தது என்ற வள்ளுவனின் தீர்மானகரம்கூட ஒருவகைக் கனவுதான்.

ஆனாலும் அது சோற்றுக் கனவு.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்