தேவகாந்தன் நேர்காணல் 4



(என் குறிப்பு: இது எனது மொழியில்லை. அம்பலம் இணைய தளத்துக்காக என்னை நேர்கண்ட நிருபரின் மொழி. எமக்கிடையிலான உரையாடலிலிருந்து இந்த நேர்காணலை அவர் வடிவமைத்திருக்கிறார். கடந்த எனது தமிழகத்து பயணத்தின்போது (ஆனி 2014) களஞ்சியம்.காம் பகுதியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டிருந்த பிரதி  என் பார்வையில் தட்டுப்பட்டது. இதைப் பதிவாக்கவேண்டுமா என்று முதலில் யோசித்தேனாயினும், இதிலுள்ள இலக்கியம், அரசியல் சார்ந்த கருத்துக்கள் சிலவற்றின் முக்கியத்துவம்; கருதி பதிவேற்ற முடிவு செய்தேன். இது ஒரு நேர்த்தி குறைந்த நேர்காணல் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இல்லை. இது வெளிவந்த காலமும் படியிலிருந்து கண்டுபிடிக்க முடியாதிருந்தது. சுமாராக 1999 அல்லது 2000 ஆண்டளவில் வெளிவந்திருக்கலாம்.   -தேவகாந்தன்)

‘புலம்பெயர்ந்த இலக்கியத்தில் பெரிதான வித்தியாசமில்லை’
தேவகாந்தன் நேர்காணல்
நேர்கண்டவர்: ஆர்.டி. பாஸ்கர்

(இன்றைய தமிழ் இலக்கியச் சூழல் வெகுவாக மாறுபட்டது. இலங்கையில் இனப் பிரச்னை கிளம்பியதில், அங்கிருந்து பெரும்பாலோர் புலம்பெயர்வதற்கு முன்பு தமிழக இலக்கியச் சூழல் வேறுமாதிரி இருந்தது.இன்று பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் படைப்புகளையும் சேர்த்துக்கொண்டு இது பலவகையில் வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நம்பப்படுகிறது. அவ்வகையில் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழகத்தில் தங்கி தமிழ் இலக்கியத்துக்குப் பங்களித்து வரும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் தேவகாந்தனும் ஒருவர்.

இலங்கையின் நயினாதீவு என்ற ஊரில் பிறந்து சாவகச்சேரியில் பெற்றோருடன் வாழ்ந்;த இவர், பல துறைகளிலும் பயிற்சி பெற்றவர். ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். இலங்கைப் பிரச்னை தொடங்கிய காலம் முதல் இன்றுவரையிலான இலங்கைத் தமிழர் வரலாற்றைப் பதிவு செய்யும்விதமாக அதைப் பின்னணியாகக்கொண்டு நாவல் எழுதி வருகிறார். இந்த நாவல் ஐந்து பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டு வருகிறது என்றாலும், ஒவ்வொன்றும் தனித் தனியாகவும் படிக்க உகந்ததாக உள்ளன. ‘கனவுச் சிறை’,‘வினாக் காலம்’,‘அக்னி திரவம்’ என்ற மூன்று பகுதிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதுமட்டுமின்றி ‘விதி’ என்றொரு நாவலையும், அண்மையில் ‘நிலாச் சமுத்திரம்’ என்ற பெயரில் பெண்களது பிரச்னைகளை மையமாக வைத்து ஒரு நாவலையும் எழுதியுள்ளார்.

‘இலக்கு’ என்ற இலக்கியப் பத்திரிகை ஒன்றை இவர் நடத்திவந்தார். இதுமட்டுமின்றி பல சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். அம்பலம் வார இதழிலும் இவரது சில கதைகள் இடம்பெற்றள்ளன.
அம்பலத்தின் களஞ்சியம் பகுதி வாசகர்களுக்காக அண்மையில் இவரைச் சந்தித்தபோது,ஈழ இலக்கியம் முதல், தமிழ் தேசியம் வரையென பல வி~யங்களையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார். அதிலிருந்து…)



இலக்கியத்துடன் பரிச்சயம் ஏற்பட்டது எப்படி?

எனது பன்னிரண்டு வயதிலிருந்தே, கிடைக்கும் எல்லாப் புத்தகங்களையும் படிக்கும் பழக்கம் கொண்டவனாக இருந்தேன். அப்போது புத்தகங்கள் கிடைப்பது என்பது கடினமான வி~யம். நண்பர்களின் சகோதரர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்று படிப்பதும் உண்டு. நண்பர்களுடன் நாவல் தொடர்பான உரையாடல் நடந்துகொண்டேயிருக்கும். அதுவே என்னை படைக்கச் சொன்னது. ‘குருடர்கள்’ என்ற முதல் கதை கண்டியிலிருந்து வெளிவந்த ‘செய்தி’ என்ற பத்திரிகையில் வெளிவந்தது. அப்போது நான் ஈழநாடு பத்திரிகையில் வேலைசெய்து கொண்டிருந்தேன்.


ஈழநாடு பத்திரிகை தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலித்த பத்திரிகை. அதில் உங்கள் பங்கு என்ன?

ஈழநாடு பத்திரிகையில் 1968ல் சேர்ந்தேன். உலக அனுபவங்கள் கிடைத்தது. நகரத்திற்கு போய் வருவது புதிய அனுபவமாக இருந்தது. எடிட்டோரியல் பகுதியில் வேலைசெய்தேன். அப்போது சசிபாரதி ஈழநாடு வாரமலரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

நான் எழுதுவதை பத்திரிகைக்கு அனுப்பச் சொல்லி ஊக்கப்படுத்திய நண்பர் பாமா ராஜாகோபால். இன்றுவரை அவரை மறக்க முடியவில்லை.


அதன்பிறகு உங்கள் இலக்கியத் தொடர்பு…? கலித்தொகைக் காட்சிகள் தொடராக வந்ததுபற்றி…?  

சங்க இலக்கியத்தை முழுமையாக கற்பதற்காக பாலபண்டிதருக்கு படித்தேன். ஆனால் அதை முடிக்கவில்லை. என் அம்மா சொல்வார்- இலக்கியம் எங்கள் பரம்பரை ஜீனில் இருப்பதாக. இது என்னையும் இலக்கியவாதியாக வடிவமைத்தது. ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கம் என்ற அமைப்பு அப்போது யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்தது. அதில் தமிழ் இலக்கணம் மற்றும் சமஸ்கிருதம் இரண்டையும் படித்தேன். பின்னர் நான் சுயமாக இலக்கியம் படிப்பதற்கு யாழ்ப்பாணம் நூல் நிலையம் பெரிதும் உதவியாக இருந்தது. இதை வைத்துக்கொண்டுதான் கலித்தொகை காட்சிகளை பதினைந்து வாரம் தொடராக எழுதினேன்.


யாழ்ப்பாண நூல்நிலையம் எரிக்கப்பட்டபோது அங்குதான் இருந்தீர்களா?

ஆம். ஏன்னுடைய அறிவை வார்த்ததில் பெரும் பங்கு அந்த நூல்நிலையத்திற்கு உண்டு. ஆபீஸ் முடிந்து லைப்ரரிக்குத்தான் செல்வோம். புதுமைப்பித்தன் கதைகளை அங்குதான் படித்தேன். யாழ்ப்பாணக் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருந்தது. அது இருந்த சூழல் மிகவும் வித்தியாசமானது. ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டை, குளம், கோயில், பக்கத்தில் ரீகல் தியேட்டர் இவையெல்;லாம் வாழ்வின் மறக்க முடியாத பல பக்கங்களைச் சொல்கின்றன. யாழ் நூல் நிலையத்தை சிங்கள ராணுவம் எரிக்காமல் இருந்திருந்தால் இளைஞர்களுக்கு இவ்வளவு கோபம் வந்திருக்காது. சண்டையின் பரிமாணம் குறைந்து இருக்கலாம். நூல் நிலையத்தின் அழிவை தமிழ் மக்களின் கலாசார, அறிவு அழிக்கப்பட்டதாக எடுத்துக்கொண்டார்கள்.


‘ஈழநாடு’ பத்திரிகையில் வேலைசெய்த காலத்தை நினைவுபடுத்த முடியுமா?

ஈழநாடு பத்திரிகை நடத்தியவரின் கருத்தை அது பிரதிபலித்தது. அவர் கொழும்புத் தமிழர். தேசிய விழிப்புணர்வை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு நடத்தப்பட்டது. அதற்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவும் இருந்தது. இலாபம் சம்பாதிப்பது மாத்திரமே நோக்கமாக இருக்கவில்லை. தமிழர்களின் கருத்தை பிரதிபலித்த ஒரே காரணத்தினால் அரசுப் படைகளால் மூன்று முறை எரிக்கப்பட்டது. இன்று நின்றே போனது.


ஈழத்துப் படைப்புகளுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருக்கிறதா?

பொதுவாக தமிழகத்து எழுத்தாளர்களோ, இலக்கியத்தில் ஈடுபட்டுள்ளவர்களோ தமிழ்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளைத்தவிர இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து வரும் தமிழ்ப் படைப்புகளை படிப்பதில்லை.உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதில்லை. ஈழத் தமிழர் இலக்கியத்துடன் பரிச்சயமுள்ளவர்களில்கூட ஈடுபாடு அதிகமில்லை. அதாவது பத்து வீதம்கூட கிடையாது. ‘ஈழத் தமிழ் புரியவில்லை’ என்கிறார்கள். அதற்காக மொழியைக் கற்றுக்கொண்டா வரமுடியும்? தமிழ்நாட்டின் வட்டார மொழி எங்களுக்குப் புரியும்போது ஈழத் தமிழை இவர்கள் புரிந்துகொள்வதற்கு என்ன சிக்கல் என்று எனககுப் புரியவில்லை. மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு ‘காதலினால் அல்ல’ என்ற அற்புதமான நாவலை எழுதியிருக்கிறார். பல்கலைக்கழகத்தைப்பற்றிய களத்துடன் வந்திருக்கிறது. அதை இங்கு படித்தார்களா? ஏன்… விமர்சனத்திற்கு எடுத்துக்கொண்டதாகக்கூடத் தெரியவில்லை.


இலங்கையின் வரலாற்றைக் கதையாகக் கூறும் ‘கனவுச் சிறை’ நாவல் நயினாதீவு என்ற ஊரிலிருந்து ஆரம்பிக்கிறது. ஏன்?

நயினாதீவு என் பூர்வீகம். ஆனால் இலங்கையிலேயே இடம்பெயர்ந்திருந்தேன். நானாகவே நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுடத்திக்கொண்டு ஊர் சுற்றுவேன். அங்கிருக்கும் நயினாதீவு நாகபூ~ணி அம்மன், நாகவிகாரை இவையெல்லாம் தமிழர், சிங்களரின் கலாச்சாரக் கலப்பாக இருந்ததை என்னால் காணமுடிந்தது. அங்கு இருந்த புத்தபிக்கு கொள்கைப்படியே வாழ்ந்தவர். இலங்கையின் சின்ன மாடல்மாதிரி இருந்தது நயினாதீவு.  அந்த நிகழ்வுகளை நாவலுக்கேற்ற விதத்தில்
பதிவுசெய்துள்ளேன்.


‘திருப்படைஆட்சி’,‘வினாக் காலம்’,‘அக்னி திரவம்’ தொடர்பில் இன்னும் எத்தனை பாகங்கள் வெளிவர இருக்கின்றன?

இன்னும் இரண்டு பாகங்கள் வர இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து வரும் பதிப்புகள் முதலே வந்திருந்தால் நான் நாவலில் எழுதியதுபோல நடந்திருக்கும். ஆனால் இப்போது வரும்போது…?
நினைத்தபடி ஐந்து பாகங்களையும் அடுத்தடுத்து கொண்டுவர முடியவில்லை. ஐந்தாம் பாகத்தில் நயினாதீவில் கதை முடியும். குடும்பம் சிதறுவது… சேர்வது… நயினாதீவுக் குடும்பமொன்றின் செயல்பாடு மூலம்; அரசியலில் ஏற்பட்ட பின்புலங்கள் சொல்லப்படுகின்றன.


இலங்கை எழுத்தாளர்களின் கதைகளில் புத்த மத குருமார்கள் பங்கு அதிகமாக உள்ளதே?

இலங்கை அரசியலில் புத்தபிக்குகளின் பங்கு அதிகமானது. இருபது நூற்றாண்டுகளின் வரலாற்றுப் பின்புலத்தை இருபத்தொரு ஆண்டுகளில் வைத்து எழுதுவதால் முக்கியமான பகுதிகளில் பிக்குகளைக்கொண்டே ‘கனவுச் சிறை’யில் கதை நகர்த்திச் செல்லப்படுகிறது. இரண்டு பிக்குகளுக்குள் நடக்கும் சம்வாதம், தீய பிக்குகளின் நண்பர்களுடனான உரையாடல், இந்த நாவலுக்காகவே புனையப்பட்ட வளவை கங்கைத் துறவியின் வார்த்தைகளின் மூலம் புனர் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது.
இலங்கையின் உன்னதங்களும் வளங்களும் இந்த நாவலில் கண்டு சொல்லப்படுகிறது.


சரித்திரத்தை மறுஆய்வு செய்வதாகச் சொல்கிறீர்கள். அப்படியானால் உங்கள் நாவல் எந்த வகையைச் சார்ந்தது?

என் எழுத்து எதார்த்தமான எழுத்துவகையைச் சார்ந்ததுதான். எதார்த்த வகை எழுத்திலும் அதி உயர்ந்தபட்ச சாத்தியத்தை அடைவதற்கான முயற்சி இதில் கையாளப்பட்டுள்ளது. கோவை ஞானி மற்றும் சில மார்க்சிய இலக்கிய அறிஞர்கள் சொல்கிற நவீன எதார்த்தப் போக்கை நான் அடைய முயற்சி செய்ததாகவே நினைக்கிறேன்.


தமிழ் தேசிய போராட்டச் சூழலில் இலக்கியத்தின் பங்கு என்ன?

தமிழ்த் தேசியம் என்பது எது? இலங்கைத் தேசியம் ஊடாக தமிழ்த் தேசியம், இன அரசியல் ரீதியாக வற்புறுத்தப்படுவது தமிழ்த் தேசியம் அல்லது சிங்களத் தேசியம். தமிழ்த் தேசியம் வற்புறுத்தப்படும்போது சிங்களத் தேசியமும் வற்புறுத்தப்படும். தமிழ்த் தேசியம் என்பது பண்பாட்டு ரீதியாக வார்த்தெடுக்கப்படவேண்டும். அது அரசியலாக்கப்படும்போதுதான் அதற்கான எதிர்வினைகளும், வன்முறைகளும் உருவாகின்றன.


இலங்;கையில் ஏற்பட்ட நற்போக்கு இலக்கியவாதிகள் கைலாசபதியின் பெயரைக் குறிவைத்து தாக்குகிறார்களே? இது குறித்து உங்கள் கருத்து என்ன?

நற்போக்கு இலக்கியவாதம் என்பது எந்தக் காலத்திலும் இயக்கமாக இருந்ததில்லை. அமைப்பாக தொழிற்படவில்லை. முற்போக்கு வாதத்திற்கு எதிரான கோசமாக ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டதே நற்போக்கு இலக்கியவாதம். இந்தக் காலகட்டத்தில்தான் மு.தளையசிங்கத்தின் மெய்யுள் இலக்கிய வகை முன்வைக்கப்பட்டது. இன்று பின்நவீனத்துவம் கூறுகிற இலக்கியம் தன் உருவத்தை உடைத்து எழுகின்ற புதிய கட்டமைப்பைப்பற்றி தமிழில் முதலில் சொன்னவர் மு.தளையசிங்கம்தான். இந்த இலக்கிய வகைகூட பெரிதாக வளர்ந்திருக்கவில்லை. இந்த இரண்டுக்கும் எதிரான இயக்கமாக இது வைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

தேசிய இலக்கிய விழிப்புணர்ச்சி 56ல் ஏற்பட்டதிலிருந்து அழுத்தம் பெற்ற ஒரு சொல்தான் மண்வாசைன இலக்கியம் என்பது. அதுவரை பல தமிழ் எழுத்தாளர்களாலும் தமிழ்நாடு தாய்நாடென்றும், யாழ்ப்பாணம் சேய் நாடென்றும் கொள்ளப்பட்டுக்கொண்டிருந்த உண்மையையும் இந்த இடத்தில் நினைவுகூறவேண்டும்.

கல்கி, அகிலன் ஆகியோரது எழுத்து மாதிரிகளைக் கொண்டு சிறுகதை படைத்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். இந்த நிலையில்தான் மண்வாசைன – தேசிய வாதம் என்ற இலக்கிய கோசம் முன்வைக்கப்பட்டது.

அக் காலகட்டத்தில் மண்வாசைன அதீதமான அளவுக்கு அழுத்தம் பெற்றது என்பதும் உண்மைதான்.

ஆனால் அதுவேதான் ஈழத்திற்கான தனித்த இலக்கிய நெறியை வகுத்தது என்று சொல்லலாம். சுமார் இருபது வருடங்களாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இவ்வகையில் ஆற்றியது பெரும்தொண்டு என்றே நான் கருதுகிறேன்.

முற்போக்கு ஆதரவாளர்களாக இருந்த கா.சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோர் எதிரணியினரால் குறிவைத்து தாக்கப்படுவது அவர்கள் ஈழத் தமிழ் இலக்கியக் கொள்கையை முற்போக்கான வழியில் வகுத்தவர்கள் என்பதாலேயாகும்.


புலம்பெயர்ந்தோர் இலக்கியம் வளர்ச்சி அடைந்துள்ளதா?

மகாநாவல் எழுத முடியாது. காலம், பணம் இரண்டுக்குமே நேரம் சரியாக இருக்கும். புலம் பெயர்ந்தவர்களின் களமாக இருப்பது கவிதை, சிறுகதை இரண்டும்தான். அவைகூட தமிழகத்தில் இருந்து வெளிவருவதுபோல்தான் உள்ளது. அவர்கள் எழுதி வரும் கட்டுரைகளில்கூட வித்தியாசம் காட்ட முடியாதவர்களாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப பின்நவீனத்துவத்தை புரிந்துகொண்டு படைப்பைக் கொடுப்பதில்லை. காலப்போக்கில் ஈழத்து சிறுகதையும், தமிழகத்து சிறுகதையும் இனம்கண்டு கொள்ள முடியாமல் போய்விடும்போல் இருக்கிறது. படைப்பாளிகள் கலாமோகன், கி.பி.அரவிந்தன், N~hபாசக்தி,சக்கரவர்த்தி, நட்சத்திரன் செவ்விந்தியன் போன்றவர்கள் இந்த விபத்தைத் தடுக்கின்ற பிரக்ஞையோடு செயலாற்றவேண்டும்.


1956க்குப் பிறகு கைலாசபதியால் தூக்கிவிடப்பட்ட முற்போக்குக் கூட்டு 60-61இல் ஏறக்குறைய ஒரு இலக்கியச் சர்வாதிகாரமாகவே வளர்ந்தது என்கிறார்கள். சர்வாதிகாரம் என்ற சொல் உங்களுக்கு ஏற்புடையதுதானா?

இலங்கைமுற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருப்பவர்கள் கருத்துரீதியாக சங்கத்துடன் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். அவர்கள் அந்தக் கொள்கைக்கு இயைந்து நடப்பதுதான் சரியானது.அதனை சர்வாதிகாரம் என்று சொல்லமுடியாது. ஒரு அமைப்பு நிறுவன விதிகள் இல்லாமல் சீராக இயங்க முடியாது. தன்னுடைய தோற்ற நியாயத்திற்கு ஏற்ப கொள்கை வகுத்து இருக்கிறபோது அதை மீற நினைப்பவர்கள் அவர்களாக வெளியேறவேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார்கள்.


இலங்கையின் தற்போதைய வரலாற்றை எழுதிக்கொண்டிருக்கும்போது இடையில் ‘நிலாச் சமுத்திரம்’ என்ற வெண்ணிலைக்கு ஆதரவாக வாதிடும் நாவல் எழுதக் காரணம்?

‘நிலாச் சமுத்திரம்’ பதின்னான்கு வருடங்களாக என் மனதில் இருந்தது. முதலில் இதை சிறுகதையாகத்தான் எழுதவிருந்தேன். எழுதிக்;கொண்டு போகும்போது குறுநாவலாக வந்துவிட்டது.


உங்கள் நாவலில் அகதி வெளிநாடு செல்வது உடன்பாடில்லா விசயமாக எழுதப்பட்டுள்ளதே, ஏன்?

நாவல் விசாரணைக்குட்படுத்துவது பல விசயங்களை. அதிலொன்று அகதிப் பிரச்னை. யுத்தத்தின்; ஆரம்ப காலத்தில் வெளிநாடு செல்வது யுத்தத்திற்கு உதவுவதற்காகவே என்ற ஒரு அபிப்பிராயம் பகிரங்கமாகச் சொல்லப்பட்டது. ஆனால் இன, மொழி ரீதியான மோதல்கள் நடைபெறும் எந்த நாட்டிலிருந்தும் இவ்வளவு விகிதாசாரமான புலப்பெயர்வு நடந்தது இல்லை. இநதப் புலப்பெயர்வு அரசியல் காரணங்களுக்கு அப்பாற்பட்டதாகவே கொள்ளவேண்டியுள்ளது.

72ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன அரசியல் புரட்சி காரணமாகவும், பின்னால் பிரேமதாச ஆட்சிக்; காலத்தில் 87-89 காலகட்டத்தில் அதே காரணத்துக்காக மிகப் பெருமளவு சிங்கள இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அதேபோல் இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிகழ்ந்துள்ளது. பாகிஸ்தானிலுள்ள இந்துக்களுக்கும் அநீதி நடந்துள்ளது. பர்மாவிலும் ஜனநாயக விரோத ஆட்சியே நடைபெறுகிறது. ஏந்த நாட்டிலிருந்தும் மேற்குலகை நோக்கிய நகர்ச்சி இந்தளவு விகிதத்தில் நடைபெறவேயில்லை. ஈழத் தமிழர்களிடையே மட்டும்தான் பாரிய புலப்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இப் புலப்பெயர்வுக்குப் பின்னணியாக ஒரு தொடர்ச்சியான செயற்பாடு இருந்து வந்திருப்பதாக நான் கருதுகிறேன்.


‘இலக்குஷ பத்திரிகை நின்றுபோனதற்குக் காரணம் என்ன?

இந்தியா வந்ததுமே சொந்தப் பிரச்னையில் ஈடுபட்டிருந்ததால் வாசிப்பு மட்டுமே சாத்தியமாகவிருந்தது. 90க்கு மேலேதான் இலக்கியத்தில் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது. என்னுடை எழுத்தைப் பிரசுரிக்க அப்போதே பல களங்கள் இரந்தன. ஆனால் ஒரு தீவிரமான இலக்கிய சஞ்சிகையின் வெறுமையை அப்போதுதான் உணர்ந்தேன். பரவலாகி வரும் ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்த இந்தப் பத்திரிகை உதவும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. நிறைய நண்பர்கள் என் செயற்பாட்டை ஆதரித்தார்கள். அதன் காரணமாகத் தோன்றியதுதான் ‘இலக்கு’.

இலக்கிய நண்பர்கள் அறிமுகமானார்கள். என் படைப்பை இன்னும் இறுக்கமான மொழியில் எழுதவேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால் நான் அடைந்த பொருளாதார நட்டம் பெரிதாகத் தெரியவில்லை.

பொருளாதார நிலை காரணமாகவே ‘இலக்கு’ நின்றது.

000
-ஆர்.டி.பாஸ்கர்




Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்